ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
திருவாரூர் மாவட்ட தமுமுகவின் இரத்த தேவை,ஆம்புலன்ஸ் தொடர்புக்கு
புதன், 15 ஆகஸ்ட், 2012
கடலூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜின்னா பாய் அவர்கள் மரணம். ஒரு தொண்டனின் உருக்கமான கடிதம்.
தலைவரே............
இவரது களப்பணியை கண்டு பொறுக்காத காவல் துறை இவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை புனைந்து இவரை முடக்க சதி செய்தது.இவரது ஊர் ஜமாஅத் கூட இவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை
இந்த துயரங்கள்ஒருபுறமிருக்க 2004 ஆம் ஆண்டு இந்த பேரியக்கத்தில்
படிக் கற்களாக்கி சமுதாயப் பேரமைப்பை வீரியத்தோடு வழிநடத்தினார்.
இதனால் கழகம் எனும் எல்லையை தாண்டி சமுதாய மக்களிடத்தில்"ஒரு
மக்கள் தலைவனாக"உருவெடுத்தார். இவரை புறக்கணித்த ஊர் ஜமாஅத்தார்களும் இவரை அரவணைத்துக் கொண்டனர்.
இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் தமுமுக வடக்கு தெற்கு என்று இரண்டாக செயல்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது அல்லாஹ்வின் கிருபையால் தலைவர் ஜின்னா அவர்களின் உழைப்புதான்.
இன்றைக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றும் சகோதரர் நெய்வேலி அபூபக்கர் சித்திக்,வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக வின் இன்றைய தலைவர் மானியம் ஆடூர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் போன்ற கழகத்தின் தளபதிகள் அனைவரும் தலைவர் ஜின்னாவின் பாசறையில் பயின்ற போராளிகளாவர்.
கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கொள்ளுமேடு கிளை தமுமுக சகோதரர்கள் இதற்காக மும்முரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தனர்.அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்து அதன் படி மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினோம்.
(இந்த பட்டாம்பாக்கம் ரசாக் அவர்கள் தமுமுக 2004 ஆம் ஆண்டு பிரிவினை ஏற்படும் வரைக்கும் தமுமுகவின் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தவர்.பின்னர் ததஜவுக்கு போய் அங்கே மாவட்ட செயலாளராக இருந்து,பின்னர் மாநில நிர்வாகியாக இருந்து கொண்டிருந்த சமயம்.)
உடனே தலைவர் வஜ்ஹுல்லாஹ்விடமும்,என்னிடமும் "நீங்க ரெண்டு பெரும் ரஜாக்'க்கு கிட்ட பேசிட்டு இருங்க... அந்த கேப்புல நான் வந்து அங்கே நுழைஞ்சிடுறேன்"என்றார்.நாங்கள் "என்ன....? என்று அவரிடம் கேட்ட பொது.. "தமுமுகவிலிருந்து ரஜாக் வெளியில் போனதிலேர்ந்து அவரை நான் சந்திக்கவும் இல்லை... போன்ல பேசலாம்ன்னு அவர் மொபைல்க்கு போன் செஞ்சா அப்பவும் அவர்கிட்ட பேச முடியிறது இல்ல...இன்னிக்கி நல்ல சந்தர்பம்.. ரஜாக்'கை எப்படியாவது சந்திச்சிரனும். என்றார்.
கடந்த ஆண்டு சிதம்பரம் நகருக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வருகை தந்த போது,அன்றைய தினத்தில் தான் தலைவரை நான் கடைசியாக நேரில் சந்தித்தேன்.கடந்த ரமளானில் திடீரென நான் அமீரகத்துக்கு புறப்பட வேண்டிய கட்டாய சூழல் உருவான போது ,தலைவரை நேரில் சென்று சந்தித்து என்னால் விடைபெற முடியவில்லை.. விமான நிலையத்துக்கு காரில் பயணித்துக் கொண்டே.. தலைவரிடம் பயணம் சொன்னேன்.அப்பொழுது கூட அவர் என்னிடம்... "என்ன ரிபாயி... உன்கிட்ட நேரில் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்... முடியாமல் போயிடுச்சே..."என்று வருத்தப் பட்டார்.தொலைபேசியிலேயே நீண்ட
தலைவரே...... என்று உம்மை நான் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... "சொல்லுங்க ரிபாய்"..... என்று சொல்வீரே.... இனி உன் குரலை கேட்க முடியாமல் போயிடுச்சே.......
அல்லாஹ் உமது பாவங்களை மன்னித்து உமது சேவைகளை அங்கீகரித்து... ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் உம்மை சேர்ப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி
சனி, 4 ஆகஸ்ட், 2012
அன்பான அதிரை சொந்தங்களே..!!
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான அதிரை சொந்தங்களே..
அதிரை தமுமுக கிளை சார்பாக இந்த வருடம் (2012) சஹர் உணவு பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் நோன்பு பிறை ஒன்று முதல் மிக சிறப்பாக அதிரை ஜாவியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வெளியூர் நோன்பாளிகள் பயன்பெற்றுவருகிறார்கள்.
எங்கள் சமுதாய சேவைகளுக்கு உதவிகள் செய்துவரும் எல்லா நல்லுள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. எங்கள் சமுதாய சேவை தொடர் நீங்கள் அனைவரும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.
இப்படிக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
த.மு.மு.க. நகர கிளை - அதிரை
தொலைபேசி : 9003127748, 9942033233
அதிரை தமுமுக நகர கிளை
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம்
வியாழன், 26 ஜூலை, 2012
புனிதமிகு ரமளான் மாதத்தில் இறைவனிடம் இறைஞ்சுவோம் சொந்தங்களுக்காக....!
புதன், 8 பிப்ரவரி, 2012
இந்திய ஹாஜிகளோடு உளவாளிகளா?
உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தோனேஷியா. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 20 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்தோனேஷியாவில் 90 சதவீதம் பெரும்பான்மையினராக முஸ்லிம்களே வாழ்வதால் அதில் சிறப்பு எதுவுமில்லை. ஆனால், இந்துக்கள் 75 சதவீதம் பெரும்பான்மையினராக வாழும் இந்தியாவில்; சிறுபான்மையினராகவும், சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராகவும் முஸ்லிம்கள் வாழ்வதுதான் சிறப்பு.
தாங்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு தேசத்தில்; தங்களின் அடையாளங்களை இழக்காமல், உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டே தங்களை முஸ்லிம்களாக முன்னிறுத்திக் கொள்ளும் அவர்களது உறுதி உலக முஸ்லிம்களுக்கே முன்மாதிரி என்றால் அது மிகையில்லை. தங்களை கொள்கையால் முஸ்லிம்கள் என்று துணிந்து முழங்கும் அதே வேளையில்; தங்களை இந்தியர்கள் என்று துணிந்து முழங்குவதிலும் அவர்கள் உறுதிமிக்க தேசப்பற்றாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களின் தூய்மையான தேசப்பற்றை சில மதவெறி சக்திகள் களங்கப்படுத்தினாலும் அவர்களது நேர்மையில் மாற்றமில்லை.
ஆனால் "செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலுக்குப்" பிறகு உலகெங்கும் பயங்கரவாத பீதி திட்டமிட்டு ஏகாதிபத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தை பயங்கரவாதப் பாசறையாகவும், முஸ்லிம்களைத் தீவிரவாத சக்திகளாகவும் பார்க்கும் மனநோயாளிகளின் வரிசையில் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
முஸ்லிம் அமைப்புகளை நடத்தும் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மதரஸாக்கள் கண்காணிக்கப்படுகின்றன. பல உலமாக்கள் பின்தொடரப்படுகிறார்கள். ஆனால், இந்த கோழைத்தனமான செயல்பாடுகளைக் கண்டு யாரும் கலங்கிடவில்லை. மாறாக மேலும் உறுதி பூண்டு தங்களின் பணிகளை செய்கிறார்கள். இப்போது வெளிவந்திருக்கும் புதிய செய்தி என்னவெனில், இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணிகளை உளவுபார்க்கும் வகையில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளை ஹாஜிகள் போர்வையில் உளவு அமைப்புகள் அனுப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த பல ஆண்டுகளாகவே இவ்வாறு நடப்பதாகவும், இவ்வருடம் அங்கு கூடிய தமிழக ஹாஜிகளுக்கு மத்தியில் அப்படி ஒரு உளவாளியை இவ்வருடம் சந்திக்க நேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து செல்லும் ஹாஜிகள் அங்கு என்ன செய்கிறார்கள்? வெளிநாட்டு ஹாஜிகளோடு என்ன பேசுகிறார்கள்? அங்கு வேறெதுவும் அரசியல் சந்திப்புகள் நடக்கிறதா? என்பதெல்லாம் உளவாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே காஷ்மீரிலிருந்து புறப்படும் ஹாஜிகளுக்கு மத்தியில் இப்படி உளவாளிகள் அனுப்பப்படுகிறார்கள் என்ற பேச்சு இருந்தது. இப்போது எல்லா மாநிலங்களிலிருந்தும் ஹாஜிகளைக் கண்காணிக்க ஏற்பாடுகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது.
முஸ்லிம்கள் தங்களின் ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை மிகுந்த பயபக்தியோடும், ஒழுக்க விதிகளோடும், வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதி ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தங்கள் ஹஜ் பயணத்தில் வணிகம் செய்ய மார்க்கம் அனுமதித்திருந்தும் அதைச் செய்வதில்லை. ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு வேறுபல நாடுகளுக்கு சுற்றுலாச் செல்ல வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதில்லை. வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி, அந்த மனதிருப்தியோடு தாயகம் திரும்பி, தங்கள் உற்றார் உறவினர்களை சந்திப்பதில் அவர்கள் திருப்தியுறுகிறார்கள்.
அவர்கள் மெக்காவிலோ, மதீனாவிலோ அரசியல் நிகழ்வுகளில்; சொற்பொழிவுகளில் பங்கேற்க சவூதி அரசு அனுமதிப்பதில்லை. புனிதப் பயணத்தில் வணக்க வழிபாடுகளைத் தவிர்த்த இதர விஷயங்களாகப் பேச ஹாஜிகளும் ஆர்வப்படுவதில்லை. அங்கு கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தையும் இறைவனை துதிப்பதிலேயேதான் அவர்களது கவனம் இருக்கும். இதுவே இந்திய ஹாஜிகளின் யதார்த்த நிலையாகும். இந்திய ஹாஜிகள் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இருந்தும் வரக்கூடிய ஹாஜிகளின் நிலையும் இதுதான். உண்மைகள் இப்படியிருக்கும் போது, இந்திய ஹாஜிகளை உளவு பார்ப்பது என்பது இந்திய முஸ்லிம்களின் இதயத்தை ஈட்டியால் குத்தும் செயலாகும். அவர்களது தேசப்பற்றையும், ஹஜ் பயணத்தின் நேர்மையையும் சந்தேகிப்பது அயோக்கியத்தனமான & கண்டிக்கத்தக்க செயலாகும்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பவேண்டும். உண்மை என்ன என்பது குறித்து இந்தியப் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும். இது பிரதமரின் அனுமதியோடுதான் நடக்கிறதா? அல்லது ஐ.பி. மற்றும் ரா உளவு அமைப்புகளில் செயல்படும் மதவெறி பிடித்த அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவின்படி நடக்கிறதா? என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது உண்மையென தெரிந்தால், மத்திய அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இதுபோன்ற ஈனத்தனமான நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய முஸ்லிம்களின் மார்க்கக் கடமையை உளவுபார்ப்பதையும், தேசப்பற்றை சந்தேகிப்பதையும் அனுமதிக்க முடியாது.
மக்கள் உரிமை தலையங்கம் ஜன. 27 - பிப். 2, 2
செவ்வாய், 7 பிப்ரவரி, 2012
வியாழன், 2 பிப்ரவரி, 2012
அன்பார்ந்த சகோதர்களே....
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக.கடந்த 1995ல் மார்ச் 3ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பார்சல் குண்டு சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதில் ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அடக்கம்.
இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. இதை தீர்ப்பில் நீதிபதியே குறிப்பிடுகிறார்.தீர்ப்பின் 49ம் பக்கத்தில் 13ம் பாராவில் கீழ்க்கண்டவாறு நீதிபதி குறிப்பிடுகிறார்.
Admittedly, There is no eye witness to the occurrence. The prosecution relied upon and put forward the circumstantial evidence to prove it's case.
(அதாவது இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே சாட்சியங்களாக இருக்கின்றனவாம்!)
இந்நிலையில் நேரடி ஆதாரங்கள் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், யூகங்களையும் முன்வைத்து தீர்ப்பளிப்பது என்ன நியாயம்? குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் பாரபட்சத்தோடு & ஒரு முன் முடிவின் அடிப்படையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளதோ என சந்தேகம் வலுக்கிறது.
