ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தம்மாமில் கிழக்கு மண்டல தமுமுகவின் 40 வது செயற்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சவூதி அரேபிய கிழக்கு மாகாண அமைப்பின் 40-வது செயற்குழு கூட்டம் கடந்த (30-07-2010)வெள்ளியன்று தம்மாம் நகரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு மண்டல துணை தலைவரும் ஊடகத்துறை பொறுப்பாளருமாகிய சகோ.அப்துல் காதர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். தம்மாம் நகர தமுமுக தலைவர் சகோ.இப்ராஹிம்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சகோ.அப்துல் காதர் தனது தலைமையுரையில், “ ஊடக உலகில் விமர்சனங்களை எதிர்கொண்டு அவற்றிற்கு தக்க பதிலளிக்கும் திறமையினை இயக்க சகோதரர்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கேற்ப ஊடகத்துறையில் இயக்க சகோதரர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார்.மேலும் கடந்த 15 ஆண்டுகளில் ஃபித்ரா வினியோகத்தில் தமுமுக ஆற்றி வரும் சிறப்பான பணியினையும் குறிப்பிட்டார்.

கிளை வாரியான ஆய்வினை மண்டல பொதுச்செயலாளார் சகோ.செய்யத் இஸ்மாயில் மேற்கொண்டார்.

ஷஹாபுதீன் (அல்ஹஸா), அஜிஸ் ரஹ்மான் (அப்கேக்), நிஸார் (ஜுபைல்), சலீம் கான் (ரஹீமா), ஷாஹுல் ஹமீது (ஷிஹாத்), ஹாஜா மெய்தீன் (அல்கோபார்), இப்ராஹிம்ஷா (தம்மாம்) ஆகியோர் தங்களது கிளைகளில் கடந்த மண்டல செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நடைப்பெற்ற நிகழ்ச்சிகள், உறுப்பினர் சேர்க்கை, போன்ற விவர அறிக்கையினை கூட்டத்தில் தாக்கல் செய்தனர். சிறந்த கிளைகளாக ஜுபைல், அல்கோபார் ஆகியவை அறிவிக்கப்பட்டது.

தஜ்கியா நிகழ்ச்சியில் உரையாற்றிய பொறியாளார். சகோ.ஜக்கரியா, “வெற்றி என்பது, “ ஒரு நபர் தான் ஒருவர் மட்டும் சொர்க்கத்திற்கு செல்லாமல் மற்றவர்களையும் சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே ஆகும்.
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையினை கொடுத்திருக்கிறான், அந்த திறமை சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் ஒவ்வொருவரும் தனது திறமைகளை மேலும் வளர்த்து கொண்டு அதனடிப்படையில் செயல்பாடுகளை அமைத்து சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும், இதற்கான கேள்வியும் மறுமையில் உண்டு என்றார்.

ஜும்ஆ பேருரையினை ஜுபைல் நகர தலைவர் சகோ.ஷரீப் பாகவி நிகழ்த்தினார்.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு முறையினை ஒவ்வொருவரும் தம் வாழ்வில் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் தொடங்கிய இரண்டாவது அமர்வில் நிசார் அலி ஆளுமைத்திறன் குறித்து பேசினார். தொடர்ந்து பேச்சு திறனுக்கான குறிப்புகளை மண்டல துணைச் செயலாளர் சகோ.அப்கேக் அப்துல் அலீம் வழங்கினார்.
தாயகத்திலிருந்து அலைப்பேசி வழியாக உரை நிகழ்த்திய தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ் நோன்பின் மாண்பினையும், நோன்பு தரும் படிப்பினையும் குறித்து பேசியதோடு “தமுமுக மற்றும் ம.ம.க பணிகள் இன்னும் வலுப்படுத்திட ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றார்,
தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சிறப்புரையாற்றிய கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி தனது உரையில், அல்லாஹ் உதவியால் தமுமுக அமைப்பு ரீதியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. சமுதாய முன்னேற்றத்தினையே ஒரே நோக்கமாக கொண்டு உதவி செய்யும் மனப்பான்மை நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நிறைவுச் செய்தார்.
இறுதியாக சகோ. சீனி முஹம்மது நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான அரங்க, மற்றும் உணவு ஏற்பாடுகளை சகோ.இப்ராஹிம்ஷா தலைமையில் தம்மாம் நகர தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


செய்தியாளர்: ஹம்துன் அப்பாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக