புதன், 28 ஏப்ரல், 2010

6 கோடி மக்களில் 2 1/2 கோடி பேர் டாஸ்மாக்கால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் த.மு.மு.க. தலைவர் பேச்சு.

ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. சார்பாக பாம்பனில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைஅமல்படுத்தக் கோரி சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு த.மு. மு.க. மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். பாம்பன் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹமித்துல்லா, அகமுடையார் சங்க தலைவர் ராஜாஜி, நடார் சங்கதலைவர் அனுபந்தன், விவேகானந்தா குடில் தலைவர் பிரண வனந்தா, பாம்பன் அருள் தந்தை சாமிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாகிருல்லாக்,மாநில துணை செயலாளர் கோவை செய்யது, ம.ம.க. மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் பேசினர். பேராசிரியர் ஜவாருல்லா பேசியதாவது:-
6 கோடி மக்களில்டாஸ் மாக் வருகைக்கு பின்பு 21/2 கோடிமக்கள் குடிபழக்கதிற்கு அடிமையாகி உள்ளார்கள். குறிப்பாகமாண வர்கள் மதுவுக்குஅடிமை யாக்கி இருப்பது தமிழர் களின் எதிர்காலத்தைகேள் விகுறியாக்கும் முதல்-அமைச் சர் செம்மொழி மாநாட்டில் முதல் தீர்மானமாக டாஸ் மாக் கடைகளை அகற்றி தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் எதிர்கால வாழ்க் கையை சீர்படுத்த வேண்டும். மீனவர்களின் நீண்டகால கோரிக்கையான கடல் அட்டை, அரியவகை சங்குகல் தடையை நீக்க வேண்டும். இவ்வாறுஅவர் பேசி னார்.

கூட்டத்தில் உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி யாக்க வேண்டும். பாம்பன் போலீஸ் நிலையத்தில் போதிய போலீசாரை நிய மிக்க வேண்டும். ராமேசுவரம் தீவு பகுதியை இணைக்க மேலும் ஒரு ரோடு பாலம் அமைக்கவேண்டும். தனுஷ் கோடியில் ஆபாச குளியலுக்கு தடைவிதிக்கவேண்டும். டாக்டர் அப்துல்கலாம்பெய ரில் தீவுபகுதியில் அரசு தொழில் நுட்பகல்லூரி அமைக்க வேண்டும் என் பது உள்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட் டன. த.மு.மு.க.மாவட்ட துணைசெயலாளர் அன்வர் அலி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர்


சனி, 10 ஏப்ரல், 2010

தமுமுக பாளை சாந்தி நகர் கிளை செயலாளர் சகோதரர் நவாஸ் கான் ஜனாசாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.


கடந்த திங்கள் (ஏப்ரல் 5) அன்று மதுரை ரயில் நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை வழி அனுப்பி விட்டு நெல்லை திரும்பிய தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியது. இதில் பயணம் செய்த ஏழு சகோதரர்களில் ஒருவரான பாளையங்கோட்டை சாந்தி நகர் கிளைச் செயலாளர் நவாஸ் கான் (வயது 21) தலையில் பலத்த அடியுடன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை 4 மணி அளவில் மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி...).

நவாஸ் உடல் அவசர சிகிச்சை ஊர்தியில் ஏற்றப்படுகின்றது


அவரது ஜனாசா சாந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சாந்தி நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஜனாசா தொழுகை நடைபெற்றது. பிறகு சாந்தி நகர் அடக்கவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


சகோதரர் நவாஸ் கானின் ஜனாசாவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் மற்றும் தமுமுக, மமகவின் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்டார்கள். நவாஸ் கானின் சகோதரர் ஜனாசா தொழுகையை நடத்தினார். நல்லடக்கத்திற்கு பிறகு கூடியிருந்த மக்களிடையே மவ்லவி ஜே.எஸ். ரிபாயி மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். அனைவரும் கண்ணீர் மல்க உரையை கேட்டனர்