சாட்சியங்கள் இல்லாத ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கும் முடிவு ஒரு கொடுமை அல்லவா? ஒரு சமுதாயத்தின் முக்கிய தலைவருக்கே இந்நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்ன? நாடு முழுக்க பொய் வழக்குகளில் சிறைகளில் வாடும் அப்பாவிகளின் நிலைதான் என்ன-? நினைக்கும்போது குலை நடுங்குகிறது.
முஸ்லிம்கள் தொடர்பான வழக்குகளில் மட்டும் இந்திய நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக தீர்ப்பளிக்கின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும்.
இந்திய நீதி மன்றங்கள் ஊழல் மயமாகி வருகின்றன. சாதி, மத வெறியர்களின் ஆதிக்கத்தில் திணறுகின்றன. நீதி கொள்ளப்படுகிறது.
வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால், எப்படியாவது; யாருக்காவது தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என முன்முடிவோடு நீதிமன்றங்கள் செயல்படுவது என்ன நியாயம்?
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் முதல் நாடளுமன்ற தாக்குதல் வழக்கில் சிறையிலிருக்கும் அப்சல் குரு வரை பல அப்பாவிகளின் வாழ்வு இப்படிதான் நசுக்கப்படுகிறதோ...?
நியாயவான்களே! யாரும் மனம் கலங்காதீர்கள்!!
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)
இவ்வழக்கை துணிந்து எதிர்கொள்வோம். உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம். ஜே.எஸ்.ரிபாயி உட்பட அப்பாவிகளை மீட்போம்.
நாங்கள் கடலில் மிதக்கும் கட்டுமரங்கள் அல்ல. அலைகடலை கிழிக்கும் போர் கப்பல்கள் என்பதை ஜனநாயக வழியில் நிரூபிப்போம்.
ஒவ்வொரு வீழ்ச்சியில் இருந்து தான் எங்களின் வளர்ச்சிகள் தொடங்குகின்றன. இதை ஆதிக்க சக்திகளுக்கு சொல்லி வைக்கிறோம்.
-- எம் - தமிமுன் அன்சாரி
ஞாயிறு, 29 ஜனவரி, 2012
த.மு.முக மற்றும் ம.ம.க வின் மாநில செயற்குழுவும், பொதுக்குழுவும் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. தாம்பரத்தில் 27 ம் தேதி காலை 10 மணிக்கு நிர்வாகக்குழுவும் அதனை தொடர்ந்து 11 மணிக்கு மாநில செயற்குழுவும் நடைபெற்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த நாள் 28 ம் தேதி தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கலைக்கல்லூரியில் த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் மாநில பொதுக்குழு கூடியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த கழக மற்றும் கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகள் சங்கமத்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
1995ல் சமுதாய உரிமைகளை மீட்டெடுக்க உருவெடுத்த தமுமுக என்ற பேரியக்கம் பல சோதனைகளுக்கு மத்தியில் இறைவனின் மாபெரும் கிருபையால் ஓயாத கடல் அலைகள் போல அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் வறியவர்க்கு உதவி, மாணவ செல்வங்களுக்கு உதவி, இரத்தம் தேவைப்படுவர்களுக்கு இரத்த உதவி, மற்றும் அவசர உதவி என விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் உழைத்துக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பொதுக்குழுவில் பல விவாதங்கள் நடைப்பெற்றாலும் புதிய நிர்வாகிகள் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
ஏனெனில் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்வும், அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கும் அண்ணன் S.ஹைதர் அலி சாஹிப் அவர்களும் சீரிய வழிநடத்தலால் இயக்கத்தை சிலர் கூறுப்போட முயற்சித்தபோதும் கடுமையான சோதனையை இயக்கம் சந்திதப்போதும் மனம் தளராமல், பயப்படாமல் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு சென்ற உன்னத தலைவர்கள். தமுமுக வின் சட்டவிதிகளின் படி ஒருவர் குறைந்தபட்சம் மூன்று முறை பதவி வகிக்கலாம். அதற்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற விதிகளின் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ், அண்ணன் S.ஹைதர் அலி ஆகிய இருவருமே பதவியில் தொடர முடியாது என்பதால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியோடு இந்த பொதுக்குழு மேலும் முக்கியத்துவம் பெற்றது.
புறம் பேசுபவர்களும் வாழ்நாள் முழுவதும் பதவியை பிடித்துக்கொண்டே வாழ வேண்டும் என்ற சுயநோக்கு கொண்டவர்களும் அதிகம் பொதுக்குழு முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர் . பலர் அவர்களே மீண்டும் பதவிக்கு வரும் வகையில் சட்டவிதி மற்ற இயக்கங்கள் போல் மாற்றப்படும் என எதிர்பார்த்தனர். இவர்கள் அனைவருக்கும் சம்மட்டியடி கொடுக்கும் வகையில் தமுமுக வின் பொதுக்குழு முடிவுகள் அமைந்துள்ளன. தமுமுக மாநில நிர்வாகிகள் பதவி மோகம் பிடித்தவர்கள் இல்லை என்பதையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தனிநபர் துதிப்பாடிகள் இல்லை என்பதையும் இவ்வுலக மக்களுக்கு தெளிவாக்கப்பட்டிருக்கிறது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
தொடரட்டும் தமுமுகவின் பயணம் ....
மலரட்டும் சமுதாய மறுமலர்ச்சி .....
என்ற முழக்கத்தோடு இறைவனிடம் அனைவரும் இரு கை ஏந்தி பிரார்த்திப்போம்.








தலைவர் – த.மு.மு.க மற்றும் ம.ம.க
மவ்லவி. J.S.ரிஃபாயி ரஷாதி
சகோ.பி.அப்துல் சமது
சகோ.O.U.ரஹ்மத்துல்லாஹ்
அண்ணன் M.தமிமுன் அன்சாரி
சனி, 28 ஜனவரி, 2012

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தன் சொந்த சமுதாயத்தினரின் காலை வாரிவிடும் துரோக செயல்களுக்கு மத்தியிலும், பல்வேறு வசைபாடல்களுக்கு மத்தியிலும் வெற்றி பாதையை நோக்கி தமுமுகவை அழைத்து சென்று வீரநடை போடவைத்த தமுமுகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் கிட்டதட்ட 15 ஆண்டுகள் பதவிவகித்த பேராசிரியர்.முனைவர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், அண்ணன் செ.ஹைதர் அலி அவர்களும் தமுமுகவின் கொள்கை விதிகளின் படி தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவியிலிருந்து தற்பொழுது விடுபடுகின்றார்கள். தடைகளை தகர்த்த வரலாறும், அடக்குமுறைகளை கண்டு வீருகொண்டு எழுந்த வீரியத்தையும் த.மு.மு.கவுக்கு பெற்றுக்கொடுத்த பெறுமை இவர்கள் இருவரையும் சாரும் என்றால் அது மிகையாகாது. அப்படிபட்ட கம்பீரத்தோடு தனக்கே உரியபானியில் தொடர்ந்து சமுதாய பணியாற்றி வந்து கொண்டிருக்கும் த.மு.மு.க வின் அடுத்த தலைவர்களுக்கு இவர்கள் இருவர்களும் வழிவிட்டு மூத்த தலைவர்களாய் இருந்து இன்ஷா அல்லாஹ் வழிநடத்துவார்கள்.
எத்தனை எத்தனை போராட்டங்கள், எழுச்சி மிகுந்த ஆர்பாட்டங்கள், ஒற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடுகள், எண்ணிலடங்கா பொதுக்கூட்டங்கள், தமிழகளவில் பிரமாண்ட மாநாடுகள் என தடைகளை உடைத்தெரிந்தே களம் அமைத்தவர்கள், சிதறிக்கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை தனது உரிமைக்காக போராட்டக்குணத்தோடு படைகளாக புறப்படவைத்தவர்கள், நமது உரிமைகளுக்காக அரசு கதவுகளை தட்டுவோம் சினங்கொண்டுவா என சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்தவர்கள், தங்களது குருதிகளால் தமிழகத்தில் மனிதநேயத்தை மலரச்செய்தவர்கள், அவசர உதவிகளுக்கு சாதி,மதம் பாராது ஓடோடி உழைக்கின்றவர்கள் என கம்பீர மிடுக்கை த.மு.முக வுக்கு உருவாக்கிய தலைவர்கள் வழிவிடுகின்றார்கள் அடுத்த தலைமுறையினர்களுக்கு....
யா அல்லாஹ் எந்த சுயநலமும் இல்லாமல் சமுதாயத்துக்காய் அயறாது உழைத்த, உழைக்க இருக்கின்ற த.மு.மு.க வின் சமுதாய போராளிகள் அணைவருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும் தந்து தொடர்ந்து சமுதாயத்திற்கு போராட வழிவகுத்துத்தருவாயாக....
சமுதாய பாசத்துடன் முத்துப்பேட்டை முகைதீன்