திங்கள், 21 ஜூன், 2010

சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் பேரா.ஜவாஹில்லாஹ் வேண்டுகோள்.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் வாயிலாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோவையில் பேட்டி...

பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளை பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்தார்.அதே போல் 2008 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது தமிழக அரசு. ஆனால் அதில் முஸ்லிம் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.





இந்நிலையில் தமிழக சிறையில் கடந்த 13 ஆண்டுகளாக துயரங்களை அனுபவவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் வலுவாக நிலவுகின்ற இத்தருணத்தில் எதிர் வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.அதோ போல் இந்த செம்மொழி மாநாட்டியில் மேலும் ஒரு கோரிக்கை. கணினியில் யுனிகோட் தமிழ் எழுத்துருவை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்க வேண்டும்.





சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியில் ஆங்கிலம் மடடும் பயன்பாட்டியில் இருந்தது. தமிழ்மொழியை இணையத்தில் படிக்க முடியாதபடி பல விதமான தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் அச் சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்ட தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த உமர் தம்பி, அனைத்துக் கணினிகளிலும் பயன்படுத்தவதற்கு ஏற்ற பொதுவான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். இதற்கு யுனிகோட் (ஒருங்குறி) எழுத்துரு என்ற பெயர். இப்போது அந்த எழுத்துகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆயிரக்கணக்கான தமிழ் இணைதளங்கள் யுனிகோட் எமுத்துருக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.





இணையதளங்கள் எப்படி எல்லாம் தமிழை வளர்க்கின்றன என்பது குறித்து விவாதிப்பதற்காக உலகத் செம்மொழி இணைய மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டில் கணினித் தமிழை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டுக்கும் கணினித் தமிழ் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது யுனிகோட் தமிழ் எழுத்துருக்கள் தான்.




இந்த எழுத்துருவை உருவாக்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உமர் தம்பி நினைத்திருந்தால், தனது கண்டுபிடிப்பை வணிகரீதியாக பயன்படுத்தி இருக்கும் முடியும். ஆனால், அவர்கள் அவர் அவ்விதம் செய்யாமல், தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் யுனிகோட் தொழில் நுட்பத்தை சமுதாயத்துக்கு இலவசமாக வழங்கினர். கணினி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் தற்போது உயிருடன் இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு உரிய கெளரவம் செய்யப்பட வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம்.செம்மொழி தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார். தமுமுக மாநில தலைவர் ஜவாருஹிருல்லாஹ் அவர்கள்.

மாலை 7 மணியளவில் கோவை கோட்டை மேடு இக்பால் திடலில் மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாக, தமுமுக மாநில தலைவர் போராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள், விடுதலை கோரிக்கை என்ற தலைப்பிலும், தமுமுக மாநில பொது செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள், கோவை முஸ்லிம்கள் நேற்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமுமுக மேலாண்மை குழு உறுப்பினர் குணங்குடி அனிபா அவர்கள், விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், மற்றும் தமுமுக மாநில செயலாளர் இ.உம்மர் அவர்கள், தமுமுக மாநில துணைச் செயலாளர்கள், கோவை சாதிக், கோவை சைய்யது, கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர், டி.எம்.எஸ். அப்பாஸ், மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள், அப்பாஸ், ஷாஜகான், அதுபோல் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அகமது கபீர், பர்கத்துல்லாஹ், மமக நகர தலைவர் ரபிக், மற்றும் ஜபார், கவிஞர் ஹக், அக்பர் அலி, திருப்பூர் மாவட்ட தமுமுக தலைவர் யுசுப், ஊட்டி மாவட்ட தமுமுக தலைவர் சமது, ஈரோடு மாவட்ட தமுமுக தலைவர் பாருக், திருப்பூா மாவட்ட மமக தலைவர் ஹாலித்தீன், மற்றும் கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஊட்டி,உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,ஆகிய இடங்களில் இருந்து தமுமுக, மமக, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், இதில் 700க்கும் மேற்பட்ட பெண் உட்பட 3500 பேர்கள் கலந்து கொண்டார்கள்.


கோட்டை மேடு பகுதிகள் மாநாடு போல் காட்சி அளிதத்து. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பொதுகூட்டம் நடந்த இடம் இக்பால் திடல் 13 ஆண்டு காலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, சமுதாய அமைப்புகளுக்கோ, பொது கூட்டம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு பிறகு இதில் கடைசி பொதுகூட்டம் 1997 ஆம் ஆண்டு கோவையில் 19 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்ட போது முஸ்லிம் வணிகம் செய்யும் கடைகள் ஷோபா துணிகடை உட்பட பல முண்னணி நிறுவனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டது. இதில் பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக தமுமுக பல இடங்களில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது.

அப்போது இந்த இக்பால் திடலில் வைத்துதான் நல உதவிகள் வழங்கிய போது தான் அன்று கோவையில் குண்டு வெடித்தது. அன்று முதல் யாருக்கும் பொதுகூட்டம் அனுமதி இல்லை. அதோ தமுமுக 13 ஆண்டு பிறகு பொதுகூட்டத்திற்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இழந்த உரிமையை மீண்டும் மீட்போம் என்ற உரையுடன் பொதுகூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: புகைப்படம், கோவை தங்கப்பா

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    கோவை சைய்யது அவர்கள் தொலைபேசி எண் வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    கோவை சைய்யது அவர்கள் தொலைபேசி எண் வேண்டும்

    பதிலளிநீக்கு