புதன், 30 அக்டோபர், 2013

முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் தடுக்க கோரி தமுமுக மனு


முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் தடுக்க கோரி தமுமுக மனு



முத்துப்பேட்டையில் அதிகமாக டெங்கு காய்சல் பரவிகொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இது குறித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28-10-2013 அன்று  முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தினந்தோறும் அனைத்து வார்டுகளிலும் உள்ள குப்பைகளை தேங்க விடாமல் உடனியாக அப்புறப்படுத்தவும், கழிவு நீர் காழ்வாய்களை உடனடியாக சுத்தம் செய்து மருந்து அடித்தும், வடிகால்களுக்கு மூடி அமைத்தும் மற்றும் கொசுக்களை கட்டுபடுத்து அதற்கான கொசு மருந்து அடித்தும் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
முத்துப்பேட்டை நகரம்



தமுமுக சார்பாக மாணவர்களுக்கான நல்லொழுக்க தர்பியா பயிற்சி முகாம்


முத்துப்பேட்டை தமுமுக சார்பாக மாணவர்களுக்கான நல்லொழுக்க தர்பியா பயிற்சி முகாம் 




முத்துப்பேட்டை தமுமுக சார்பாக மாணவர்களுக்கான நல்லொழுக்க தர்பியா பயிற்சி முகாம் 

இன்ஷா அல்லாஹ் 03.11.2013 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

இடம்: வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக அவர்கள் இல்லத்தில் நடைபெறும். இன்ஷா அல்லாஹ் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

சிறப்பு அழைப்பாளர்:

Dr.
முஹம்மது சர்வத்கான் MBBS , மாநில மாணவர் அணி செயலாளர் தமுமுக 

இவன் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 
முத்துப்பேட்டை நகரம்,
திருவாரூர் மாவட்டம்.

மெளத் அறிவிப்பு !

மெளத் அறிவிப்பு !


முத்துப்பேட்டை, அக்டோபர் 30: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஒரத்தநாடு S. அப்துல் கரீம், PSM அஹமது இபுராஹிம், ஆகியோரின் மாமனாரும், அப்துல் நவாஸ், சுல்தான் அப்துல் காதர், முஹம்மது முஹைதீன், ஆகியோரின் தகப்பனாருமாகிய "S. கமால் முஹம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மெளத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள். 

அறிவிப்பவர்: 
சுல்தான் அப்துல் காதர்

மேலும் தொடர்புக்கு:

சுல்தான் அப்துல் காதர்: 0091 9500 67 80 17
முஹம்மது முஹைதீன்: 00966 5965 44152