சனி, 30 அக்டோபர், 2010

இரத்த தானம்! தமுமுகவிற்கு தொடரும் விருதுகள்!!

தமிழகத்தில் மனித நேயப்பணிகளை ஆற்றிவரும் தமுமுக முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடமும் மிகுந்த பேராதரவை பெற்று வருவது தெரிந்ததே.இந்நிலையில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்று குழுமம் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது கொடுத்து ஊக்குவித்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் விருதுகள் வழங்கும் விழா 30.10.2010 அன்று நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்ட இரத்ததான விருதுகளை வழங்கியது.

அவசர இரத்ததான சேவையில் இவ்வருடம் தமுமுக பெறும் சாதனைப் பெற்றிருக்கிறது. . இவ்வருடம் (முகாம்கள் நீங்கலாக) 1723 யூனிட் ரத்தங்களை அவசர உதவிகளுக்கு வழங்கியமைக்காக தமுமுக விருதினைப் பெற்றது. இதனை தமுமுக மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்டத் தலைவர் சீனி முகம்மது ஆகியோர் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம். ஆர்,கே. பன்னீர் செல்வம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

சென்னை மாவட்ட தமுமுகவுக்கு 100 பேருக்கு அதிகமாக கொடுத்த கிளைகள் என்ற அளவில் 3 விருதுகள் (புழல் திருவல்லிக்கேணி மற்றும் தி.நகர்) கிடைத்தது. மற்ற கிளைகள் முறையாக பதிவு செய்யாததால் விருது பெறும் வாய்ப்பினைப் பெறவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி,கே,சுப்புராஜ் ஐ.ஏ.எஸ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குநர்கள் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் பெ. அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அமைச்சர் பன்னீர் செல்வமும் சென்னை மாநகர மேயர; மா. சுப்ரமணியமும் அனைத்து சமூக மக்களுக்கும் சேவை செய்து வரும் தமுமுகவின் மனிதநேயப்பணிகளைப் பாராட்டிப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக