புதன், 4 நவம்பர், 2009

இல்லை லவ் ஜிஹாத்: மத்திய உளவுத்துறை மறுப்பு!
லவ் ஜிஹாத் என்பது அறவே கிடை யாது கட்டாய மதமாற்றத்தைப் பரப்பும் லவ் ஜிஹாத் அல்லது ரோமியோ ஜிஹாத் என்ற அமைப்பு கேரளாவில் அறவே கிடையாது என மத்திய உளவுத்துறையான ஐ.பி. உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லி­ம் இளைஞர் களைக் குறிவைத்து சமூக அளவில் அவர்களுக்கு எதிரான சந்தேகத்தை உருவாக்கி அதன்மூலம் ஒட்டுமொத்த முஸ்லி­ம் சமுதாயத்தையும் தனிமைப்படுத்தி நாட்டை வன்முறைக் காடாக்கத் துணிந்த சக்தி முகத்தில் மத்திய உளவுத் துறையின் அறிக்கை அழுத்தமான அடுப்புக்கரியைப் பூசியுள்ளது.
லவ் ஜிஹாத் என்பது அறவே கிடை யாது கட்டாய மதமாற்றத்தைப் பரப்பும் லவ் ஜிஹாத் அல்லது ரோமியோ ஜிஹாத் என்ற அமைப்பு கேரளாவில் அறவே கிடையாது என மத்திய உளவுத்துறையான ஐ.பி. உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்­ம் இளைஞர் களைக் குறிவைத்து சமூக அளவில் அவர்களுக்கு எதிரான சந்தேகத்தை உருவாக்கி அதன்மூலம் ஒட்டுமொத்த முஸ்லி­ம் சமுதாயத்தையும் தனிமைப்படுத்தி நாட்டை வன்முறைக் காடாக்கத் துணிந்த சக்தி முகத்தில் மத்திய உளவுத் துறையின் அறிக்கை அழுத்தமான அடுப்புக்கரியைப் பூசியுள்ளது.கேரளாவில் லவ் ஜிஹாத் சர்ச்சை குறித்து முழுமையான அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் எந்த ஒரு அமைப்பும் கிடையாது என கேரள காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.கேரள டிஜிபியின் அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும் லவ் ஜிஹாத் என்ற அமைப்பு கிடையாது என அறிவித்தது.லவ் ஜிஹாத் என்ற அமைப்பு இருந்த தற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என இந்திய உளவுத்துறை சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அசிஸ்டன்ட் சொ­சிட்டர் ஜெனரல் டி.பி.எம். இப்ராஹிம்கான் தெரிவித்தார்.மத்திய அரசு லவ் ஜிஹாத் குறித்த விசாரணைக்காக கூடுதல் நேரம் எடுத்து முழுமையான விசாரணை அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லவ் ஜிஹாத் என்ற அமைப்போ, கட்டாய மத மாற்றமோ கேரளாவில் இல்லை என்ற அறிக்கை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கேரள டி.ஜி.பி. ஜேக்கப் பன்னோசின் கருத்து தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் முழுமையான அறிக்கை சமர்ப் பிக்க விடவில்லை என்றும் நீதிபதி கே.பி.சங்கரன் அளித்த தீர்ப்பினால் லவ் ஜிஹாத் சர்ச்சை மீண்டும் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளது.கேரள காவல்துறை டி.ஜி.பி.யின் அறிக்கையில் லவ் ஜிஹாத் என்ற ஒன்றுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அது குறித்து மேலும் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருவதாக தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதால் மாநில அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறை தலைவர் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடாமல் கொஞ்சம் சொதப்பலாக அறிக்கையை வெளியிட்டிருந்தது சமூகநல ஆர்வலர் கள் மற்றும் முன்னணி முஸ்லி­ம் பிரமுகர் களிடையே கடும் ஆத்திரத்தை ஏற் படுத்தியுள்ளது. கேரள அரசின் லவ் ஜிஹாத் குறித்த அறிக்கை கடும் கண்ட னத்துக்குரியது. மனம் விரும்பி மதம் மாறுவது, காதல் செய்வது, அதற்காக மதம் மாறுவது இயல்பான ஒன்று. அதனைக்கொச்சைப்படுத்துவதோடு வெளிநாட்டு நிதிஉதவியோடு மதமாற்றம் நிகழ்வதாக பரப்பப்படும் கருத்து சமூக அளவில் தேவையற்ற விபரீதத்தை விதைக்கும் என சமூகநல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரள மாநில முஸ்லி­ம் லீக் தலைவர் ஹைதர் அ­லி ஷிஹாப் தங்கள், பொதுச்செயலாளர் பி.