புதன், 2 ஜூன், 2010


மனிதநேய மக்கள் கட்சி கூட்டம்
31.05.2010
அவிநாசி:

அவிநாசி நகர மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம், தேவராயன்பாளையத்தில் நடந்தது.நகர செயலாளர் அபுசாலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாலிதீன் முன்னிலை வகித்தார்.
நகர துணை செயலாளர் உமர்சாலி, த.மு.மு.க., நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் பேசினர்.


கூட்டத்தில், "அவிநாசி கடை வீதியில் 15 அடிக்கு கட்டடங்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. தற்சமயம், போக்குவரத்து நெரிசலை சரி செய்த காரணத்தாலும், இன்னும் சில மாதங்களில் புறவழிச்சாலை அமைய உள்ளதாலும், கட்டடங்கள் அகற்றம் என்பது தேவையற்றது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.


நகர பொருளாளர் ஜபருல்லாஹ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக