செவ்வாய், 2 நவம்பர், 2010

தமுமுக, மமக நகர புதிய அலுவலகம் திறப்பு மற்றும் நகர் முழுவதும் கொடியேற்றம் நிகழ்ச்சி!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மட்டும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகரத்திற்கு புதிய அலவலகம் திறப்பு விழாவும் நகர் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சியும் கடந்த சனிக்கிழமை அன்று தமுமுக மாவட்ட துணை செயலாளர் சகோதரர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமுமுக, மமக நகர தலைவர் சகோதரர் M.நெய்னா முகம்மது அவர்கள் வந்தவர்கள் அனைவரையும் வரவேற்க, தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாச்சிக்குளம் M.தாஜுதீன் அவர்களும், தமுமுக மாவட்ட செயலாளர் சகோதரர் பொதக்குடி குதுபுதீன் அவர்களும், தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அதிரை சாகுல் அவர்களும்,முன்னிலை வகிக்க மனிதநேய மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சகோதரர் M.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு நகரத்திற்கான புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து தமுமுக, மமக நகர நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் படைசூழ அரபு சாஹிபு பள்ளிவாசல் முதல் புதிய பேருந்துநிலையம் வரை வாகன அணிவகுப்போடு முத்துப்பேட்டை நகர் முழுவதும் கழக மற்றும் கட்சிக்கொடியினை மாவட்ட செயலாளர் சகோதரர் M.முஜிபுரஹ்மான் அவர்களும், நாச்சிகுளம் M.தாஜுதீன் அவர்களும், வழக்கறிஞர் தீன் முகம்மது அவர்களும்,நகர செயலாளர் சகோதரர் S.முகம்மது தாவூது அவர்களும், தமுமுகவின் மூத்த தலைவர் சகோதரர் M.ஹுமாயுன் கபீர் அவர்களும் கொடி ஏற்றிவைத்து சிறப்பித்தனர். இதில் ஏராளமான சகோதரர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த கொடியேற்ற மற்றும் வாகன அணிவகுப்பினாலும், தீபாவளி நேரம் என்பதினாலும் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி மற்றும் புகைப்படம் வழக்கறிஞர் தீன் முகம்மது