கே. குன்சா­ குட்டி, சமஸ்தா கேரளாவின் ஜம்மியத்துல் உலமாவின் முக்கியப் பிரமுகர் பேரா. அ­க்குட்டி முஸ்­யார், அகில இந்திய ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அபூபக்கர் முஸ்லி­யார், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கேரள அமீர் டி. ஆரிஃப்அலி­, நத்வத்துல் முஜாஹித்தீன் அமைப்பின் தலைவர் டாக்டர் அப்துல் அஜீஸ், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மவ்லவி அப்துன் நாசர் மதானி ஆகியோர் தங்கள் கண்டனக் கணைகளை தெரி வித்துள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி யைச் சேர்ந்த ஷாஹின்ஷா, சிராஜுதீன் என்ற இரண்டு எம்.பி.ஏ. மாணவர்கள் இருவரும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகளைக் காதலி­த்து மண முடித் தனர். ஹிந்து மாணவிகள் இருவரும் முழு சம்மதத்துடன் இஸ்லாமிய நெறி யினை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் நாளேடுகளில் முக்கிய செய்தியானது.அதனைத் தொடர்ந்து மதவாத சக்திகள் லவ் ஜிஹாத் என்ற புளுகுக் கதைகள் புறப்படத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே லவ் ஜிஹாத் குறித்த விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய கர்நாடக மாநில புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்திருக்கிறார்.கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த முஸ்லிம் வா­லிபரை நேசித்து மணம் புரிந்தார். மைசூர் பெண் இஸ்லாமிய நெறியினை ஏற்றுக் கொண்டார். மகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி பெண்ணின் பெற் றோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து கண்ணூர் இளைஞனும், மைசூர் பெண் ணும் நீதிமன்றத்தில் நேர்நின்றனர். திருமணம் ஆன மேஜர் பெண்ணை கணவருடன் அனுப்புவது சாதாரண கிராமத்து போலீஸ் ஸ்டேஷனிலும் கூட அன்றாடம் நடைபெறும் ஒன்று என்றாலும், மாநிலத்தின் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பெற்றோருடன் அந்தப் பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. சிலி­ஜா ராஜ் என்ற 23 வயது பொறியியல் பட்டதாரிப் பெண் அஸ்கர் என்ற முஸ்லிம் இளைஞனை காத­லித்ததோடு மனம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்வதற்காக தனது காதலன் அஸ்கருடன் காத்துக்கொண்டிருக்கும் போது கர்நாடக உயர்நீதிமன்றம் தலையிட்டு சி­ஜாவை பெற்றோருடன் செல்லுமாறு கூறியது. இதற்கு உயர்நீதிமன்றம் விநோதமான சப்பைக்கட்டு ஒன்றையும் கட்டியது.அதாவது, லவ் ஜிஹாத் குறித்து நவம்பர் 13ஆம் தேதிக்குள் கர்நாடக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமாம். அதுவரை சி­லிஜா, பெற்றோருடன் இருக்க வேண்டுமாம்.இதில் வேடிக்கை என்னவெனில், காதல் ஜோடி அஷ்கர்லிசி­லிஜாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. மேஜரானா சிலி­ஜாவை கண வருடன் செல்ல அனுமதிக்காமல், பெற் றோருடன் அனுப்பியது ஏன்? என்ற முக்கிய கேள்வி உட்பட கிடுக்கிப்பிடி வினாக்களுடன் உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறி யிருக்கிறது பி.யு.சி.எல். மனித உரிமை அமைப்பு.
லவ் ஜிஹாத் சர்ச்சை தற்கா­லிகமாக அடங்கியிருப்பதாகத் தோன்றினாலும் கேரளாவில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதியும், கர்நாடகாவில் நவம்பர் 23ஆம் தேதியும் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-அபுசாலிஹ்
thanks for .tmmk.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக