புதன், 29 செப்டம்பர், 2010


அயோத்தி வழக்கு - முத்துப்பேட்டையிலும் போலிஸ் குவிப்பு! கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் 12 நகரங்களில் சிறப்பு போலீஸ் குவிப்பு; ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கு தடை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி நாடெங்கும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் ஏற்படலாம் என்று கருதப்படும் நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் 32 நகரங்களில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதனால் 16 இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 12 நகரங்கள் பதட்டமான பகுதி என்று கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று நடந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளோம்.

தமிழக அரசின் உத்தரவுப்படி பதட்டமான பகுதிகள் எது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வேலூர், ஓசூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் உள்ள முத்துப்பேட்டை என கண்டறியப்பட்டு கூடுதலாக பாதுகாப்புக் கென்று துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு அதிரடிப் டை போலீசார் டி.ஜி.பி. மேற்பார்வையில் இயங்கி வந்தவர்கள் பதட்டமான பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்பு படையில் உள்ள 10 ஆயிரம் போலீசார் நேற்றே அனுப்பப்பட்டுள்ளனர். இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் பதட்டமான பகுதிகள் எவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ்படை தயாராக வைக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சன்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஒழுங்குபடுத்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பதட்டம் குறையும் வரை இந்த சட்டம் அமலில் இருக்கலாம். இதுபோல இன்றும், நாளையும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடை பெறவில்லை. பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அது போல இன்றும், நாளையும் போலீசாருக்கு பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத வழிபாட்டை சேர்ந்தவர்களும் இந்த சூழ்நிலையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பதட்டமான நகரங்களில் கோவை நகரம் முக்கிய மானது என்று தெரிய வந்துள்ளது. அங்கு எங்களது சிறப்பு படை பணியில் இருக்கும். தேவைப்பட்டால் டெல்லியில் இருந்து துணை ராணுவத்தை வரவழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- மாலை மலர் --

செவ்வாய், 28 செப்டம்பர், 2010


தமுமுகவின் 16 ஆம் ஆண்டும்.. ! நான்காவது தேர்தல் பொதுக்குழுவும் !

சமுதாய கண்மனிகளே... அஸ்ஸலாமு அலைக்கும்...

பொங்கி வழியும் அருவி ஒன்று ஓடையாக மாறி, நதியாக உருவெடுத்து, பயணம் செய்யுமிடத்தையெல்லாம் பசுமையாக்கி; தன் சேவைகளை சுயநலமின்றி வழங்கும். மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், இதர உயிரினங்கள் என அனைத்தும் இதன் வழியாக பலன்களை பெறும். வற்றாத ஒரு நதிபோலத்தான் தமுமுகவின் பணிகள் பொதுமக்களுக்கு சென்றடைந்துக் கொண்டிருக்கிறது. 1995 -ல் இழந்த உரிமைகளை மீட்போம்; இருக்கும் உரிமைகளை காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து களத்துக்கு வருகை தந்த தமுமுக மிக குறுகிய காலத்தில் வளர்ச்சியையும், எழுச்சியையும் பெற்றது.

அன்றைய முஸ்லிம் பொது தளத்தில் அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், பழனிபாபா ஆகியோரைத் தாண்டி வெகுமக்கள் இயக்கத்தை உருவாக்க முடியுமா? உருவாக்கினாலும் அதை வெற்றிகரமாக வழி நடத்த முடியுமா? என்ற நிலையில்; அணைகளை உடைக்கும் காட்டாற்று வௌ;ளமாய் சமுதாய மக்கள் தமுமுகவின் பின்னால் அணி திரண்டது வரலாற்று வியப்பாகும்.

புதிய பாதை

பல்வேறு ஆற்றல்களை தன்னகத்தே பெற்றிருந்த அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், ஷஹீத் பழனிபாபா ஆகியோரின் சேவைகளை, ஆற்றலை அர்ப்பணிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னால் நிகழ்ந்த அரசியல் போக்குகளையும், சமுதாயத்தில் ஏற்பட்ட கோப அலைகளையும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. அல்லது அதற்கேற்றவாறு தங்களது அரசியலை மாற்றிக் கொள்ளவில்லை; இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைதான் தமுமுக மிகுந்த நுட்பத்தோடு நிரப்பியது.

ஜனநாயகமும், அதன் வழியிலான அதிகாரமும், அதை நோக்கிய வெகுமக்களின் போராட்டங்களுமே நவீன அரசியல் ரூ சமூக அமைப்பில் சரியான பாதை என்பதை சுட்டிக்காட்டி; தமுமுக சமுதாயத்திற்கு வகுப்பெடுத்தது. இதை சமுதாயம் ஏற்றதால்தான் தமுமுகவின் பலம் பன்மடங்கு பெருகியது.இதை இந்துத்துவ சக்திகள் எதிர்பார்க்கவில்லை; அரசியல் கட்சிகள் விரும்பவே இல்லை. சமுதாய துரோகிகளால் அங்கீகரிக்கவே முடியவில்லை. ஆம்! சிங்கங்கள் உலா வருவதை கண்டு சிறு நரிகளுக்கு பொறுக்கவில்லை. ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கு யானை பலம் கிடைத்ததாக கருதி துள்ளி எழும்பியது. தமுமுகவுக்கு அரணாக நின்றது.

எதிர் நீச்சல்

அன்றைக்கும் முதல்வராக இருந்த கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சியை தீவிரவாதம் என்று கூறி அழிக்கத் துடித்தார். அடக்குமுறைகளை ஏவினார். கடுமை காட்டினார்.அடக்குமுறைகள்தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு படிக்கட்டுகளாக மாறின. நெருக்கடிகள்தான் தமுமுகவினருக்கு கைத்தடிகளாக உதவின. இறைவனின் பேரருளால் எவராலும் ஒடுக்க முடியாத பேரியக்கமாய் தமுமுக பாய்ச்சல் காட்டியது.பொதுக் கூட்டங்கள் மக்கள் திரளால் நிரம்பி வழிந்தன. போராட்டங்களில் பொதுமக்களின் கோபம் பொங்கியது. ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் ஆர்ப்பரித்தனர். வரலாறு மாறியது.

சமுதாயம் தலை நிமிர்ந்தது. தமிழக அரசியல் கட்சிகள் திரும்பி பார்த்தன. காவல் துறை திகைத்தது. உளவுத்துறை அடங்கியது. நெருப்புக்கு இன்னுமா உறக்கம்? எரிமலை எப்படி பொறுக்கும்? என்ற வெகுஜன வசனங்கள் இங்கேயும் கேட்டது!உருட்டி மிரட்டிய உளவுத்துறை, வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம் என்றது. அராஜகம் செய்த காவல்துறை, எதுவாக இருந்தாலும் பேசித் தீர்க்கலாம் என்றது. அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகள் நாங்களே உங்களைத் தேடி வருகிறோம் என்றன! அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை ஏற்கிறோம் என இறங்கி வந்தனர். ஏமாற்றங்களையே சந்தித்த சமுதாயம், மாற்றங்களை கண்டு மகிழ்ந்தது.

சாதனைகளும் - சரித்திரங்களும்

சொந்த சமுதாயத்தில் பீதியூட்டியவர்கள், பொறாமைக் காட்டியவர்கள், அழிக்க நினைத்தவர்கள் தமுமுகவில் நாங்களும் இணைகிறோம் என்றார்கள். இன்று அவர்களெல்லாம் மாவட்ட பொறுப்புகளில் கூட அங்கம் வகிக்கிறார்கள். ஆம், தமுமுக எதிர்ப்புகளை முறியடித்தது. எதிரிகளை வசப்படுத்தியது. அவர்களை நெறிபடுத்தியது.சாதனைகளுக்கு மத்தியிலும் சில சோதனைகள்! வெற்றிகளுக்கு மத்தியிலும் சில தோல்விகள் என்ற போதிலும் களங்களை இழக்கவில்லை. போராட்டங்கள் நிற்கவில்லை. ஆட்சிகள் மாறின. கூட்டணிகள் மாறின. ஆனால் நமது கொள்கைகள் மாறவில்லை. போர்குணம் இழக்கவில்லை. அதற்காகவே இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை என்ற மற்றொரு களம் உணர்வூட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த வரலாற்று வெற்றியை ஈட்டியதும் முழு சமுதாயத்தின் ஆதரவையும் பெற்ற பேரியக்கமாய் பரிணாமித்தது தமுமுக.சென்னை வாழ்வுரிமை மாநாடு (1999), தஞ்சை பேரணி (2004) டெல்லி பேரணி (2007) இவையெல்லாம் தமுமுகவின் மணிமகுடங்கள்.உள்ளுர் பிரச்சனைகளுக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் நடத்திய வட்டார ரீதியிலான போராட்டங்கள் கிளைகளை வலிமைப்படுத்தின. ஆம்புலன்ஸ் சேவைகள், ரத்ததான ரூ மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், மனித நேய சேவைகள், வட்டியில்லா கடன் வழங்குதல் என பட்டியலிட முடியாத பணிகள் முஸ்லிம்களை தாண்டி, இந்து, கிருத்தவ, தலித் இன மக்களையும் வென்றெடுத்தன.

அரசியல் தலைவர்கள், முற்போக்கு சக்திகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக சேவர்கள் தமுமுகவின் பணிகளை பாராட்டினர். ஊக்கப்படுத்தினர். சுனாமியில் தமுமுக தொண்டர்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றிய சேவைகளை தமிழகமே புகழ்ந்தது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டினார். ஐநா சபைக்கும் சென்றது தமுமுக!

காலத்தின் தேவை

எந்த ஒரு தலைமையும் கால மாற்றத்தை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ற வியூகங்களை வகுக்கும் வல்லமை கொண்டதாய் இருக்க வேண்டும். புதிய தேவைகளை பூர்த்தி செய்யும் தொலை நோக்கு பார்வைகள் வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற, கொள்கைகளை இழக்காமல், புதிய பாதைகளை உருவாக்க வேண்டும். அதை தமுமுக செய்ததுஆகவேதான், அந்த பேரியக்கத்தின் புதல்வனாய்; கால மாறறத்தின் அரசியல் தேவைகளை உணர்ந்து மனித நேய மக்கள் கட்சி உருவாக்கம் பெற்றது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன் வைத்து அரசியலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அனைத்து தரப்பு மக்களின் நலன்களை மனிதநேயத்தோடு முன்னெடுக்கவும் தொடங்கப்பட்ட இக்கட்சி இன்று தமிழக அரசியலில் புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பொறுப்புகளுக்கு போட்டிகள் நிலவுகின்றன. (எல்லாப் புகழும் இறைவனுக்கே)இந்நிலையில் தான் 2011 ரூல் தமிழகத்தில் முன்னோடி இயக்கம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையிலும், அமைப்பு சட்டவிதிகளின்படியும், ஊழியர்களை புத்துணர்விக்கும் நோக்கோடும் தமுமுகவின் அமைப்பு தேர்தல் நடைபெற தொடங்கியிருக்கிறது.

கோவை (2001) புதுக்கோட்டை (2004) பாபநாசம் (2007) ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பொதுக்குழுவை தொடர்ந்து நான்காவது தேர்தல் பொதுக்குழு சென்னையில் நடைபெறவிருக்கிறது.நாம் அறிந்தவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கான வெகுமக்கள் இயக்கம் ஒன்று கிளை, வட்டம், நகரம், ஒன்றியம், மாநகரம், மாவட்டம், தலைமை என ஒழுங்குப்படுத்தப்பட்ட விதிகளோடு, நேர்மையான முறையோடு, அதற்கேற்ற பொதுக்குழு அமைப்போடு தேர்தல் நடத்தப்பட்டு; அதன் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது தமுமுகவில் மட்டும்தான் என்பதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது. உதடுகள் துடிக்கிறது.

இவ்வளவு உயரத்தில்; நெருங்க முடியாத சிகரத்தில் நாம் நிற்பதற்கு என்ன காரணம்? உளத்தூய்மைதான். எல்லாம் வல்ல இறைவன் நம்மை இயக்குகிறான் என்ற நம்பிக்கையும், நாம் செய்து வரும் பணிகளுக்கு, நம் மரணத்திற்கு பின்னால் மாபெரும் இறைவன் அதற்கு பரிசளிப்பான் என்ற அசைக்க முடியாத உறுதியும்தான் நமது வெற்றிகளுக்கு காரணங்களாகும்.

எச்சரிக்கையும் - பொறுப்புணர்வும்

16 ஆம் ஆண்டில் நான்காவது தேர்தல் பொதுக்குழுவை தமுமுகவும், முதல் பொதுக்குழுவை மமகவும் சந்திக்கும் இத்தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வேடந்தாங்கலுக்கு சீசன் பறவைகள் வருவது போல் நிறையபேர் வருவார்கள். எங்களையும் உறுப்பினராக்குங்கள் என்பார்கள். பொறுப்புகளை தாருங்கள் என இளிப்பார்கள். இங்குதான், இப்போதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.குடிகாரர்கள், வட்டி ரூ விபச்சாரம் செய்பவர்கள், சமூகம் முகம் சுழிக்கும் தவறுகளை செய்பவர்கள் நமது கோட்டைக்குள் நுழைந்து விடக்கூடாது. அவர்களை அனுமதித்து விடக்கூடாது.

நமக்கு கூட்டம் வேண்டும். மேலும் பலம் பெருக்க வேண்டும் என்ற ஆவலில் நெறியற்றவர்களை நாம் நுழையவிடக்கூடாது. தமுமுகவை பொறுத்தவரை மார்க்கம் வரையறுக்கும் பண்புகளை மீறாதவர்கள் தேவை.மமகவை பொறுத்தவரை பல்வேறு சமூகங்களும் நம்மை தேடி வரும் நிலையில் அனைவருக்கும் பொது ஒழுக்கத்தை அளவுகோளாக வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் நமக்கு தேவை. அரசியல் கட்சிதானே; யார் வேண்டுமானாலும் வரட்டுமே.... என நினைக்கக் கூடாது. அப்படி ஊசலாட்டத்திற்கு உள்ளாகும் போதுதான் நாம் நீர்த்துப் போகத் தொடங்குவோம். நிலைகுலைய தொடங்குவோம்.எண்ணிக்கைகள் மட்டுமே வெற்றிகளைத் தராது. உறுதியான சிந்தனைகளும், நிலை தடுமாறாத செயல்பாடுகளும், மனிதநேய அணுகுமுறைகளுமே வெற்றிகளுக்கான நிரந்தர களங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

தமுமுகவுக்கு பொறுத்தமானவர்கள் யார்? மமகவுக்கு பொறுத்தமானவர்கள் யார்? என்பதை முடிவு செய்து அவர்களை களத்துக்கு தயார் செய்வதுதான் இத்தேர்தலின் நோக்கம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.பாசத்தில் இரண்டும் ஒரு பூச்செடியின் இரண்டு பூக்கள். அதே நேரத்தில் களத்தில் கடற்படைக்கு சில தளபதிகளும், தரைப்படைக்கு சில தளபதிகள் திறமையாளர்களாக இருப்பார்கள். போரின் இலக்கு ஒன்றுதான் என்றாலும் களங்கள் வெவ்வேறானவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தகுதியானவர்கள் யார்?

அதே சமயம் பழையவர்களும் நீண்ட கால உறுப்பினர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல! மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை என்றும் பொருள் கொள்ளக் கூடாது.பழையவர்களில் செயல்படக் கூடியவர்களும், தகுதியான சிந்தனையாளர்களும், புதியவர்களில் நல்லவர்களும், நேர்மையானவர்களும் கொண்ட கதம்ப மாலையாக நிர்வாகங்கள் அமைய வேண்டும் என்பதே இதன் உள்அர்த்தமாகும். எந்த நிலையிலும் கொள்கை ரூ கோட்பாடுகளை ஏற்காதவர்களுக்கு இங்கு இடமில்லை அவர்களில் பழையவர்கள் ரூ புதியவர்கள் என்று பேதமில்லை.

லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையில் 16 ஆம் ஆண்டில் நுழைந்திருக்கிறோம். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சுகத்தையும், நலன்களையும், தொழில்களையும், சொந்த காசுகளையும் இழந்து எண்ணற்ற தியாகங்களை செய்து வளர்த்த இயக்கம் இது! இப்போது அரசியல் வெற்றிகளை குறி வைத்து நகரும் நேரத்தில் பழையவர்கள் என்ற போர்வையில் நெறி மீறியவர்களும், புதியவர்கள் என்ற போர்வையில் சீசன் பறவைகளும், பச்சோந்திகளும் நுழைந்துவிடக்கூடாது.

ரத்தத்தாலும், வியர்வையாலும், கண்ணீராலும் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் வௌ;ளிவிழாவையும், பொன் விழாவையும் இடையில் பல வெற்றி விழாக்களையும் காண வேண்டுமெனில் கொள்கை, கோட்பாடுகள், நெறிமுறைகள், விதிமுறைகளை மீறாத நிர்வாக அமைப்பு அவசியமாகும். இதை எல்லோரும் உணர வேண்டும்.நிர்வாகத் தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடைபெறும் வகையில் தமுமுகவின் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தலைவர்கள் கூட தலையிட முடியாது. தேர்தல் அதிகாரிகள் தேர்தலை மட்டுமே நடத்துவார்கள். நீங்கள்தான் உங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். தவறானவர்களும், நெறியற்றவர்களும், சுயநலவாதிகளும் பொறுப்புகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தி தங்களின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாபெரும் சமுதாயக் கடமையில் கவனம் தேவை என்பதை உரிமையோடு எச்சரிக்கிறேன்.

நன்றி வஸ்ஸலாம்...!

அன்புடன் என்றும் உங்கள் தொண்டன்

பேரா.ஜவாஹிருல்லாஹ்.


திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்

ஜமாஅத் தலைவர் படுகொலை! பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு!!
திருவிடச்சேரியில் நடந்தது என்ன?

அனைத்து முஸ்லிம்களுக்கும் உயிரினும் மேலான நெறிதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம். உயிரினும் மேலான இந்நெறியை உயிர்களைப் பறிப்பதற்கான போர்வையாக்கினால் அது எவ்வளவு கொடுமை? அதுவும் புனித ரமலான் மாதத்தில் என்றால் எவ்வளவு வேதனை?

அதுவும் இறை இல்லமான பள்ளிவாசலில் என்றால் எவ்வளவு அவலம்?

மார்க்கம் என்பதை மூர்க்கம் என்று புரிந்துக்கொண்ட சில மூளைச் சலவைக்களான கும்பலுக்கும், திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாஅத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மோதலாகி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி பலர் படுகாயம் அடைவதில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தின் சுருக்கம் இதுதான். திருவிடச்சேரி ஜமாஅத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே.) அமைப்பினருக்கும் மோதல் இருந்து ரமலானில் இரவுத் தொழுகையை டி.என்.டி.ஜே. அமைப்பினர் ரோஸ் பாப்பா என்பவரின் வீட்டில் நடத்தி வந்துள்ளனர். ரோஸ் பாப்பா என்பவருக்கும், அவரது எதிர் வீட்டுக்கும் தகராறு இருந¢து வந்துள்ளது. இந்த வாய்த்தகராறில் ரோஸ் பாப்பாக வீட்டிற்குத் தொழுகை நடத்திவந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிலர் இவருக்கு ஆதர வாக இறங்கியுள்ளனர். இந்த பிரச்சினையின் போது ஊர் ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் சமாதானப்படுத்தியுள்ளார்.

தகராறுக்குக் காரணம்:-

ரோஸ் பாப்பா வீட்டில் தொழுகை நடத்தும் அமைப்பினர் இரவு வெகுநேரம் தங்களின் ஆஸ்தான தலைவருமானவரின் சிறப்புப் பேருரைகளையும்,சிலநேரம் குர்ஆனையும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வைத்துள்ளனர். ஜபருல்லாவின் சகோதரியின் குழந்தையும் (இறந்த ஹாஜி முஹம்மதுவின் குழந்தை), சகோ தரரின் ஒரு குழந்தையும் மன நிலை பாதிப்படைந்து சிகிச் சைப் பெற்று வருகின்றனர். மனநலமற்ற குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஒலி பெருக்கியின் சப்தத்தைக் குறைக்கச் சொன்னதும், இஸ்லாத்தைத் தூயவடிவில் பின்பற்றுவதாக நம்புவோருக்கு வெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

5.9.2010 அன்று மாலை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தோரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்திய ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில், ‘‘நோன்பு துறக்கும் நேரமாகிவிட்டது, பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர ஆதரவாளரான குத்புதீனை, தனது உறவுக்காரப் பையன் என்ற உரிமையில் கொஞ்சம் குரலுயர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.

இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பெருந்தன்மையாகப் பிறருக்கு மட்டும் விட்டுக் கொடுத்து விட்டு, இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுகாமல் தங்களது கோபதாபங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். குத்புதீன் தனது மைத்துனரும், திருமங்கலக்குடி பகுதியில் ஆதிகேசவன் போன்ற ஆசாமிகள் துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்பவருமான ஹஜ் முஹம்மது என்பவருக்கு விவரத்தைக் கூறி, ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

கலாட்டா:-

திருமங்கலக்குடியிலிருந்து பல வாகனங்களில் வன்முறைக் கும்பல் வந்துள்ளது. வாகனங்கள் ஊருக்கு வெளியே தப்பியோட வசதியாக நிறுத்தப்பட்டு, ஒரு கார் மட்டும் பள்ளிவாசல் அருகில் வந்துள்ளது. தவ்ஹீத் கொள்கைக்கு உரம் சேர்க்க வருவது போல் அதிரடியாக நுழைந்துள்ளனர். இவர்கள் ததஜ அமைப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும், தீவிர ஆதரவாளர்கள் என்பதும் அப்போது மக்களால் உறுதியுடன் கூறப்படுகிறது. 25 ரவுடிகள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் சென்ற ஹஜ் முஹம்மது, தொழுதுவிட்டு வெளியே வந்த ஊர்த் தலைவர் முகமது இஸ்மாயிலை ஓங்கி முகத்தில் குத்தியுள்ளார். ததஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அதற்கு முன்பாக ஜமாத்தரப்பினர் எந்த முன் ஆயத்தத்திலும் இல்லை என்பதை அவ்வூர் மக்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஜமாத் சார்பில் அடியாட்களோ ஆயுதங்களோ ஏற்பாடு செய்யாமல் சாதாரனமாகவே இருந்திருக்கிறார்கள். ததஜ தரப்பில் சொல்வது போல் ஜமாத் சார்பில் அதிரடி தாக்குதல்கள் நடந்து அதன்பிறகு ததஜ ஆதரவாளரான ஹாஜி முஹம்மது தரப்பினர் தற்காப்புக்காக சுட்டனர் என விளக்கம் அளித்திருப்பதும் மிகப்பெரிய பொய் என்பதை அவ்வூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஜமாத் தலைவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.

