திங்கள், 4 நவம்பர், 2013

கிணற்றில் விழந்துவிட்ட முதியவர் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் உதவி புரிந்த தமுமுக


திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 01.11.2013 அன்று மதியம் 3 .00 மணியளவில் ஒரு முதியவர் கிணற்றில் தடுமாறி விழுந்துவிட்டார். சம்பவத்தை நேரில் பாற்ற சிலர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க அவர்கள் தீயணைப்பு வீரர்கள் மூலம் அவரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். கடும் முயற்சிக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார். 

இத்தகவலை அறிந்து தமுமுக ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அம்முதியவரை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக