திங்கள், 2 ஆகஸ்ட், 2010


கணினி, செல்போன் இலவச பயிற்சி முகாம்

சிவகங்கை, ஜூலை 30: மனித நேய மக்கள் கட்சி சார்பில் இலவசமாக கணினி ஹார்டுவேர் மற்றும் செல்போன் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

இதன் துவக்க விழாவில், டி.எஸ்.பி. மணிவண்ணன் பங்கேற்றார். குறைந்தது 10 நாள்களில் பயிற்சி முடிக்கும் விதமாக பல்வேறு தொழில் பயிற்சிகளை இக் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

இதில் புதிதாக மேற்கண்ட இரண்டு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழாவில், டி.எஸ்.பி. மணிவண்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் டி.எஸ். நகீப் பேசுகையில், பயிற்சி பெற யார் வேண்டுமானாலும் வரலாம். தினமும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இங்கு பயிற்சி பெற்ற 3 மாணவர்கள் ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேசக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்றார்.


நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக