புதன், 30 ஜூன், 2010

பெட்ரோல் - டீசல் விலையை கண்டித்து நாகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் - டீசல் விலையை கண்டித்து நாகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அத்தியாவசியான எரிபொருள்களான பெட்ரோல் - டீசல் கியாஸ் சிலிண்டர் அகியவற்றின் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகையிலும் மனிதநேய மக்கள் கட்சியின் நாகை தெற்கு மாவட்ட குழுவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை புதிய பஸ் நிலையத்தின் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செயது முபாரக் தலைமை தாங்கினார். பொருளாளர் முகம்மது சுலைமான், துணை செயலாளர்கள் முஜிபுர்ரஹ்மான், சாகுல்ஹமீது, வர்த்தகரணி செயலாளர் முகம்மது ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜபருல்லாஹ், பரகத் அலி, சதக்கத்துல்லாஹ், பஜ்லு முகம்மது, ஹமீது ஜெகபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன உரையை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.யூசுப் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முடிவில் நாகை நகர செயலாளர் முகம்மது ரபீக் நன்றி கூறினார்.





நன்றி - தினத்தந்தி.

திங்கள், 21 ஜூன், 2010

சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் பேரா.ஜவாஹில்லாஹ் வேண்டுகோள்.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் வாயிலாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோவையில் பேட்டி...

பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளை பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்தார்.அதே போல் 2008 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது தமிழக அரசு. ஆனால் அதில் முஸ்லிம் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.





இந்நிலையில் தமிழக சிறையில் கடந்த 13 ஆண்டுகளாக துயரங்களை அனுபவவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் வலுவாக நிலவுகின்ற இத்தருணத்தில் எதிர் வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.அதோ போல் இந்த செம்மொழி மாநாட்டியில் மேலும் ஒரு கோரிக்கை. கணினியில் யுனிகோட் தமிழ் எழுத்துருவை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்க வேண்டும்.





சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியில் ஆங்கிலம் மடடும் பயன்பாட்டியில் இருந்தது. தமிழ்மொழியை இணையத்தில் படிக்க முடியாதபடி பல விதமான தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் அச் சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்ட தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த உமர் தம்பி, அனைத்துக் கணினிகளிலும் பயன்படுத்தவதற்கு ஏற்ற பொதுவான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். இதற்கு யுனிகோட் (ஒருங்குறி) எழுத்துரு என்ற பெயர். இப்போது அந்த எழுத்துகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆயிரக்கணக்கான தமிழ் இணைதளங்கள் யுனிகோட் எமுத்துருக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.





இணையதளங்கள் எப்படி எல்லாம் தமிழை வளர்க்கின்றன என்பது குறித்து விவாதிப்பதற்காக உலகத் செம்மொழி இணைய மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டில் கணினித் தமிழை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டுக்கும் கணினித் தமிழ் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது யுனிகோட் தமிழ் எழுத்துருக்கள் தான்.




இந்த எழுத்துருவை உருவாக்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உமர் தம்பி நினைத்திருந்தால், தனது கண்டுபிடிப்பை வணிகரீதியாக பயன்படுத்தி இருக்கும் முடியும். ஆனால், அவர்கள் அவர் அவ்விதம் செய்யாமல், தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் யுனிகோட் தொழில் நுட்பத்தை சமுதாயத்துக்கு இலவசமாக வழங்கினர். கணினி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் தற்போது உயிருடன் இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு உரிய கெளரவம் செய்யப்பட வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம்.செம்மொழி தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார். தமுமுக மாநில தலைவர் ஜவாருஹிருல்லாஹ் அவர்கள்.

மாலை 7 மணியளவில் கோவை கோட்டை மேடு இக்பால் திடலில் மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாக, தமுமுக மாநில தலைவர் போராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள், விடுதலை கோரிக்கை என்ற தலைப்பிலும், தமுமுக மாநில பொது செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள், கோவை முஸ்லிம்கள் நேற்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமுமுக மேலாண்மை குழு உறுப்பினர் குணங்குடி அனிபா அவர்கள், விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், மற்றும் தமுமுக மாநில செயலாளர் இ.உம்மர் அவர்கள், தமுமுக மாநில துணைச் செயலாளர்கள், கோவை சாதிக், கோவை சைய்யது, கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர், டி.எம்.எஸ். அப்பாஸ், மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள், அப்பாஸ், ஷாஜகான், அதுபோல் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அகமது கபீர், பர்கத்துல்லாஹ், மமக நகர தலைவர் ரபிக், மற்றும் ஜபார், கவிஞர் ஹக், அக்பர் அலி, திருப்பூர் மாவட்ட தமுமுக தலைவர் யுசுப், ஊட்டி மாவட்ட தமுமுக தலைவர் சமது, ஈரோடு மாவட்ட தமுமுக தலைவர் பாருக், திருப்பூா மாவட்ட மமக தலைவர் ஹாலித்தீன், மற்றும் கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஊட்டி,உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,ஆகிய இடங்களில் இருந்து தமுமுக, மமக, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், இதில் 700க்கும் மேற்பட்ட பெண் உட்பட 3500 பேர்கள் கலந்து கொண்டார்கள்.


கோட்டை மேடு பகுதிகள் மாநாடு போல் காட்சி அளிதத்து. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பொதுகூட்டம் நடந்த இடம் இக்பால் திடல் 13 ஆண்டு காலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, சமுதாய அமைப்புகளுக்கோ, பொது கூட்டம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு பிறகு இதில் கடைசி பொதுகூட்டம் 1997 ஆம் ஆண்டு கோவையில் 19 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்ட போது முஸ்லிம் வணிகம் செய்யும் கடைகள் ஷோபா துணிகடை உட்பட பல முண்னணி நிறுவனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டது. இதில் பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக தமுமுக பல இடங்களில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது.

அப்போது இந்த இக்பால் திடலில் வைத்துதான் நல உதவிகள் வழங்கிய போது தான் அன்று கோவையில் குண்டு வெடித்தது. அன்று முதல் யாருக்கும் பொதுகூட்டம் அனுமதி இல்லை. அதோ தமுமுக 13 ஆண்டு பிறகு பொதுகூட்டத்திற்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இழந்த உரிமையை மீண்டும் மீட்போம் என்ற உரையுடன் பொதுகூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: புகைப்படம், கோவை தங்கப்பா

திங்கள், 14 ஜூன், 2010

இராமநாதபுரத்தில் தமுமுக வின் நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா அவர்களிடம் சில கேள்விகள்

இராமநாதபுரத்தில் "நீதி மன்றங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவைகளா?" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றபதற்காக முகவை வந்திருந்த தமுமுக-வின் நிறுவனரும் 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் குற்றமற்றவர் என சமீபத்தில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவருமான குணங்குடி ஹனீபா, முன்னதாக நமது அதிகாலை நிருபரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். தனது பதிலில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை பாஷா, முகம்மது அன்சாரி, தாஜீதீன் உள்ளிட்ட 60 முஸ்லிம் சிறைவாசிகளையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முருகன் உட்பட 600-க்கும் மேற்ப்பட்ட தண்டனை சிறைவாசிகளையும் பொதுமண்ணிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


கேள்வி : 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த, நிரபராதியான நீங்கள் தீவிரவாதியாக சித்தறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டிருந்தீர்கள். ஆனால் இந்திய பிரஜைகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து ஒரு இந்திய பிரஜையை கொன்றுவிட்டு, குழந்தைகளையும் கடத்தி பல வன்செயல்களில் ஈடுபட்ட, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா என்ற நபரை இந்திய பிரதமர் கை குழுக்கி ரத்தின கம்பள வரவேற்பளித்தது குறித்து தங்கள் கருத்து என்ன?

குணங்குடி ஹனிபா : அவங்க வந்து (இலங்கை அரசு) மத்திய அரசு சொல்வதையெல்லாம் கேட்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை மத்திய அரசு அரவனைத்து செல்கின்றார்கள். டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பதும் ரத்தின கம்பள வரவேற்பளிப்பதும் மனித நேயத்திற்கு எதிரான செயல். என்னுடைய வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளர். சட்டம் என்ன சொல்கின்றதோ அதுபோல் மத்திய அரசு நடக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.





கேள்வி : டக்ளஸ் தேவானந்தா என்பவர் இந்தியாவில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார், கொலை செய்துள்ளார், பல குழந்தைகளை கடத்தியுள்ளார் இன்னும் இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளிக்கு அடைக்களம் கொடுப்பவர்களும் குற்றவாளிகளே என இந்திய அரசியல் சாசனம் கூறுகின்றது. அந்த வகையில் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுக்கு ரத்தின கம்பள வரவேற்பளித்து அடைக்களம் கொடுத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியே. அதனால் இந்திய பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீங்கள் உங்கள் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வீர்களா?


குணங்குடி ஹனீபா : நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர், சபாநாயகர் ஆகிய இவர்களைக் கைது செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. சில சட்ட திட்டங்கள் உள்ளன. சட்டம் இது விடயத்தில் என்ன சொல்கின்றது என்பது குறித்து எனக்கு முழுமையாக தெரியாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களைக் கைது செய்ய வேண்டுமா என்பது பற்றிய உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்பதற்காக நமது மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த எனது வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். ஆகவே நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அப்படியே செயல்பட வேண்டும்.






கேள்வி : அனைவருக்கும் பொதுவானது என்று அறியப்படும் இந்திய அரசியல் சாசனம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதா அல்லது அதை அமல்படுத்தக்கூடிய அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இஸ்லாமியருக்கு எதிராக செயல்படுகின்றனவா? உங்கள் கருத்து என்ன?


குணங்குடி ஹனிபா : அரசியல் சாசனச் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அதை அறிமுகப்படுத்தும்போது தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார்கள், இந்தியாவில் பிறந்த ஒட்டுமொத்த இந்தியருக்கும் தேவையான கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளது, அதை நடைமுறைப்படுத்துவதில் ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் அதற்கு நாங்களோ, இந்த அரசியல் அமைப்பு சட்டமோ பொறுப்பாளி அல்ல. அதை நடைமுறைப்படுத்தக்கூடிய அயோக்கியர்கள்தான் அதற்கு பொறுப்பு, என டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அன்றைக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆக அதை நடைமுறைப்படுத்துவதில்தான் குறைகள் உள்ளதே தவிர அரசியில் அமைப்புச் சட்டத்தில் குறை இல்லை என்பது எனது கருத்து.






கேள்வி : சிறையில் உங்களோடு நளினி முருகன் போன்றவர்களும், பல மாற்று மதத்தவர்களும் இருந்துள்ளார்கள், சிறைத்துறையும் நளினி முருகன் போன்றவர்கள் மீதும் தனது அடக்குமுறையை ஏவியுள்ளது. ஆக, சிறைத்துறையும், அரசும் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் எதிரியாக உள்ளனவா அல்லது ஒட்டுமொத்த அப்பாவி சிறைவாசிகளுக்கும் எதிராக செயல்படுகிறதா?


குணங்குடி ஹனிபா : நடு முழுவதும் சிறைகளில் வாடுபவர்களில் பெரும்பகுதியினர் தாழத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்தான் இருந்து கொண்டுள்ளார்கள். அதாவது சுமார் 2 லட்சம் பேர் பொய்யாக புணையப்பட்ட வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இந்த 2 லட்சம் பேர்களில் இஸ்லாமியரும் உள்ளார்கள். ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஏனைய சமுதாயத்தினரும் உள்ளார்கள். ஆக இது மத்திய மாநில அரசில் இருப்பவர்கள் செய்யக்கூடிய அநீதி அல்ல மாறாக நிர்வாகங்களில் இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளின் அநீதியால் இது போன்ற பொய் வழக்குகள் புணையப்பட்டு அப்பாவிகள் பல வருட காலங்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். எதிர்காலங்களில் இது போல் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப்படவேண்டும் என்றால், ஐயா காமராஜர் அவர்கள் மீதே விருதுநகர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக பொய் வழக்கு போடப்பட்டது. கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் மீது பொய்யாக சதி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது போன்ற விடுதலைக்கு முன்னர் உள்ள நிலை நாட்டின் விடுதலைக்கு பின்னரும் தொடர்கின்றது. ஆக இது போன்று பொய் வழக்குகளில் அப்பாவிகள் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு சீரழிவது தடுக்கப்பட மத்திய மாநில அரசுகளும், நீதித்துறையும் இணைந்து கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.






கேள்வி : நீங்கள் தற்சமயம் எந்த அமைப்பில் அல்லது கட்சியில் உள்ளீர்கள்?

குணங்குடி ஹனீபா : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தனிமனித ஒழுக்கத்திலும், பொதுவாழ்விழும் நேர்மையானவராக உள்ளார். அவரை நான் தலைவராக ஏற்று மீண்டும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இணைந்து அதன் நிர்வாக குழு உறுப்பினராக எனது பணிகள் மற்றும் பொதுவாழ்க்கை தொடரும் என்பதையும் இந்த நேரத்தில் சமூக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.






அதன் பின்னர் கருத்து தெரிவித்த குணங்குடி ஹனிபா அவர்கள், தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாரோடு பேசும் வகையில் கட்டன தொலைபேசி வசதிகள் உள்ளதை பற்றியும் அதே போல் தமிழக சிறையிலும் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாரோடு பேசும் வகையில் கட்டன தொலைபேசிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், தற்போது சிறைத்துறை டிஜிபி-யாக உள்ள ஷ்யாம் சுந்தர் அவர்கள் சிறைவாசிகளின் மனித உரிமைகளுக்கு எதிராக உள்ளதாகவும், சிறைவாசிகளையும் சிறை பணியாளர்களையும் சிறிதும் மனிதாபிமானம் இன்றி நடத்துவதாகவும், பொங்கல், தீபாவளி, பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாரை சந்திப்பதற்கு வழங்கிய அனுமதியும் மறுத்து விட்டார் என்பதையம் தெரிவித்தார். சிறைத்துறை முன்னால் இயக்குனர் நடராஜ் அவர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்ப்ட்டு வந்த உள்ளொலி என்ற பத்திரிகையை ஷயாம் சுந்தர் வந்தவுடன் நிறுத்தியது பற்றியும், கனிமொழி அவர்களால் தமிழக சிறைகளில் நடத்தப்பட்டு வந்த சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ததும், பத்திரிகையாளர்களை அந்நிகழ்வில் பங்கெடுக்க இயலாதவாறு செய்தது உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களில் சிறைத்துறை டிஜிபி ஷ்யாம் சுந்தர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவரை தமிழக அரசு உடனடியாக மாற்றி புதிய அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.





செம்மொழி மாநாட்டையொட்டி கடந்த காலங்களில் செய்தது போன்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் கோவை பாஷா, கோவை முகம்மது அன்சாரி, தாஜீதீன் உட்பட 60 முஸ்லிம் சிறைவாசிகளையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சகோதரி நளினி முருகன் உள்ளிட்ட 600 க்கும் மேற்ப்பட்ட சிறைவாசிகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திட வேண்டும் என்றும், இதை டாக்டர் கலைஞர் மட்டுமே செய்ய இயலும் என்றும் மற்ற யாராலும் இதை செய்ய இயலாது என்றும் தெரிவித்தார். மேலும் கூறுகையில், கச்சத்தீவு என்பது இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது என்பது உலக வரலாறு. ஆனால் அந்த தீவை இலங்கைக்கு தரைவார்த்து கொடுத்தபோது போடப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்போது தங்கள் வலைகளை உலர வைக்கவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவை பயன்படுத்தலாம் என்பது முக்கிய ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை ராணுவம் நமது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்து வருகிறது. இதுவரை ராமேசுவரம், தங்கச்சிமடம், தொண்டி, மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களை சுட்டுக்கொன்று அவர்களின் படகுகளையும் வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தியுள்ளது இலங்கை ரானுவம். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும் நமது மீனவர்கள் சர்வதேச எல்லைவரை சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க உரிய நடவக்கை எடுக்க வேண்டும். சிங்கள ரானுவம் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும்போதும நமது காவல்துறை, கப்பல்படை நடவடிக்கை எடுத்து மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் தங்களை இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள தற்காப்பு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விழுப்புரம் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க நிகழ்வாகும். அதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், மத்திய மாநில அரசின் கவனத்திற்கு நமது ஆதங்கத்தை கொண்டு போவதற்கும் ஜனநாயக முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமேயொழிய வன்முறை என்பது தேவையற்றது. ஜனநாயக வழியே சிறந்ததாகும் என்றும் தெரிவித்தார். பேட்டியின்போது தமுமுக மாவட்ட தலைவர் சாதிக், மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் சலிமுல்லாகான், நகரச்செயலாளர் பரக்கத்துல்லா, நகரத் தலைவர் சுல்தான் ஆகியோர் உடனிருந்தனர்.



நன்றி - அதிகாலை
செம்மொழி மாநாட்டில் சிறைவாசிகள் விடுதலை வேண்டும் குணங்குடி ஹனீபா வேண்டுகோள்.

ராமநாதபுரம்: பாட்சா, அன்சாரி, நளினி, முருகன் உட்பட 600பேரை கோவை செம்மொழி மாநாட்டில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும், என த.மு.மு.க.,வின் மாநில நிர்வாகி குணங்குடி ஹனிபா கூறினார். ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக தவறான தகவல் அடிப்படையில் சிறையில் இருந்தேன். தமிழக சிறைகளில் நான்கு லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 3.5 லட்சம் பேர் விசாரணை கைதிகள். சிறிய வழக்குகளை விரைந்து முடித்து விசாரணை கைதிகளை விடுவிக்க வேண்டும்.





புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறைகளில் கைதிகள் வக்கீல் மற்றும் உறவினர்களிடம் பேசுவதற்காக டெலிபோன் வசதி உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் டெலிபோன் வசதி ஏற்படுத்த வேண்டும். பாட்சா, அன்சாரி, முருகன், நளினி போன்ற ஆயுள் கைதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை பொது மன்னிப்பு வழங்கி, தமிழக முதல்வர் கருணாநிதி கோவை செம்மொழி மாநாட்டில் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் மத்திய அரசு 10 சதவீதமும் தமிழக அரசில் ஐந்து சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கச்சத்தீவு மீட்கபட வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க மீனவர்கள் ஆயுதங்கள் கொண்டு செல்ல, அரசு அனுமதிக்க வேண்டும். விழுப்புரம் ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது. கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த வேண்டும். வன்முறை தேவையற்றது, இவ்வாறு அவர் கூறினார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் உடனிருந்தனர்.
இராமநாதபுரத்தில் த.மு.மு.க சார்பில் கல்வி உதவி


ராமநாதபுரம்: ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவ மாணவியர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா கல்வி உதவிகளை வழங்கினார்.
ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் செயலாளர் பரக்கத் துல்லா, செயலாளர் அப்துல் ரஹ்மான், உட்பட பலர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

கோவை தமுமுக நடத்தும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம்


தமுமுக ஜுபைல் கிளை நடத்திய தர்பியா முகாம்

அல்லாஹ்வின் பேரருளால் சஊதி அரேபியா தமுமுக கிழக்கு மண்டலம் - ஜுபைல் கிளை நடத்திய தர்பியா முகாம் பற்றிய செய்திகள்:

குறிப்பிட்டபடி ஜுன் 11, 2010 வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு இம்முகாம் எஸ்கேஎஸ் கேம்ப் பள்ளிவாசலில் துவங்கியது. தமுமுக சிறார் அணியைச்சேர்ந்த சகோதரர்கள் யஹ்யா மற்றும் ஸமீர் ஆகியோரின் கிராஅத்தோடு துவங்கிய இம்முகாமுக்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலாளர் நாகூர் சுல்தான் சிராஜுதீன் அவர்கள் தனக்கே உரியபாணியில் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். அடுத்ததாக அஷ்ஷேஹ். முஹம்மது ஷரீஃப் பாகவி அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். தர்பியாவின் அவசியத்தைப்பற்றி இவர் ஆற்றிய உரை கலந்துகொண்டோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்களுடன் அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 'ஆயத்துல் குர்ஸீ, ஸையதுல் இஸ்திஃபார்' ஆகியவற்றை பொருளுடன் மனனம் செய்யும் போட்டி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களும் ஆர்வத்துடம் மனனம் செய்து இறுதிப்போட்டிக்கு தயாரானார்கள். நிறைவாக மனனப்போட்டியில் பொருளுடன் மனனம் செய்து மூன்று சகோதரர்கள் முதல் மூன்று பரிசுகளை தட்டிச்சென்றனர். தொடர்ச்சியாக அஷ்ஷேஹ் ஷரீஃப் பாகவியின் துஆ அல் இபாதா என்ற தலைப்பில் ஜும்மா பேருரை நடைபெற்றது.

மதிய உணவுக்குப்பின் இரண்டாம் அமர்வு துவங்கியது. இதன் துவக்கமாக அஷ்ஷேக் அலாவுதீன் பாகவி அவர்களின் சிறப்புரை நடைபெற்றது. தஃவாபணியும் தமுமுகவும் என்ற தலைப்பில் தமுமுகவின் எண்ணற்ற தஃவா பணிகளை ஆதாரங்களோடு தனக்கே உரிய பாணியில் எடுத்தியம்பியது, கலந்துகொண்டோரின் உள்ளங்களை கட்டிப்போட்டது.

