செவ்வாய், 13 அக்டோபர், 2009

த.மு.மு.க வின் முயற்சியால் முறையாக வழக்கு பதிவு செய்யாத துணை ஆய்வாளர் மாற்றம்‏

திருவள்ளூர் மாவட்ட காவாங்கரை திருமால் நகரில் வசிப்பவர் சாஜகான் (30) இவர் கட்டிட கட்டும் தொழில் புரிபவர் 20/09/2009 அன்று அதை ஊரை செஅர்ந்த கதிரவன் வயது (33), குணா வயது (28) ஆகியோர் சாஜகான் இடம் இங்கு கட்டிடம் கட்டினால் எங்களுக்கு பத்து ஆயிரம் ருபாய் தர வேண்டும் என அவரை கத்தி காண்பித்து மிரட்டி ஒள்ளர்கள் ,அவர் ஒடனே புழல் காவல் நிலையத்தில் சாஜகான் புகார் கொடுத்துள்ளார் , பல முறை இவர் அவர்கள் இருக்கும் இடத்தை கூறியும் , மூன்று தினம் ஆகியும் காவல் நிலையத்தில் அவர்களை பிடிக்கவில்லை.
மனம் ஒடைந்த சாஜகான் த மு மு க வை நாடினர், மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது அலி, புழல் ஒன்றிய செயலாளர் பசீர் இடம் இது சம்மந்தமாக தகவலை தெரிவித்தார் , தகவல் அறிந்ததும் உடனே ஆய்வாளரை சந்தித்து இருவரும் பேசினார் வாக்குறுதி அளித்தபடியே அன்று இரவே கதிரவனை மட்டும் பிடித்து வெறும் 75 கேசை போட்டு அனுப்பி உள்ளார் , அதன் பிறகு மாவட்ட செயலாளர் ஹரூன் ரஷீத் தலைமையில் புறநகர் காவல் துறை ஆணையாளர் ஜாங்கிட் இடம் இது சம்மந்தமாக எடுத்து வைத்தார்கள் , பிறகு அவரது உத்தரவின் பேரில் கதிரவன் , குணா மீது கொலை வழக்கு பதிவு செய்து பின்னர் திருவெற்றியூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்க பட்டனர் .
முறையாக வழக்கு பதிவு செய்யாத துணை ஆய்வாளர் தமிழ் செல்வன் உடனடியாக மவுண்ட் ஆயுத படைக்கு மாற்றப்பட்டார், ஆய்வாளரிடம் துறை ரீதியாகவிசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக