செவ்வாய், 10 நவம்பர், 2009

நன்றி - தினமனி

உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்ததமுமுக நிர்வாக குழுவில் முடிவு.

திருவாரூர், உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்முடிவுசெய்துள்ளது.

திருவாரூரில் நடைபெற்ற தமுமுக மாவட்ட நிர்வாக்குழு மாநிலத் தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் தமுமுக கோரிக்கைக்கு இணங்க தமிழக அரசு அறிவித்துள்ளஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் திருவாரூர்மாவட்டத்தில் உள்ள இமாம்கள்,மோதினார்கள் மட்டுமின்றி அணைத்து வக்ஃபுகளிலும் பணியாற்றும் பணியாளர்கள்,இரவு காவலர்கள் உள்ளிட்டோரை நல வாரியத்தில் உறுப்பினர்களாகசேர்ப்பதற்குரிய அணைத்து பணிகளிலும் தமுமுக வினர் ஈடுபடவேண்டும்.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டுடன்செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் சுற்றுப்பகுதிதிறந்தவெளி கழிப்பிடம் போன்று சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள்பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் இந்தசுகாதார சீர்கேட்டை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நாச்சிக்குளம் எம்.தாஜூதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.குத்துபுதீன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக