புதன், 1 அக்டோபர், 2014

பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக வாரி வழங்கிடுங்கள்.....


யா அல்லாஹ் கஷ்மீர் மக்களின் துயர் துடைப்பாயாக....

பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக வாரி வழங்கிடுங்கள்.....

முத்துப்பேட்டை தமுமுக மாணவரணி



வியாழன், 25 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை நகர தமுமுக நிர்வாக குழு கூட்டம் கூடியது, மர்கஸ் உருவாக்க தீர்மானம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் நேற்று 23.09.2014 காலை 10 மணியளவில் நிர்வாக குழு மற்றும் ஆலோசனை கூட்டம் தமுமுக மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா கலந்து கொண்டார்.மேலும் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

முத்துப்பேட்டையின் தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு நகர நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமுமுக நகர தலைவராக செயல்பட்டு வந்த நெய்னா முகம்மது அவர்களை ம.ம.க ஒன்றிய செயலாளராக மாவட்டம் அறிவித்துள்ளதால் தமுமுக ம.ம.க நகர தலைவராக M.சம்சுதீன் அவர்களை ஏகமனதாக நியமிக்கப்பட்டது.

தீர்மானம் - 2

முத்துப்பேட்டையில் 22 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு அச்சுருத்தலையும்,பாதுகாப்பின்மையும்,பொருளாதார இழப்புகளையும் மற்றும் அப்பாவிகளின் மீதான வழக்குகளையும் முழவதுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு.மூன்று கட்டமாக போராட்டத்தினை முன்னெடுப்பது என்றும் இப்பிரச்சனைகளை பாதியில் விடாத படி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் - 3

முத்துப்பேட்டை தமுமுகவிற்கு என தனியாக ஒரு மர்கஸ் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை நகர நிர்வாகம் எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 4


மேலும் நகர பொதுக்குழுவை கூட்டி இந்த தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

DIG யை சந்தித்த தமுமுக பொதுச்செயலாளர்


முத்துப்பேட்டையில் கடந்த 3 ம் தேதி காவிகளால் முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக இன்று தமுமுகவின் பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தஞ்சை மண்டல DIG யை நேரில் சந்தித்து முறையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

மமக மாநில அமைப்பு செயலளார் ராவுத்தர்ஷா,தமுமுக மாவட்ட தலைவர் முஜீபுர் ரஹ்மான,தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,மாவட்ட பொருளாளர் ஹக்,தமுமுக மாவட்ட துணை தலைவர் முகமம்து அலீம், மமக நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முகமம்து பைசல் உடன் இருந்தார்கள்


முத்துப்பேட்டைக்கு தமுமுக பொதுச்செயலாளர் அப்துல் சமது வருகை


முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது காவி கலவரக்காரர்கள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு பெண்களை இழிவான முறையில் பேசியும் கலவரம் வழக்க முற்பட்டனர். 3000 க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தும் இக்கலவரகர்ர்களையும் அவர்களின் அராஜகங்களையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததே தவிற உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை முன்வரவில்லை. இதனை கண்டித்து உடனடியாக திரண்ட முஸ்லிம்களிடம் காவல்துறை சமரசம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாயலவில் மட்டுமே சொன்னது.

உடனடியாக களம் இறங்கிய தமுமுகவினரும் பாதிக்கப்பட்டோரும் காவல் நிலையம் சென்று முறையாக கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கு வழக்கு கொடுத்தனர். பின்னர் சிலரை மட்டுமே காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது, ம.ம.க மாநில அமைப்புசெயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்ட திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட வீடுகளையும் கடைகளையும் பார்வையிட்டனர். பின்னர் ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசித்தனர். பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து காவல்துறையில் அலட்சிய போக்கை கண்டித்தனர்.


அதன் பின்னர் தமுமுக தலைமையின் அறிவுறுத்தலின் படி மேல் நடவடிக்கை சட்டரீதியாக எடுப்பதற்காக முத்துப்பேட்டை தமுமுகவினர் முயன்று வருகின்றனர். மாவட்ட துணை தலைவர் முத்துப்பேட்டை அலீம் தலைமையில் கடந்த வாரம் தமுமுக தலைமையகம் சென்று மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி, மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி, மாநில பொதுச்செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் வழிகாட்டல்படி மேல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று 23-09-2014 தமுமுக மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்தனர். தமுமுக அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு ஆசாத் நகர் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மாவட்ட பொருளாளர் திருவாரூர் ஹக், முன்னாள் முத்துப்பேட்டை நகர தலைவரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சம்சுதீன், முத்துப்பேட்டை ஒன்றிய ம.ம.க செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை தலைவர் முத்துப்பேட்டை அலீம், ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது, முன்னாள் நகர தலைவர் முஹம்மது தாவூது, முன்னாள் நகர பொருளாளர் சதாத் அலி, நகர துணை தலைவர் முஹம்மது யாசீன், கத்தார் பொருப்பாளர் ஹாமீம்,  உள்ளிட்ட மாணவரணி மற்றும் மாணவர் இந்தியா நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தொகுப்பு – முத்துப்பேட்டை முகைதீன்



ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் நியமனம்


திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், மாவட்ட பொருளாளர் திருவாரூர் ஹக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கஷ்மீர் மக்களுக்கு தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டம் முழுவதும் வசூல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் கழக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிப்பது குறித்தும் பேசப்பட்டு இறுதியாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளராக முத்துப்பேட்டை மு.நெய்னா முஹம்மது அவர்களும், தமுமுக ஒன்றிய செயலாளராக நாச்சிக்குளம் ரஷீத் அவர்களும், திருத்துறைப்பூண்டி ம.ம.க ஒன்றிய செயலாளராக கட்டிமேடு ராவுத்தரப்பா அவர்களும், தமுமுக ஒன்றிய செயலாளராக திருத்துறைப்பூண்டி அஷாருத்தீன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பணி சிறக்க பிரார்திப்போம்...


முத்துப்பேட்டை தமுமுக சார்பில் கூட்டு குர்பானி


முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் கூட்டு குர்பானி வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவும்

மாடு ஒரு பங்கு – 1250
ஒட்டகம் ஒரு பங்கு – 11,000

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
முத்துப்பேட்டை நகரம்

மேலும் தொடர்புக்கு

7418977919 , 9865557556