செவ்வாய், 11 அக்டோபர், 2011

முத்துப்பேட்டை - மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு.

இறைவனின் திருப்பெயரால்...

முத்துப்பேட்டை – நகர கிளை மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் 2011 உள்ளாட்சி தேர்தல் அறிக்கையானது 11.10.2011 இன்று காலை 11.30 மணிக்கு முத்துப்பேட்டை – பெரிய கடைத்தெருவில் உள்ள மனித நேய மக்கள் கட்சியின் நகர கிளை அலுவலகத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு ”பஸ்” சின்னத்தில் போட்டியிடும் முஹம்மது மாலிக் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகரத்தலைவர். எம்.சம்சுதீன், துணைத்தலைவர். முஹம்மது யூசுப், தமுமுக நகர துணைசெயலாளர் எம். சித்திக் அஹமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் வக்கீல் தீன் முஹம்மது, தமுமுக முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஹீமாயூன் கபீர், தமுமுக நகர செயலாளர் எஸ். தாவூது, தமுமுக நகர பொருளாளர் ஜெகபர் சாதிக், தமுமுக நகர ஒன்றிய செயலாளர் எம். நெய்னா முஹம்மது, மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் கே.முஹம்மது யாசீன் மற்றும் கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

முத்துப்பேட்டையில் உள்ள பொது மக்கள் எதிர்பார்க்கும் 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பானது தேர்தல்; அறிக்கையாக வெளியிடப்பட்டது.




1. தினமும் காலை, மாலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்

2. கொசுத்தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்படும் (கொசுவினால் ஏற்படும் தொல்லைகள் முற்றிலும் தடுக்கப்படும்)

3. சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4. தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக தெருவிளக்கு அமைத்து தரப்படும்.

5. சொத்து வரிவிதிப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு 20% வரி குறைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

6. பழுதடைந்த சாலைகள் உடனடியாக மேம்படுத்தப்படும்.

7. மக்கள் உடல்நலம் மற்றும் நோய்தடுப்புக்கு விரைந்து செயாலாற்றப்படும்.

8. முத்துப்பேட்டையில் உள்ள அணைத்து குளங்களும் தூய்மை படுத்தப்பட்டு சுகாதார குளங்களாக மாற்றப்படும்.

9. பேரூராட்சி அலுவலக பணிகள் விரைந்து நடக்க முழுமையாக கணினி மையமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

11. பொதுசுகாதாரம், துப்புரவு கழிவுநீர் அகற்றல் கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் நவீனப்படுத்தப்படும்.

12. 17 வது மற்றும் 18 வது வார்டுகளில் (தெற்குக்காடு,மருந்தங்காவளி) நிலவும் குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகான மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்படும்.

13. இரயில்வே நிலையம் அருகில் நவீன கழிப்பறை அமைத்து தரப்படும்.

14. நகரின் மையப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு நவீன பூங்கா அமைத்து தர முயற்சி எடுக்கப்படும்.

15. தெற்குகாட்டில் மழைக்காலங்களில் நீர்தேக்கம் ஏற்பட்டு மக்கள் வெளியேறும் அளவுக்கு அவல நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க உடனடியாக வடிகால் வசதி அமைத்து தரப்படும்.

16. 10 வது வார்டில் நவீன கழிப்பறை வசதி, சாலை வசதி மற்றும் சுடுகாடு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

17. பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை நவீனப்படுத்தி தர முயற்சி எடுக்கப்படும்.

18. புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளான ரஹ்மத் நகர், பரக்கத் நகர், மன்சூர் நகர், கொய்யா தோப்பு, MMD காசிம் நகர், திமிலத்தெரு, இமாம் புஹாரி நகர், மற்றும் S.P.K.M, அகாஸ் தோட்டவளாகம் ஆகிய பகுதிகளுக்கு சாலைவசதி, குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு ஆகியவைகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

19. புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ,கார்,வேன் ஸ்டாண்டை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

20. பழைய பேரூந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

21. துப்புறவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரப்படும்.

22. குண்டாகுளத்தெருவிலிருந்து கொய்யா தோப்பிற்கு செல்ல சாலை அமைத்துத்தரப்படும்.

23. மீனவர்கள் நலன் கருதி ஆசாத் நகர் முதல் பீடி துறை வரை கோரை ஆற்றில் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

24. பேட்டை செக்போஸ்டிலிருந்து பாமனி ஆறுவரை தரமான சாலை அமைத்து தரப்படும்

25. மாதாகோவில் தெரு (புதுக்குடியிருப்பு) பகுதியில் நவீன கழிப்பறை வசதி செய்து தரப்படும்

26. ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற முயற்சி எடுப்பேன்

27. நவீன வசதியுடன் கூடிய மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

28. முத்துப்பேட்டையில் மீன்வளத்துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

29. மின் விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளை தவிரக்க துணை மின் நிலையம் (110 மெகாவாட்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்

30. அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்

31. அரசு அறிவிக்கும் அணைத்து நலத்திட்டங்கள் அணைவருக்கும் கிடைக்க முயற்சி செய்வேன்.

“விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமுமுக மற்றும் ம.ம.க வின் மக்கள் சேவைபணிகள் என்றென்றும் தொடரும்....”


ஊழலை எதிர்ப்பதில் உறுதி
திறமையான நிர்வாகம்
முடிவெடுப்பதில் வேகம்
எளிமையான அனுகுமுறை
அடிக்கடி மக்கள் சந்திப்பு


வாக்களிப்பீர்... பேரூந்தி சின்னத்திற்கு...

திங்கள், 10 அக்டோபர், 2011

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் S . முஹம்மது மாலிக் M.A அவர்களிடம் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்பொழுது அவர் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார்.

பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு :












































சனி, 8 அக்டோபர், 2011

ஊழலற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் ம.ம.க வேட்பாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக் அவர்கள் முத்துப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

தமுமுகவின் ஆதரவு பற்ற வேட்பாளரான மாலிக் அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களிப்பீர்...







































புதன், 5 அக்டோபர், 2011

செவ்வாய், 4 அக்டோபர், 2011

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக் அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைப்பீர்...


முத்துப்பேட்டை பேரூராட்சியில் வது வார்டுக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சகோவழக்கறிஞர் தீன் முஹம்மது அவர்களுக்கு தென்னை மரம் சின்னத்தில் வாக்களிப்பீர்... வெற்றி பெற செய்வீர்...
முத்துப்பேட்டை பேரூராட்சியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள்



முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் ம.ம.க வேட்பாளர் சகோ.முஹம்மது மாலிக் அவர்களுக்கு பஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...




முத்துப்பேட்டையில் போட்டியிடும் ம.ம.க வேட்பாளர்கள் 3 வது வார்டு வேட்பாளர் சகோ.வழக்கறிஞர்.L.தீன் முஹம்மது அவர்களுக்கும் 13 வது வார்டு வேட்பாளர் சகோ.எம் நெய்னா முஹம்மது அவர்களுக்கும் 7 வது வார்டு வேட்பாளர் சகோ.எஸ் ஜெஹபர் சாதிக் அவர்களுக்கும் 'தென்னை மரம்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...


ம.ம.க வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர்..


-- என்றும் அன்புடன் முத்துப்பேட்டை முகைதீன்


துபாய் அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் பேரூராட்சி தேர்தலில் ம.ம.க வுக்கு ஆதரவு


ஒப்பற்ற இறைவனின் திருப்பெயரால்...


ஷார்ஜா மு.மு.க மர்கஸில் முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற தலைப்பில் முத்தப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மேலே உள்ள தலைப்பின் கீழ் அணைத்து சகோதரர்களிடமும் கருத்துக்கேட்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. இதில் சமீபகாலமாக அரசியலில் எழுச்சிபெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய பணிகளையும், கடந்த கால சமூக பணி மற்றும் சமுதாய சேவைகளையும் கருத்தில் கொண்டதோடும், அதன் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் சகோ.முஹம்மது மாலிக் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் தன்னலமற்ற சமுதாய சேவைகளை பற்றியும் அலசி ஆராய்ந்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது முத்துப்பேட்டை சகோதரர்கள் ம.ம.க வேட்பாளர் சகோ.முஹம்மது மாலிக் அவர்களை ஆதரிப்பது என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை சகோதரர்கள் அணைவரும் நமது வேட்பாளர் சகோ.மாலிக் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறவைப்போம்.


- இவண். அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள்.


குறிப்பு – அமீரகத்தில் வாழும் நமது ஊர் சகோதரர்களை தொடர்புகொண்டும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் சகோ.மாலிக் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பது என்று ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


சகோதரர் மாலிக் அவர்கள் இறைவனின் மாபெரும் உதவியால் வெற்றி பெற எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்திப்போம்.


-- அமீரகத்திலிருந்து முத்துப்பேட்டை முகைதீன்



முத்துப்பேட்டை சகோதரர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்


அதிகமான முஸ்லிம்களை உள்ளடக்கிய முத்துப்பேட்டை, பேரூராட்சி என்ற அந்தஸ்த்தோடு இந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கின்றது. முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கு வெற்றி பெற்று வந்தவர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். திமுக அதிமுக என மாறி பேரூராட்சி தலைவராக இருந்தாலும் ஊரின் நலனில் போதுமான கவனம் செலுத்தாமலேயே தங்கள் பதவி காலத்தை கழித்துள்ளனர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பேரூராட்சி மன்றத் தலைவர்களாய் பவணிவந்தவர்களெல்லாம் ஒரு சிலரை தவிற தன்னை வழர்த்துக்கொண்ட அளவிற்கு முத்துப்பேட்டையின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. ஆகவேதான் நகராட்சி அந்தஸ்து பெரும் தகுதி முத்துப்பேட்டைக்கு இருந்தும் இன்று வரை பேரூராட்சியாகவே இயங்கி வருகின்றது. நகரிலும் சொல்லத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் முத்துப்பேட்டை அடையவில்லை. காரணம் எந்த பேரூராட்சி தலைவரும் ஊரின் நலனை பற்றி சிந்திக்கவில்லை என்பதே மக்களின் கருத்து. அதையே தொன்றுத்தொட்டு தற்பொழுதும் திமுக அதிமுக என்பன போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.



அந்த வரிசையில் 16 ஆண்டு காலம் மக்கள் சேவையாற்றி வந்த த.மு.மு.க அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை முத்துப்பேட்டையில் களம் இறக்குகின்றது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலனுக்காகவும் ஊரின் நலனுக்காகவும் த.மு.மு.க வில் தன்னை அர்பணித்துக்கொண்டு பல்வேறு மக்கள் சேவைகளை களத்தில் இறங்கி செய்தும் தனது செம்மையான பணிகளின் மூலம் ஊரின் பலதரப்பட்ட மக்களிடமும் நற் பெயர் பெற்றுள்ள ம.ம.க வின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சகோ. சகோ.S.முஹம்மது மாலிக்.MA.,(POLITICAL) அவர்கள் அரசியல் களத்தில் உள்ளாட்சி அவைகளின் மூலமும் எந்த சுயநலமற்று மக்கள் பணியாற்ற ஆயத்தமாகி பேரூராட்சி மன்ற தலைவருக்கு களம் இறக்கப்பட்டுள்ளார். அரசியலில் முதுநிலை பட்டம் பெற்ற ஒரு இளைஞரை (சகோ.எஸ்.முஹம்மது மாலிக்) ம.ம.க வேட்பாளராக அறிவித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்...



ஆற்றல் மிக்க தொண்டர்களும். தொலைநோக்கு பார்வை கொண்ட நல் சிந்தனையாளர்களும், மனிதநேய பண்பாளர்களும், மக்களுக்காக தினம் தினம் உழைக்கக்கூடியவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் மூலம் களம் இறங்கி உள்ளனர்.



சமுதாயத்திற்காக சிறை சென்றும் தியாகம் செய்த ஒரு இளைய போராளியான சகோ.S.முஹம்மது மாலிக்.MA.,(POLITICAL) அவர்களுக்கு உங்களுடைய வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்வீர்...!



சுயநலம் இல்லா மக்கள் பணியாற்ற, ஊழல் இல்லா உள்ளாட்சி அமைந்திட, ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நமது பேரூராட்சி வளர்ச்சியை நோக்கி பயணிக்க வாக்களியுங்கள்…! ம.ம.க வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள்...!!



எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காகவே உழைக்கும் ஆற்றல் உடையவர்களை உங்களுடைய வாக்குகள் மூலம் தேர்ந்தெடுங்கள். முத்துப்பேட்டை முன்னேற்றம்கான நாமே அடையாளம் கண்டு நல்லவர்களை தேர்ந்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ். எதிர்வரும் 5 வருடத்தை ஊழல்வாதிகளிடமும், ஊரை அடித்து தன் உழையில் போட நினைக்கும் போலி அரசியல்வாதிகளிடமும் முத்துப்பேட்டையை ஒப்படைத்துவிட வேண்டாம். மக்களே சிந்திப்பீர்…! செயல்படுவீர்...!! நல்லவர்களை தேர்ந்தெடுப்பீர்...



மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை வேட்பாளர்கள்.


பேரூராட்சி தலைவர் – சகோ.S.முஹம்மது மாலிக்.MA.,(POLITICAL)


3 வது வார்டு – சகோ.வழக்கறிஞர்.L.தீன் முஹம்மது.BSc.,BL.,


13 வது வார்டு – சகோ.M.நெய்னா முஹம்மது


7 வது வார்டு – சகோ.S.ஜெஹபர் சாதிக்



ரத்ததானம், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ சேவைகள், கல்வி உதவிகள், வட்டியில்லா கடனுதவிகள் என எங்கேயும் எப்போதும் எல்லா சேவைகளையும் செய்து வரும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வீர்...



ஊழலை எதிர்ப்பதில் உறுதி, திறமையான நிர்வாகம், முடிவெடுப்பதில் வேகம், எளிமையான அணுகுமுறை, அடிக்கடி மக்கள் சந்திப்பு, மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள், வாய்ப்பு தாருங்கள்.


என்றும் அன்புடன் முத்துப்பேட்டை முகைதீன்