திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் க்ளப் நடத்திய மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கடந்த - 20-08-2010 - அன்று வெள்ளிகிழமை துபாய் கிஸ்ஸசில் உள்ள அல் தவார் பார்கில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் க்ளப் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்ரிப் தொழுகையும் சகோதரர் பைசல் அவர்கள் எழுச்சியான மார்க்க உரையை நிகழ்த்த வந்திருந்தோர் அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. இதில் நமது முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்.)

நமதூர் சகோதரர்களை ஒன்றாக சந்தித்த மனதிருப்த்தியுடன் அனைத்து சகோதரர்களும் உற்சாகமாய் தங்கள் பகுதியை நோக்கி சென்றனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் க்ளப் சகோதரர்கள் செய்திருந்தனர்.

அங்கே இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....








செய்தி - முத்துப்பேட்டை முகைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக