ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சமுதாய பேரியியக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு

த.மு.முக மற்றும் ம.ம.க வின் மாநில செயற்குழுவும், பொதுக்குழுவும் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. தாம்பரத்தில் 27 ம் தேதி காலை 10 மணிக்கு நிர்வாகக்குழுவும் அதனை தொடர்ந்து 11 மணிக்கு மாநில செயற்குழுவும் நடைபெற்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த நாள் 28 ம் தேதி தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கலைக்கல்லூரியில் த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் மாநில பொதுக்குழு கூடியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த கழக மற்றும் கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகள் சங்கமத்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


1995ல் சமுதாய உரிமைகளை மீட்டெடுக்க உருவெடுத்த தமுமுக என்ற பேரியக்கம் பல சோதனைகளுக்கு மத்தியில் இறைவனின் மாபெரும் கிருபையால் ஓயாத கடல் அலைகள் போல அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் வறியவர்க்கு உதவி, மாணவ செல்வங்களுக்கு உதவி, இரத்தம் தேவைப்படுவர்களுக்கு இரத்த உதவி, மற்றும் அவசர உதவி என விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் உழைத்துக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பொதுக்குழுவில் பல விவாதங்கள் நடைப்பெற்றாலும் புதிய நிர்வாகிகள் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


ஏனெனில் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்வும், அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கும் அண்ணன் S.ஹைதர் அலி சாஹிப் அவர்களும் சீரிய வழிநடத்தலால் இயக்கத்தை சிலர் கூறுப்போட முயற்சித்தபோதும் கடுமையான சோதனையை இயக்கம் சந்திதப்போதும் மனம் தளராமல், பயப்படாமல் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு சென்ற உன்னத தலைவர்கள். தமுமுக வின் சட்டவிதிகளின் படி ஒருவர் குறைந்தபட்சம் மூன்று முறை பதவி வகிக்கலாம். அதற்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற விதிகளின் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ், அண்ணன் S.ஹைதர் அலி ஆகிய இருவருமே பதவியில் தொடர முடியாது என்பதால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியோடு இந்த பொதுக்குழு மேலும் முக்கியத்துவம் பெற்றது.



புறம் பேசுபவர்களும் வாழ்நாள் முழுவதும் பதவியை பிடித்துக்கொண்டே வாழ வேண்டும் என்ற சுயநோக்கு கொண்டவர்களும் அதிகம் பொதுக்குழு முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர் . பலர் அவர்களே மீண்டும் பதவிக்கு வரும் வகையில் சட்டவிதி மற்ற இயக்கங்கள் போல் மாற்றப்படும் என எதிர்பார்த்தனர். இவர்கள் அனைவருக்கும் சம்மட்டியடி கொடுக்கும் வகையில் தமுமுக வின் பொதுக்குழு முடிவுகள் அமைந்துள்ளன. தமுமுக மாநில நிர்வாகிகள் பதவி மோகம் பிடித்தவர்கள் இல்லை என்பதையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தனிநபர் துதிப்பாடிகள் இல்லை என்பதையும் இவ்வுலக மக்களுக்கு தெளிவாக்கப்பட்டிருக்கிறது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.


தொடரட்டும் தமுமுகவின் பயணம் ....


மலரட்டும் சமுதாய மறுமலர்ச்சி .....


என்ற முழக்கத்தோடு இறைவனிடம் அனைவரும் இரு கை ஏந்தி பிரார்த்திப்போம்.















பொதுக்குழு உறுப்பினர்களின் அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்தோடு கீழ்கண்ட சகோதரர்கள் த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் புதிய மாநில நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்....


தலைவர் – த.மு.மு.க மற்றும் ம.ம.க
மவ்லவி. J.S.ரிஃபாயி ரஷாதி



பொதுச்செயலாளர் - த.மு.மு.க
சகோ.பி.அப்துல் சமது



பொருளாளர் - த.மு.மு.க மற்றும் ம.ம.க
சகோ.O.U.ரஹ்மத்துல்லாஹ்



பொதுச்செயலாளர் - ம.ம.க
அண்ணன் M.தமிமுன் அன்சாரி




--முத்துப்பேட்டை முகைதீன்.


சனி, 28 ஜனவரி, 2012

450 ஆண்டுகளுக்கு மேலாக இறைவனை மட்டுமே வணங்கிவந்த இறையில்லாமான பாபரி மஸ்ஜித் 1992 டிசம்பர் – 6 ஆம் தேதி ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கரசேவை என்னும் போர்வையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் திட்டமிட்டு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களும், உயிர்களும் சூறையாடப்பட்டன. மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்த கயவர்களை கண்டித்தும் உடனடியாக அதே இடத்தில் இறையில்லம் கட்டப்படவேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் ஜனநாயக வழியல் கண்டன சுவரொட்டி ஒட்டியதற்கெல்லாம் தடா போன்ற கொடிய சட்டங்களுக்குள் அடைக்கபட்டு சிறைபிடிக்கபட்டார்கள். அடக்குமுறைகளும், அநியாயங்களும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக தலைவிரித்து ஆடின. காலமும் மெல்ல உருண்டோடின. இப்படி பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் நொந்து நூலாகி கேட்பாரற்று நின்ற நிலையில்தான் இழந்த உரிமையை மீட்ப்போம், இருக்கின்ற உரிமைகளை காப்போம் என்ற வீரமுழக்கத்தோடு 1995 ல் வெளிஉலகத்திற்கு கொண்டுவரப்பட்டது தான் சமுதாய பேரியியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் த.மு.மு.க


பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தன் சொந்த சமுதாயத்தினரின் காலை வாரிவிடும் துரோக செயல்களுக்கு மத்தியிலும், பல்வேறு வசைபாடல்களுக்கு மத்தியிலும் வெற்றி பாதையை நோக்கி தமுமுகவை அழைத்து சென்று வீரநடை போடவைத்த தமுமுகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் கிட்டதட்ட 15 ஆண்டுகள் பதவிவகித்த பேராசிரியர்.முனைவர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், அண்ணன் செ.ஹைதர் அலி அவர்களும் தமுமுகவின் கொள்கை விதிகளின் படி தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவியிலிருந்து தற்பொழுது விடுபடுகின்றார்கள். தடைகளை தகர்த்த வரலாறும், அடக்குமுறைகளை கண்டு வீருகொண்டு எழுந்த வீரியத்தையும் த.மு.மு.கவுக்கு பெற்றுக்கொடுத்த பெறுமை இவர்கள் இருவரையும் சாரும் என்றால் அது மிகையாகாது. அப்படிபட்ட கம்பீரத்தோடு தனக்கே உரியபானியில் தொடர்ந்து சமுதாய பணியாற்றி வந்து கொண்டிருக்கும் த.மு.மு.க வின் அடுத்த தலைவர்களுக்கு இவர்கள் இருவர்களும் வழிவிட்டு மூத்த தலைவர்களாய் இருந்து இன்ஷா அல்லாஹ் வழிநடத்துவார்கள்.


எத்தனை எத்தனை போராட்டங்கள், எழுச்சி மிகுந்த ஆர்பாட்டங்கள், ஒற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடுகள், எண்ணிலடங்கா பொதுக்கூட்டங்கள், தமிழகளவில் பிரமாண்ட மாநாடுகள் என தடைகளை உடைத்தெரிந்தே களம் அமைத்தவர்கள், சிதறிக்கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை தனது உரிமைக்காக போராட்டக்குணத்தோடு படைகளாக புறப்படவைத்தவர்கள், நமது உரிமைகளுக்காக அரசு கதவுகளை தட்டுவோம் சினங்கொண்டுவா என சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்தவர்கள், தங்களது குருதிகளால் தமிழகத்தில் மனிதநேயத்தை மலரச்செய்தவர்கள், அவசர உதவிகளுக்கு சாதி,மதம் பாராது ஓடோடி உழைக்கின்றவர்கள் என கம்பீர மிடுக்கை த.மு.முக வுக்கு உருவாக்கிய தலைவர்கள் வழிவிடுகின்றார்கள் அடுத்த தலைமுறையினர்களுக்கு....


யா அல்லாஹ் எந்த சுயநலமும் இல்லாமல் சமுதாயத்துக்காய் அயறாது உழைத்த, உழைக்க இருக்கின்ற த.மு.மு.க வின் சமுதாய போராளிகள் அணைவருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும் தந்து தொடர்ந்து சமுதாயத்திற்கு போராட வழிவகுத்துத்தருவாயாக....


சமுதாய பாசத்துடன் முத்துப்பேட்டை முகைதீன்