செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!

1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010


மதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம்

இன்று விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்தது.வழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட்டத்தினர் மதுக்கூரை கடக்கும் போது 6 கடைகளையும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இதனால் நிலைமை பதட்டமானது மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுப் படுத்த முடியவில்லை இதன் பதிலடியாக ஊர்வலத்தில் ஒரு சிலர் கல்வீசியிருக்கிரார்கள் .எப்போதும் 50 க்கும் குறைவான எண்ணிக்கைகள் செல்லக்கூடிய ஊர்வலத்தில் 100 மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்,முத்துப்பேட்டையில் தங்களது எண்ணத்தைசெயலாற்ற முடியாதவர்கள் மதுக்கூரில் நிறைவேற்றி உள்ளார்கள்.இந்நிலையில் தமுமுக ,மமக மற்றும் PFI நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது ஊர்வலத்தில் முதலில் வன்முறை துவக்கியவர்களை கைது செய்யவில்லை ,நேற்று மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் தமுமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார் ,அதன் அடிப்படையில் அமைதிஏற்படுத்திக் கொண்டிருந்த தமுமுக மமக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது, உடனடியாக மமக மாவட்டச் செயலாளர் கலந்தர் அவர்கள் மமக மாநில துணைச் செயலாளர் தமிம் அன்சாரி அவர்களை தொடர்புக் கொண்டு விபரங்களைக் கூறினார் ,உடனடியாக தமிம் அன்சாரி அவர்கள் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புக் கொண்டு கைது செய்யப்பட்ட தமுமுக மமக மற்றும் இதர அப்பாவிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.மதுக்கூரில் இதர சட்டநடவடிக்கைகளை மேற்க்கொள்ள சகோதரரர் ராவத்தர்ஷா தலைமையில் ஒருக் குழுவினர் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள், தொடர்ந்து தமுமுக தலைமை மதுக்கூர் நிலைமையை கவனத்துடன் அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

சென்னையில் பெருநாள் தொழுகை-தமுமுக தலைவர் ஈகைத்திருநாள் உரை.

உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே தினத்தில் (வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10) பெருநாள் கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருத்தாசலம், திண்டுக்கல் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய ஊர்களில் வியாழன் மாலை பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்தார்.

இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் ஈகைத் திருநாள் (செப்டம்பர் 10) அன்று பிராட்வே டான் பாஸ்கோ விளையாட்டு திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பெருநாள் பேரூரை ஆற்றினார். அவர் தமது உரையில் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

(பிராட்வேயில் ஈகைத்திருநாள் தொழுகையில் பங்குக் கொண்ட பெண்களின் ஒரு பகுதி)

ஈகைத் தொழுகைக்கு பிறகு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் தமுமுக தலைவரும் பொதுச் செயலாளரும் )
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி உட்பட தமுமுக நிர்வாகிகள் ஏரளாமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்குக் கொண்டார்கள். மழையின் காரணமாக திடல் நனைந்திருந்ததால் அங்கேயே மாற்று ஏற்பாடு செய்து தொழுகை நடத்தப்பட்டது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

சகோதரரர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை தமுமுக வலைத்தளம் சார்பாக இனிய நோன்பு பெருநாள் நல வாழ்த்துக்கள்.


அன்புச்சகோதரர்களே புனித மிகு 'ரமலான்' மாதத்தை கடந்து 'ஷவ்வால்’ மதத்தின் முதல் நாளில் பெருநாள் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எங்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்... இந் நன்நாளில் முஸ்லிம்கள் அணைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தோடும்,பாசப்பிணைப்போடும்,வாழ் வாங்கு வாழ்வதற்கும். காவிய பயங்கரவாதிகளாலும், ஆட்சி அதிகாரம் படைத்த அதிகார வர்க்கங்களாலும் நம் சமுதாயத்திற்கு எதிராய் செய்யப்படும் சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வளம்பெற செய்ய எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
அன்புடன் - முத்துப்பேட்டை முகைதீன்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அமீரகத்தில் தமீமுன் அன்சாரியுடன் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இந்த புனித மிகு ரமலான் மாதத்தில் சுற்றுபயணமாக தாயகத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்திருக்கும் தமுமுகவின் முன்னாள் மாநில செயலாளர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர், மக்கள் உரிமையின் ஆசிரியர் சகோதரர்.எம்.தமீமுன் அன்சாரி. அவர்களை முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் - 03-09-2010 - வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து தமிழக செயல்பாடுகள் மற்றும் முத்துப்பேட்டை தமுமுகவின் செயல்பாடுகள் குறித்தும் விவாதம் நடத்தினர்.

அமீரக செயலாளர் சகோதரர் யாசின் நூருல்லாஹ் மற்றும் துணை செயலாளர் சகோதரர் டாக்டர்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக வாழ் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு நமது ஊரில் உள்ள நமது தமுமுக சகோதரர்களை உற்ச்சாகப்படுத்தி இன்னும் கள(கழக)ப்பனிகளை அதிகப்படுத்துவது அதற்கான தேவைகளை நம்மால் முடிந்தளவு உதவுவது அவர்களின் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பது போன்ற முடிவுகளை தாங்கியவர்களாக தங்கள் பகுதியை நோக்கி சென்றனர். எல்லா புகழும் இறைவனுக்கே!

இதில் கலந்து கொண்ட சகோதரர்களின் விவரம் :-

@ தம்பிமா (எ) அஹமது ஜலால் - – 00971-50-8642798 -

@ ஷாகுல் ஹமீது – 00971-50-3958652 -

@ உமர் நத்தர்சா – 00971-55-2946254 -

@ முகம்மது ரியாசுதீன் – 00971-55-6332638 -

@ ஷாஜஹான் – 00971-55-8284963 -

@ முகம்மது ஆரிப் – 00971-50-8561085 -

@ முகம்மது பிலாலுதீன் – 00971-50-8786513 -

@ முகைதீன் பிச்சை – 00971-55-7542001 -

தங்களது சொந்த பணிகள் காரணமாக வரமுடியாத நமது முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் நமது முடிவை அங்கீகரித்து கொண்டார்கள் அவர்களும் நம்மோடு சேர்ந்து முத்துப்பேட்டை தமுமுகவிற்கு பக்கபலாமாக இருப்பதாகவும் நம்மிடம் கூறினார்கள் அவர்களின் விவரம்:-

@ அப்துல் மாலிக் (சியா) ) – 00971-50-3956636 -

@ அஜீஸ் ரஹ்மான் – 00971-50-5717076 -

@ ரஹ்ப் – 00971-50-7765912 -

@ மைதீன்

@ அஹமது கபீர் – 00971-50-1795288 -

@ வாவா ராவுத்தர் – 00971-50-5254499 -

@ இல்யாஸ் பாய் – 00971-50-5494737 -

@ ரஷ்னுதீன்

@ தாயக சென்றிருக்கும் பக்கர்

மற்றும் தமுமுகவின் ஆதரவாளர்கள்.





செய்தி தொகுப்பு முத்துப்பேட்டை முகைதீன்.

நோன்பு கஞ்சி சண்டையில் மூவரை சுட்டுக்கொன்ற த.த.ஜ வினர்!

நமது திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி என்ற ஊரில் நேற்று .5.10.2010 நோன்பு கஞ்சி தொடர்பாக த.த.ஜ.வினருக்கும் சுன்னத் ஜமாஅத் பள்ளியை செர்ந்த்வர்களுக்க்ம் ஏற்பட்ட மோதலில் த.த.ஜ.வை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்தனர்..பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் நடை பெற்றது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.காவல் துறை தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்.