அதன் பிறகு தொடர்ந்து வன்முறை கும்பலால் பள்ளி வாசல் ‘நகரா’ கிழிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் உடனே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், வெளியூர் ரவுடிகள் பள்ளிவாசலுக்குள் வந்து தகராறு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஊர்மக்கள் பள்ளிவாசலை நோக்கி வர, இந்த கும்பலில் ஒருவர், ‘‘தலைவரை அடித்ததை மட்டும் மைக்கில் சொல்றியே, இன்னும் நிறைய நடக்கப் போவுது. அதையும் சேர்த்து சொல்’’ என்று கூறியுள்ளார். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளையே ஊர் மக்கள் நம்மிடம் கூறினார்கள். இவர்கள் மிகப்பெரிய திட்டமிடலோடு வந்தனர் என ஊர்மக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதற்கு ஆதாரம் தான் இது என மக்கள் சொல்கிறார்கள். மேலும் துப்பாக்கியுடன் வந்ததில் இருந்தே இவர்கள் தான் வலிய வம்புக்கு வந்ததற்கான ஆதாரணம் என பலரும் கூறுகின்றனர். உடனடியாக ஊர் மக்கள் திரண்டதும் ததஜவுக்காக வந்த ஹாஜி முஹம்மது தலைமையிலான வன்முறை கும்பல் பள்ளிவாசலுக் குள் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து வெளியே வந்து நின்றுகொண்டது. (தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க வசதியாக).

தாக்கிய அந்த நேரத்தில் சராமாரி துப்பாக்கிச் சூடு:-

இந்நிலையில் ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில் மகன் சபீருதீன் (18), ‘‘என் அத்தாவை யாருடா அடிச்சது-?’’ என்று கேட்டு, ரவுடிகள் நின்ற பக்கம் சென்றுள்ளார். மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தில் முகமது இஸ்மாயிலும் சென்று ரவுடிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் குத்புதீனுக்கு ஆதரவாக வந்த அடியாள் படைத் தலைவன் ஹஜ் முஹம்மது, வெறி தலைக்கேறி, முகமது இஸ்மாயிலை சுட்டுக்கொன்றான். அதைத் தடுக்க வந்த ஹாஜி முஹம்மதுவையும் சுட்டுக் கொன்றான். இவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர் தொழுது வந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர். ஜபருல்லாவின் மைத்துனர்.

ஊர் மக்களையும் சரமாரியாக சுட்டப் படி இந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. ஊருக்குள் வந்த காரும், ரவி என்ற ரவுடியும் மக்களிடம் பிடிபட்டனர். வன்முறைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அப்பாவிகள்:-

வன்முறைக் கும்பல் தலைவன் ஹஜி முஹம்மது சுட்டதில் நசீர் முஹம்மது (30), பால்ராஜ் (55) ஹாஜாமைதீன் (45), ராமதாஸ் (45) சந்தியாகு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு துளியும் சம்பந்த மில்லாமல் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இவர்கள் எப் படி இந்த இடத்தில் வந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருவிடைச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்து மற்றும் தலித் மக்களுக்கான பஜார் என்பது திருவிடைச்சேரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ததஜவின் முக்கிய தலைவர் பி.ஜே. கூறியிருப்பது போல் சுடப்பட்ட இந்துக்கள் ரவுடிகளோ, ஜமாத்தாரால் திரட்டி வரப்பட்ட அடியாட்களோ அல்ல. முஸ்லிம் களோடு நேசமாக பழகிய உழைக்கும் அப்பாவிகள். இவர்களுக்கு ததஜ பற்றியும் தெரியாது. ஜமாத்தாரையும் புரியாது என ஊர் மக்கள் கூறினார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் மக்கள் அங்கு குவிந்தனர். தமுமுகவின் அவசர ஊர்திகளில் காயம்பட்டவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச் சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக ஆம்புலன்சும் தொண்டர் களும் உதவியதைப் பார்த்த பத்திரிகை நிருபர்கள் சிலர், தமுமுகவினர் தாக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர்.

தமுமுக நிர்வாகிகளும் அவசர ஊர்திகளும் சம்பவம் நடந்தபிறகு, பாதிக்கப் பட்டோருக்கு மருத்துவ உதவி களைச் செய்வதற்காகவும், மேலும் வன்முறை பரவி விடா மல் தடுப்பதற்குமே அங்கு சென்றுள்ளனர்.

துப்பாக்கி ஏது ?

கொலைக் கும்பல் தலைவன் ஹஜ் முஹம்மது, சிதம்பரத்தில் அந்த இயக்கத்தினரின் துணை யோடு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ஹஜ் முஹம்மது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது மேலும் இரண்டு கள்ள துப்பாக்கிகள் கைப் பற்றப்பட்டன. லண்டனில் தயாரான, 150 ரவுண்டு சுடக் கூடிய துப்பாக்கியும் அதில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இத்த கைய பயங்கர ஆயுதங்களை ஓர் ஆசாமிவைத்திருப்பது போலீசாரை அதிரவைத் துள்ளது.

கொள்கைக்கு பின்னடைவு:-

இந்த பயங்கரவாதிகளின் செயல் திருவிடச்சேரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பது காலத்தின் மிகமிகக் கட்டாயமாகிவிட்ட சூழ் நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத் என உருவெடுத்துவிட்ட இவர்களின் செயல் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்குப் பெரும் சோத னையை உண்டாக்கி விட்டது.

இந்நிலையில் இத்தகைய வன் முறைப் போக்கைக் கண்டிக்க வேண்டிய அதன் தலைமை தற்காப்புக்காகத்தான் ஹஜ் முஹம்மது சுட்டார், திருவிடச்சேரி ஜமாத்தார்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் தாக்க வந்தார்கள், பள்ளிவாசலுக்கு முஸ்லிமல்லாத ரவுடிகளை வைத்திருந்தனர் என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேசி, வன்முறைச் செயலை நியாயப்படுத்தி வருவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் அவ்வூர்மக்கள். நடந்து முடிந்த இந்த அட்டூ ழியம் குறித்து தமிழகம் முழு வதும் உள்ள ஜமஅத்தார்கள், உலமாக்கள் கருத்து கூறுவது என்ன வெனில் சமீப காலமாக ஆளும் திமுகவோடு ததஜவின் தலைமை நெருக்கமாக இருக்கிற காரணத்தால் கொலைக்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை இருக்காது என சந்தேகம் கொள்கின்றனர்.

சிந்திக்க வேண்டும்:-

ஏகத்துவ பிரச்சாரத்தில் கேரள முஜாஹிதீன்களும், அகில இந்திய அளவில் அஹ்லே ஹதீஸ் அமைப் பினரும், தமிழக அள வில் ஜாக், ஐ.பி.பி. உள்ளிட்ட அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்கும் மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் கூட நட்புபாராட்டும் அளவுக்குத் தான் அவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக்கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம் களையும் எதிரிகளாக கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவி தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழகம் முஸ்லிம் சமு தாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கு வானாக. இதைபோல ஜமாஅத்தினரும் தங்கள் தரப்பு தவறுகள் குறித்து கவலையோடு சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால் வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கும் அளவுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வாசிக்கும் ததஜ சகோதரர்கள் யார் மீதும் கோபப்படாமல் நடைபெற்ற கொடூரங்கள் நியாயம் தானா---? என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைவர் நேரில் ஆறுதல்:-

திருவிடச்சேரியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அறிந்த தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி மற்றும் தஞ்சை (வடக்கு), திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் 7.9.2010 அன்று திருவிடச்சேரிக்குச் சென்றனர். தமுமுக தலைவரின் வருகையை முன்னதாக அறிந்த ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நிர்வாகக்குழுவினர், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவங்களை விளக்கினர். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

பள்ளிவாசலுக்குள் ரவுடிகளை வைத்திருந்தது, தவ்ஹீத் ஜமாஅத் தினரை பயங்கரமாகத் தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த ஊர் ஜமாத்தினர், நோன்புக் காலம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இந்தப் பள்ளிவாசலில் இருந்துதான் கஞ்சி வழங்கியதாகவும், அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக இறங்குவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினர்.சுட்டுக் கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஹாஜி முஹம்மது ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

திருவிடச்சேரியை ஒட்டியுள்ள விழியூர் சென்று குண்டடிபட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களின் வீடுகளுக்கும் தமுமுக நிர்வாகிகள் சென்று அவர்களுக்கு தமுமுக நிர்வாகிகளின் வருகையை ஒட்டி விழிதியூரில் திரளாகக் கூடிய முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள், திருவிடச்சேரி முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் காலங்காலமாக இருந்துவரும் பாசப் பிணைப்பை நெகிழ்வோடு குறிப்பிட்டனர்.

குடும்பத்தோடு வெளியூர் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி நம்பி ஒப்படைத்துச் செல்வதையும், பலநேரங்களில் முஸ்லிம்களின் கடைகள் மட்டும் சொத்துகளுக்கு பாதுகாப்பாக இம்மக்கள் சென்று இரவெல்லாம் தங்கியிருந்ததையும் தமுமுக தலைவரிடம் கூறிய இம்மக்கள், தங்களை அடியாட்கள் என்று அந்த பேரறிஞர்(?) விமர்சித்தது குறித்து வேதனை அடைந்தனர். நீங்கள் ஜமாத்தினரின் அடியாட்களாகப் போனீர்களா? என்ற கேள்விக்கு வேதனையோடு மறுத்தனர்.

குத்புதீனும் அந்த அமைப்பும்:-

குத்புனுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் எமது உறுப்பினருமில்லை, எமது செயல்பாடுகளில் கலந்துகொள்வதுமில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய தலைவர் பி.ஜே தொலைக்காட்சியில் விளக்கமளித்துள்ளார்.நாகை மாவட்டம் ஏனங்குடி நடுப்பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள டி.என்.டி.ஜே. அலுவலகம் இந்த குத்புதீன் குடும்பத்துக்குரியது. குத்புதீன் முயற்சியினாலேயே அந்த அமைப்புக்கு அந்த இடம் கிடைத்தது என்கின்றனர் ஊர்வாசிகள். எனவே குத்புதீன், அந்த அமைப்புடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.

திருவிடச்சேரியில் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அஸர் தொழுகை நேரம். அப்போது குத்புதீன் அங்கே இருந்ததால் பிரச்சினை வளர்ந்துள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக அந்த வீட்டில்தான் இரவுத் தொழுகைக்கும் வந்துள்ளார்.இவர் தற்செயலாக நண்பரோடு வந்ததுபோல் அதன் தலைமை கூறியதும் பொய்யே.வன்முறை இவர்களது வழிமுறை இல்லையென்றால், திருவிடச்சேரி ஜமாஅத் தலைவரும், இன்னொரு முஸ்லிமும் கொல்லப்பட்டதை இந்த நிமிடம் வரை அவர் ஒப்புக்குகூட கண்டிக்காமல் இருப்பது ஏன்?

தற்காப்புக்காக சுட்டாரா?

பள்ளிவாசலுக்கு நியாயம் கேட்க வந்த ஹஜ் முஹம்மது, தற்காப்புக்காக சுட்டதில் இருவர் பலியாகிவிட்டதாக அந்த தலைவர் கூறுகிறார்.

@ நியாயம் பேச வருபவர் துப்பாக்கியோடு தான் வருவாரா?

@ பள்ளிவாசலுக்கு துப்பாக்கி எடுத்து வருவது அவசியமா?

@ நபிவழியில் நடப்பதற்காக, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள் துப்பாக்கி மூலம்தான் தீர்வு கண்டார்களா?

@ இதற்கெல்லாம் என்ன பதில்-?

திருவிடச்சேரி மக்கள் கருத்து:-

முகம்மத் இக்பால் (ஜமாத் பொருளாளர்) கூறுகையில்:-

இந்த ஊரில் நாங்கள் எல்லாம் ஒத்துமையா வாழ வேண்டுமென நினைப்போம். ஆன இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் நடந்த நாளில் தவ்ஹீத் ஜமாதினர் இவ்வூரில் ஒரு வீட்டில் ரமலான் இரவு தொழுகை நடத்தி வந்தனர். அப்போது அவ்வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டுகாரர் களுக்கும் நடந்த சிறிய பிரச்சணைக் காரணமாக கைகலப்பு நடந்தது. இதனை ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலையிட்டு சுமார் 50 அல்லது 60 பேர்களுடன் மீண்டும் வந்தனர். அப்போது ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

பிரச்சனையைப் பேச 10 பேர் வந்தா போதுமே ஏன் இத்தனை பேர் என ஜமாத் தலைவர் கேட்டார். அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினர் ‘‘இவர்கள் எங்கள் பக்கம் பேச வந்துள்ளனர்’’ என்று கூறினர். யாரும் எதிர்பார்’காத நேரத்தில் இஸ்மாயில் அவர்களை அவர்களில் ஒருவரான ஹாஜி முகம்மது மூக்கில் தாக்கினார். இதனால் ஜமாத் தலைவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பள்ளி இமாம் மைக்கில், ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு செய்தார். அறிவிப்பு செய்யும் போதே கொலையாளிகள் ‘‘இப்போது மூக்கை மட்டும் தான் உடைத்துள்ளோம் இன்னும் பாக்கி உள்ளது அதையும் மைக்கில் சொல் லுங்கள்’’ என கூறினர். இமாமின் அறிவிப்பை கேட்ட உடன் ஜமாத் தலைவரின் மகன் ஒடி வந்து ‘‘யாருடா என் அத்தாவை அடித்தது தைரியம் இருந்த இப்ப வா’’ என ஆவேசப்பட்டார். மகன் கோபத்தில் ஏதாவது செய்திடுவானோ என பயந்து அவனை சமாதானப்படுத்த பள்ளியிலிருந்து ஜமாத் தலைவர் இறங்கினார். ஒரு சில அடிகள் சென்ற உடன் இவ்வூரைச் சேர்ந்த குத்புதீனின் மச்சானாகிய ஹஜ் முகம்மது அவரை சுட்டான்.

இதுக்கு அரசியல் கட்சிகள் காரணம் என சொல்கிறார்கள் இதற்கு அதிமுகவோ திமுகவோ காரணம் இல்ல. இதற்கு குத்புதீன் தான் காரணம்.சமா தானப்படுத்தினார். ஆனால் ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த அவர்கள் அங்கிருந்து சென்று அவர்தான் சம்பவம் நடக்க இருந்த சில மணிநேரத்துக்கு முன் ‘‘இன்னும் 2 மணிநேரத்தில் இந்த ஊரை என்ன பண்றேன் பார்’’ என சொன்னார்.

ஹாஜா மைதீன் (ஜமாத் துணைத் தலைவர்) கூறுகையில்:-

இஸ்மாயில் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் நாள் வரை எல்லாரிடமும் நல்ல முறையில் நடந்துக்கொண்டார்.இந்த பசங்க இப்படி பண்ணுறானுங்களே என்று ரொம்ப கவலைப்பட்டார். பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் இதே கவலையில் இருந்தார். எப்பவுமே நாம் அனைவரும் ஒன்றுதானே ஏன் பிரச்சனை பண்றாங்க என்று கூறி வருத்தப்படுவார். அப்படிப்பட்ட ஒருவரை எங்க ஜமாத் இப்போது இழந்துவிட்டது. சம்பவம் நடந்த நாளில் அவர்கள் 5 கார்களில் வந்து ஏற்கனவே திட்டமிட்டது போல் சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்தி ஒரே ஒரு குவாலிஸ் காரிலே மட்டும் வந்தார்கள் எல்லாம் முடிந்தவுடன் அந்த கார்களில் தப்பிவிட்டனர். இது எல்லாமே முன் ஏற்பாட்டுடன் நடந்துள்ளது போல் தெரிகிறது, இதற்கு காரணமானவர்களை காவல்துறை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சுட்டுக்கொள்ளப்பட்ட ஜமாத் தலைவரின் மகன் சபீருதீன் கூறுகையில்:-

நான் பிரச்சனை என்று கேள்விப் பட்டு போனேன். அவங்க 50 பேருக்கு மேல் இருந்தாங்க அத்தாவை அடிச்சதுல மூக்குல ரத்தம் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டாங்க. அங்கேயே அத்தா மவுத் தாயிட்டார்.

ஜபருல்லா (சுட்டு கொல்லப்பட்ட ஹாஜி முஹம்மதின் மைத்துனர்) கூறுகையில்:-

எங்களுக்கும் அவர்களும் தனிப் பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ஜமாத்திற்கும் அவர்களுக்கும் சிறு சிறு பிரச்சணை வரும், பிறகு சரியாகிவிடும்.என்னுடைய சகோதர மகனுக்கு சிறிது மூளை வளர்ச்சி குறைவு. அவனுக்கு அதிக சப்தம் ஒத்துக்காது. அவர்கள் எதிர் வீட்டில் ஸ்பிக்கர் போட்டு ரமலான் இரவு தொழுகை நடத்திவந்தனர். குர்ஆன் தொழுகை காரணமாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சம்பவ தினத்தில் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் பெண் எங்கள் குடும்பத்தினரை தவறாகப் பேசி னார். இதனை பெரிது பண்ண வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ரமலான் வரை தொழுகை நடக்கட்டும், பிறகு நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டோம். இதையே ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்களும் கூறினார். பிறகு நோன்பு துறந்த பின் குத்புதீன் என்பவர் சமாதா னம் செய்த ஜமாத் தலைரை தரக் குறைவாகப் பேசினார். இதனை அங்கிருந்த மக்கள் ஆட்சேபனை செய்தனர். அவர்களையும் தரக்குறை கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து பொதுமக்களை தாக்கினர். இதில் மாற்று மத சகோதரர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் குத்புதீன்என்பவர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த தெருவையே தரைமட்டம் ஆக்குரென் பாரு என போனார்.இதே போல் அடிக்கடி குத்புதீன் சொல்வது வழக்கம். எனவே இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில மணி நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து மைக்கில் ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் பள்ளிவாசலை நோக்கி ஓடினோம். கண் மூடி திறக்கும் முன் ஹஜ் முகம்மது என்பவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜமாத் தலைவர், எனது மச்சான் ஹாஜி முஹம்மது ஆகியோர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் மாற்று மத சகோதரரும் அடங்குவர். ஒரு சிறிய விஷயத்தை பெரிய பூதாகரமாக்கி உயிர்பலி வாங்கிவிட்டனர். நானும் தவ்ஹித் சிந்தனை உள்ளவன்தான். ஜமாத் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் நாம் ஏகத்துவ கொள்கையைச் சொல்ல முடியும் என சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.எதிர்தரப்பில் அவர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கொள்கை ரீதியாக செயல்படுவதில்லை.

பிச்சை முஹம்மது (சம்பவத்தை நேரில் கண்டவர்):-

சம்பவ நாளில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஜமாத் தலைவரை ஹஜ் முகம்மது என்பவர் முகத்தில் அடித்தார். பின்பு ஜமாத் தலைவரை நோக்கி ‘‘நீ என்ன பெரிய ஆளா?’’ என கேட்டு அவரது நெஞ்சில் குத்தினார். தலைவரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ஜமாத்தினர் அவர்களை பிடிக்கும் போது அவர்கள் பள்ளியிலிருந்து கீழே இறங்கி விட்டனர்; அதன்பின்பு ஜமாத் தலைவரையும் அவருடன் இருந்தவர்களையும் சரமாரியாக சுட்டு, தயாராக இருந்த கார் களில் தப்பினர். சம்பவத்தை கேள்விப் பட்டவுடன்; தமுமுகவினர் 150க்கு மேற்பட்டோர் வந்து எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

குண்டுபாய்ந்த இந்துமத சகோதரர் ராமதாஸ் மனைவி கூறுகையில்:-

என் கணவர் மாதா கோயில் திருவிழாக்காக வசூல் செய்ய அங்கு சென்றார். அங்கு நடந்த பிரச்சனையில் அவருடைய விலாவிலும் குண்டு பாய்ந்து தற்போது தஞ்சை மருத்துவமனை ஐ.சி.யு.வில் உள்ளார். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கணவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார்.அவரும் இப்போது மருத்துவமனையில் உள்ளதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

சின்னப்பா (சம்பவத்தை நேரில் கண்டவர்) கூறுகையில்:-

‘‘எங்க விழிதியூர் கிராமத்திலிருந்து நாங்க எல்லோரும் கடைக்கு இங்கு தான் வருவோம். எங்களுக்கு முக்கியமான கடைத் தெருவே இந்த ஊர்தான்.எங்களுக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் எந்தப் பிரச்சணையும் இல்லை. கடைக்கு வந்த நாங்கள் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு ஒடினோம்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்க ஊர்’காரருங்க 3 பேர் சிக்கிட்டாங்க. அவங்க இப்போ ஆஸ்பத்திரில இருக்காங்க’’.

அந்தோனி சாமி (குண்டு பாய்ந்தவரின் உறவினர்) கூறுகையில்:-

‘‘விழிதியூர் கிராமத்திலே இதுக்கு முன்னாடி இதுபோல் நடக்கவே இல்ல. இது பெரிய அநியாயம். நாங்க மாதா கோயில் திருவிழா நடத்த வசூல் செய்யப் போனோம். ஆனால் திருவிழா நடத்த வேண்டிய நாட்டாமை இருவரும் இப்போ மருத்துவமனையில் உள்ளனர்’’.

நன்றி: மதஜ

இறைவன் நாடினால்... முத்துப்பேட்டை தமுமுகவின் நகர பொதுக்குழு.


புதன், 22 செப்டம்பர், 2010

கூத்தாநல்லூர் முளிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவாக்களின் போராட்ட அழைப்பு !

கடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பகுதிக்குள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் முதல் முறையாக அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி கலவரபீதியை ஏற்படுத்தினர். கூத்தாநல்லூரில் முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் தொப்புள்குடி உறவாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வரும் தருணத்தில் இந்த ஹிந்துத்துவாக்களின் முஸ்லிம் விரோத கோஷங்களினால் கொதித்தெழுந்த முஸ்லிம்கள் (அனைத்து இயக்கங்கள் உள்பட)
அமைதியான முறையில் ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்டு எந்த தவறான கோசங்களையும் எழுப்பாமல் லட்ச்சுமாங்குடி முக்கத்தில் சாலைமறியல் செய்து கலவர நோக்கத்தோடும் தவறான கோசங்கள் எழுப்பியதை கண்டித்தும் அதற்கு அனுமதி வழங்கி துணைபோன கூத்தாநல்லூர் சரக காவல்துறையையும் கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதில் ஏதோ ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் களத்தில் இறங்கிவிட்டனர் அந்த சாலை மறியலின் போது ஹிந்துக்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதாகவும் அதை தமுமுகவினரும், தவ்ஹீத் ஜமாத்தினரும் அரங்கேற்றியதாகவும் பொய் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி ஹிந்துக்களை ஒன்று திரட்டுகின்றனர். இந்த தருணத்தில் கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் அமைதிகாத்து அந்த பிரச்சனைகளை சட்டரீதியில் கொண்டு செல்வது இன்றைய தலையாய கடமையாக இருகின்றது

முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவாக்களின் பிரச்சார நோட்டீஸ்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நாளில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துக...! தமிழக அரசுக்கு தமுமுக கடிதம்



பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி), சென்னை மாநகர காவல் ஆணையாளர் (போலீஸ் கமிஷனர்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில், ‘‘தீர்ப்பு வெளியாகும் நாளிலோ அதை ஒட்டியோ மதவெறியர்களும், சமூக விரோதிகளும், பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட முஸ்லிம் நிறுவனங்களையும், முஸ்லிம்களையும் தாக்கலாம் என அஞ்சுகிறோம். எனவே காவல்துறை, அனைத்து வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தமுமுக பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!

1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010


மதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம்

இன்று விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்தது.வழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட்டத்தினர் மதுக்கூரை கடக்கும் போது 6 கடைகளையும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இதனால் நிலைமை பதட்டமானது மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுப் படுத்த முடியவில்லை இதன் பதிலடியாக ஊர்வலத்தில் ஒரு சிலர் கல்வீசியிருக்கிரார்கள் .எப்போதும் 50 க்கும் குறைவான எண்ணிக்கைகள் செல்லக்கூடிய ஊர்வலத்தில் 100 மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்,முத்துப்பேட்டையில் தங்களது எண்ணத்தைசெயலாற்ற முடியாதவர்கள் மதுக்கூரில் நிறைவேற்றி உள்ளார்கள்.இந்நிலையில் தமுமுக ,மமக மற்றும் PFI நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது ஊர்வலத்தில் முதலில் வன்முறை துவக்கியவர்களை கைது செய்யவில்லை ,நேற்று மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் தமுமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார் ,அதன் அடிப்படையில் அமைதிஏற்படுத்திக் கொண்டிருந்த தமுமுக மமக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது, உடனடியாக மமக மாவட்டச் செயலாளர் கலந்தர் அவர்கள் மமக மாநில துணைச் செயலாளர் தமிம் அன்சாரி அவர்களை தொடர்புக் கொண்டு விபரங்களைக் கூறினார் ,உடனடியாக தமிம் அன்சாரி அவர்கள் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புக் கொண்டு கைது செய்யப்பட்ட தமுமுக மமக மற்றும் இதர அப்பாவிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.மதுக்கூரில் இதர சட்டநடவடிக்கைகளை மேற்க்கொள்ள சகோதரரர் ராவத்தர்ஷா தலைமையில் ஒருக் குழுவினர் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள், தொடர்ந்து தமுமுக தலைமை மதுக்கூர் நிலைமையை கவனத்துடன் அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

சென்னையில் பெருநாள் தொழுகை-தமுமுக தலைவர் ஈகைத்திருநாள் உரை.

உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே தினத்தில் (வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10) பெருநாள் கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருத்தாசலம், திண்டுக்கல் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய ஊர்களில் வியாழன் மாலை பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்தார்.

இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் ஈகைத் திருநாள் (செப்டம்பர் 10) அன்று பிராட்வே டான் பாஸ்கோ விளையாட்டு திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பெருநாள் பேரூரை ஆற்றினார். அவர் தமது உரையில் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

(பிராட்வேயில் ஈகைத்திருநாள் தொழுகையில் பங்குக் கொண்ட பெண்களின் ஒரு பகுதி)

ஈகைத் தொழுகைக்கு பிறகு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் தமுமுக தலைவரும் பொதுச் செயலாளரும் )
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி உட்பட தமுமுக நிர்வாகிகள் ஏரளாமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்குக் கொண்டார்கள். மழையின் காரணமாக திடல் நனைந்திருந்ததால் அங்கேயே மாற்று ஏற்பாடு செய்து தொழுகை நடத்தப்பட்டது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

சகோதரரர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை தமுமுக வலைத்தளம் சார்பாக இனிய நோன்பு பெருநாள் நல வாழ்த்துக்கள்.


அன்புச்சகோதரர்களே புனித மிகு 'ரமலான்' மாதத்தை கடந்து 'ஷவ்வால்’ மதத்தின் முதல் நாளில் பெருநாள் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எங்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்... இந் நன்நாளில் முஸ்லிம்கள் அணைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தோடும்,பாசப்பிணைப்போடும்,வாழ் வாங்கு வாழ்வதற்கும். காவிய பயங்கரவாதிகளாலும், ஆட்சி அதிகாரம் படைத்த அதிகார வர்க்கங்களாலும் நம் சமுதாயத்திற்கு எதிராய் செய்யப்படும் சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வளம்பெற செய்ய எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
அன்புடன் - முத்துப்பேட்டை முகைதீன்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அமீரகத்தில் தமீமுன் அன்சாரியுடன் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இந்த புனித மிகு ரமலான் மாதத்தில் சுற்றுபயணமாக தாயகத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்திருக்கும் தமுமுகவின் முன்னாள் மாநில செயலாளர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர், மக்கள் உரிமையின் ஆசிரியர் சகோதரர்.எம்.தமீமுன் அன்சாரி. அவர்களை முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் - 03-09-2010 - வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து தமிழக செயல்பாடுகள் மற்றும் முத்துப்பேட்டை தமுமுகவின் செயல்பாடுகள் குறித்தும் விவாதம் நடத்தினர்.

அமீரக செயலாளர் சகோதரர் யாசின் நூருல்லாஹ் மற்றும் துணை செயலாளர் சகோதரர் டாக்டர்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக வாழ் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு நமது ஊரில் உள்ள நமது தமுமுக சகோதரர்களை உற்ச்சாகப்படுத்தி இன்னும் கள(கழக)ப்பனிகளை அதிகப்படுத்துவது அதற்கான தேவைகளை நம்மால் முடிந்தளவு உதவுவது அவர்களின் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பது போன்ற முடிவுகளை தாங்கியவர்களாக தங்கள் பகுதியை நோக்கி சென்றனர். எல்லா புகழும் இறைவனுக்கே!

இதில் கலந்து கொண்ட சகோதரர்களின் விவரம் :-

@ தம்பிமா (எ) அஹமது ஜலால் - – 00971-50-8642798 -

@ ஷாகுல் ஹமீது – 00971-50-3958652 -

@ உமர் நத்தர்சா – 00971-55-2946254 -

@ முகம்மது ரியாசுதீன் – 00971-55-6332638 -

@ ஷாஜஹான் – 00971-55-8284963 -

@ முகம்மது ஆரிப் – 00971-50-8561085 -

@ முகம்மது பிலாலுதீன் – 00971-50-8786513 -

@ முகைதீன் பிச்சை – 00971-55-7542001 -

தங்களது சொந்த பணிகள் காரணமாக வரமுடியாத நமது முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் நமது முடிவை அங்கீகரித்து கொண்டார்கள் அவர்களும் நம்மோடு சேர்ந்து முத்துப்பேட்டை தமுமுகவிற்கு பக்கபலாமாக இருப்பதாகவும் நம்மிடம் கூறினார்கள் அவர்களின் விவரம்:-

@ அப்துல் மாலிக் (சியா) ) – 00971-50-3956636 -

@ அஜீஸ் ரஹ்மான் – 00971-50-5717076 -

@ ரஹ்ப் – 00971-50-7765912 -

@ மைதீன்

@ அஹமது கபீர் – 00971-50-1795288 -

@ வாவா ராவுத்தர் – 00971-50-5254499 -

@ இல்யாஸ் பாய் – 00971-50-5494737 -

@ ரஷ்னுதீன்

@ தாயக சென்றிருக்கும் பக்கர்

மற்றும் தமுமுகவின் ஆதரவாளர்கள்.





செய்தி தொகுப்பு முத்துப்பேட்டை முகைதீன்.

நோன்பு கஞ்சி சண்டையில் மூவரை சுட்டுக்கொன்ற த.த.ஜ வினர்!

நமது திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி என்ற ஊரில் நேற்று .5.10.2010 நோன்பு கஞ்சி தொடர்பாக த.த.ஜ.வினருக்கும் சுன்னத் ஜமாஅத் பள்ளியை செர்ந்த்வர்களுக்க்ம் ஏற்பட்ட மோதலில் த.த.ஜ.வை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்தனர்..பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் நடை பெற்றது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.காவல் துறை தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அஜ்மான் மண்டல முமுக நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அங்கமான அஜ்மானில் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 02-09-2010 வியாழன் அன்று மாலை 5 மணிக்கு சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமீரக துணை தலைவர் சகோ.ஹுசைன் பாஷா அவர்கள் தலைமை வகிக்க ஷார்ஜா மண்டலத்தின் துணை செயலாளர் சகோ.பந்தல் குடி சம்சுதீன் அவர்கள் அண்ணலார் நபிகள் நாயகத்தின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சாரம்சமாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சகோ.எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தாயகத்தில் தமுமுக செய்துவரும் சமுதாய பணிகளையும், தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அரங்கில் ஏற்படுத்திவரும் மாற்றங்களையும், மனிதநேய மக்கள் கட்சி உருவாகிய வரலாற்று நிகழ்வுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான சகோதரர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

இதில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். மக்ரிப் தொழுகைக்கு பின் வருகைதந்த அத்தனை சகோதர்களும் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகபடித்திகொண்டு மமகவின் அரசியல் சம்மந்தமான முடிவுகள் மற்றும் கூட்டணி பற்றிய கருத்துகளை தாங்கி தங்களது கேள்விகளை சகோதரர் அன்சாரி அவர்களிடம் கேட்க மிக தெளிவாகவும், சிந்தனைகளை தூண்டும் விதமாகவும் தமிழக அரசியல் களம் பற்றி சகோதர்களால் கேட்க பற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.
இறுதியாக அஜ்மான் மண்டல தலைவர் சகோதரர்.குடவாசல் செய்யது ஷஹாபுதீன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திதந்த ஏக இறைவனுக்கும் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி கூறினார்.
வந்திருந்த அனைத்து சகோதரர்களும் சமுதாய அரசியல் எழுச்சிக்காக போராடும் மமக அரசியல் அரங்கில் வெற்றிபெற ஏக இறைவனிடம் பிரார்தித்தவர்களாக கலைந்து சென்றனர். எல்லா புகழும் ஏக இறைவனுக்கே!





களத்தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்
புகைப்படங்கள் - ஹுசைன் பாஷா

புதன், 1 செப்டம்பர், 2010


காவி பயங்கரவாதமும் அதனை தொடர்ந்து கொக்கரிக்கும் ஹிந்துத்துவவாதமும்!!

நமது நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் காவல்துறையின் உயர்அதிகாரிகளின் மாநாட்டில் உரைநிகழ்த்தும் போது ஒரு உண்மையை இவ்வுலகிற்கு உரத்து சொல்லிவிட்டார். அதுதான் காவி தீவிரவாதம் அவர் சொன்னதும் போதும் ஒட்டுமொத்த ஹிந்துத்துவவாதிகளும் அவர் மீது படை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

காவி தீவிரவாதம் என்று ப.சிதம்பரம் ஒரு இடத்தில் கூறியதற்காக ஒட்டுமொத்த ஹிந்துத்துவவாதிகளும் கொக்கரிக்கின்றீர்களே மான நஷ்ட வழக்கு போடும் நிலைக்கு உங்கள் மனம் துடிக்கின்றதே, காலம் காலமாய் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக ஹிந்துத்துவவாதிகளாகிய நீங்களும், சில இல்லை பல அரசு அதிகாரிகளும், ஒட்டுமொத்த மீடியாக்களும் முஸ்லிம்களை புண்படும்படி முஸ்லிம் பயங்கரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றெல்லாம் இட்டுக்கட்டி குண்டுவெடிப்பு சம்பவங்களோடு தொடர்பு படுத்தி பேசுனீர்களே அதற்கு நாங்கள் எந்த கோர்டில் போய் வழக்கு போடுவது? அப்படியே வழக்கு போட்டாலும் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நீதி வழங்கும் இடங்களிலும் உங்களால் மூளை சலவை செய்யப்பட்ட பார்பினியவாதிகள் தானே இருகின்றார்கள்!

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து மீடியாக்களாலும்,உங்கள் பேச்சுக்களாலும் எங்கள் மனதை ரொம்பவே காயப்படுத்தினீர்கள் ஆனால் நாங்களோ பொங்கி எழுந்து அரசு அதிகாரிகளை உங்களை போல் மிரட்டவில்லை,உங்களை போல் மத்திய அரசை பணிய வைக்கக்கூடிய அதிகாரம் எங்களுக்கு இல்லை ஆனால் எல்லா அதிகாரத்தையும் ஒருமணே வைத்திருக்கின்ற ஏக இறைவனிடம் நாங்கள் கையேந்தினோம். அந்த இறைவன் தான் இன்று எந்த மீடியாக்களை வைத்து எங்களை தீவிரவாதிகள் முத்திரை குத்தினீர்களோ அதே மீடியாக்கள் இன்று உங்களை பார்த்து தீவிரவாதிகள் என்று சொல்லும் காலத்தை எங்களை படைத்த இறைவன் உருவாக்கிவிட்டான். எல்லா புகழும் இறைவனுக்கே!

காவி தீவிரவாதிகள் என்று சொல்லியதற்காக இன்று ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் ப.சிதம்பரம் என சொல்லும் நீங்கள் முஸ்லிம்கள் வெளியில் தலைகாட்டமுடியாத அளவிற்கு படிக்காத பாமரனும் எங்களை பார்த்து நீங்கள் தீவிரவாதிகளா என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று நாடுமுழுவதும் பரப்புனீர்களே அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லையா ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனதும் புண்படுமே என்று! அடுத்தவனுக்கு என்றால் ஒரு நியாயம்!உங்களுக்கு என்றால் ஒரு நியாயமா? குத்துதே குடையுதே... என்று கிராம புறங்களிலே கூறும் ஒரு பழமொழியை இங்கு கூறினால் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

உங்களையாவது வார்த்தைகளால் தான் சொன்னார்கள் காவி தீவிரவாதிகள் என்று எங்கள் சமுதாயத்தை சந்தேக கண்ணோட்டத்தோடு இந்திய காவல்துறையினரும் உளவுத்துறையினரும் சல்லடை போட்டு சலித்தார்களே, தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி இளைஜர்களையும், பள்ளி,கல்லூரி மாணவர்களையும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதோடு மட்டுமில்லாமல் என்கவுண்டர் என்ற புனித(!) பணியை முஸ்லிம்கள்மீது திட்டமிட்டு தினித்தீர்களே அதையெல்லாம் எங்கே கொண்டு சொல்வது. அதெற்கெல்லாம் காரணம் நீங்கள் எங்கள் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியதுதானே.

இப்பொழுது உங்களுக்கு என்றவுடன் உங்களின் உண்மை (தீவிரவாத) முகத்தை வீடியோ ஆதாரத்தோடு செய்திவெளியிட்ட ஹெட்லைன்ஸ் டுடே அலுவலகத்தை தாக்குகின்றீர்கள்,கோர்ட்டிலே வழக்கு போடுகின்றீர்கள், நஷ்டஈடு கோருகின்றீர்கள், ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூக்குரலிடுகின்றீர்கள் என்ன நியாயமிது?

இருகின்றோம் இன்னும் பொறுமையாக இருந்து எங்களை படைத்த இறைவனிடம் கையேந்துகின்றோம் இன்ஷா அல்லாஹ் கர்கரே போன்ற நியாயமிக்க அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் உங்கள் கொட்டத்தை அடக்க என்ற சிந்தனையோடு!

-- ஆக்கம் முத்துப்பேட்டை முகைதீன் --