இதன்பின் நடந்த பேச்சுப்பயிற்சிப் பட்டறையை கிழக்கு மண்டல தமுமுக-வின் தர்பியாக்குழு பொருப்பாளர்களின் ஒருவரான சகோதரர் அப்துல் ஹலீம் (அப்கைக்)அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதில் ஜுபைல் கிளை சார்பாக 'உளத்தூய்மை, நேரம் குறிக்கப்பட்ட கடமை தெழுகை, நாவைப்பேணுதல் ஆகிய தலைப்புகளில் முறையே சகோதரர்கள் தமீம் அன்சாரி, அபூஸாலிஹ், நிஜாம் முஹைதீன் ஆகியோரின் பேச்சாற்றல் கலந்துகொண்டோரை மட்டுமல்லாது, பயிற்சியாளரையும் வியப்படைய வைத்தது.

அஸர் தொழுகை மற்றும் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, தமுமுக ஜுபைல் கிளையின் இணைச் செயலர்களில் ஒருரான சித்தார்கோட்டை சகோதரர் ஃபாசில்கான் அவர்கள் மூன்றாம் அமர்வை துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். சுருக்கமான சொற்களால் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது இவரது தலைமையுரை. இதன்பின் திக்ருகள், குர்ஆன் மனனப்பகுதி நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து அஷ்ஷேஹ் அக்ரம் நூரி அவர்கள் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக கலந்துகொண்ட அனைவருக்கும் தஃவா பயான்களின் குருந்தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. சகோதரர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றியுரையோடு இம்முஹாம் இறையருளாள் இனிதே நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாகவும், தொடர்ந்து இதுபோன்ற தர்பியா முஹாம்கள் நடைபெறவேண்டுமெனவும் விரும்புவதாக, கலந்துகொண்ட அனைவரும் கருத்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்....அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.....

புதன், 9 ஜூன், 2010

குணங்குடி ஹனீபா விடுதலைக்குப்பின் பங்குபெற்ற முதல் பொதுக்கூட்டம்.

தமுமுகவின் முன்னாள் தலைவர் குணங்குடி ஹனீபா விடுதலையாகி பேசும் முதல் பொதுக்கூட்டம் வட சென்னை மாவட்டம் தங்கச்சாலையில் நடைபெற்றது.விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்

இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக குணங்குடி ஹனீபா அவர்கள் ஏற்புரையாற்றினர். இந்தப் பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 8 ஜூன், 2010

சமுதாய மக்களுக்கு முத்துப்பேட்டை தமுமுக வின் அன்பான வேண்டுகோள்!


சமுதாய மக்களுக்கு முத்துப்பேட்டை தமுமுக வின் அன்பான வேண்டுகோள்!

ஞாயிறு, 6 ஜூன், 2010

சத்தியமங்களத்தில் 83வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு


ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் தமுமுகவின் சார்பில் 83&வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த மே 29 அன்று நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.
மமக துணை பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் கோவை உமர், தலைமைக் கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் ஆகியோர் உரையாற்றினர்.

கூத்தாநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமுமுக - கைது

கூத்தாநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமுமுக சார்பில் மறியலில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து லட்சுமாங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழத்தின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குதுபுதீன் தலைமை தாங்கினார்.இதில் நகர தலைவர் நெய்னா முகம்மது, செயலாளர் ஜகபர் சாதிக், பொருளாளர் அன்சாரி, மாவட்ட செயர்குழு உறுப்பினர் எம்.எம்.ஜகபர் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ஏற நடராஜன் சப்-இன்ஸ்பெக்ட்டர் ஆனந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தமுமுகவினரை கைது செய்தனர்.

இந்த போராட்டத்தால் திருவாரூர் - மன்னார்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நன்றி - தினத்தந்தி

புதன், 2 ஜூன், 2010


மனிதநேய மக்கள் கட்சி கூட்டம்
31.05.2010
அவிநாசி:

அவிநாசி நகர மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம், தேவராயன்பாளையத்தில் நடந்தது.நகர செயலாளர் அபுசாலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாலிதீன் முன்னிலை வகித்தார்.
நகர துணை செயலாளர் உமர்சாலி, த.மு.மு.க., நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் பேசினர்.


கூட்டத்தில், "அவிநாசி கடை வீதியில் 15 அடிக்கு கட்டடங்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. தற்சமயம், போக்குவரத்து நெரிசலை சரி செய்த காரணத்தாலும், இன்னும் சில மாதங்களில் புறவழிச்சாலை அமைய உள்ளதாலும், கட்டடங்கள் அகற்றம் என்பது தேவையற்றது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.


நகர பொருளாளர் ஜபருல்லாஹ் நன்றி கூறினார்.