திங்கள், 9 நவம்பர், 2009

பா.ஜ.விலிருந்து விலகல் : காங்.கில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்



முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபை உறுப்பினருமான திருநாவுக்கரசர்,இன்று பா.ஜனதாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.


இத்தகவலை பின்னர் குலாம் நபி ஆசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அறிவித்தார்.


ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி,தனிக்கட்சி தொடங்கி பின்னர் அதைக்கலைத்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தவர் திருநாவுக்கரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

--வெப்துனியா--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக