ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ராசல் கைமா மண்டலம் கடந்த 20.08.2010 அன்று இரவு ராசல் கைமா - அல் நக்கில் வீணஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை நடத்தியது".
மாநாட்டு அரங்கத்தில் மாலை 9.30 மணிக்கு சகோ.அப்துல் ஹன்னான் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ராசல் கைமா மண்டல தலைவர் சகோ. குடந்தை ஜாப்பர், மண்டல துணை தலைவர் கடியாச்சேரி ஹாஜா முகைதீன், பொருளாலர் செங்கோட்டை அப்துல் ஹமிது, மண்டல ஆலோசகர் தோப்புத்துரை ஆதம்.ஆரிபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசல் கைமா மண்டல செயளாலர் பொதக்குடி ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் பின்னர் அமீரக தலைவர் சகோ. அப்துல் ஹாதி அவர்கள் மாநாட்டுக்கு தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தினார்.



மாநாட்டில் திரளானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர், பின்னர் சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்பட்டது.
இம்மாநாட்டுக்கு ராசல் கைமா மண்டல நிர்வாகிகள் சில இன்னல்களிடைய வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது அனைவரையும் திகைக்க வைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக