ஞாயிறு, 6 ஜூன், 2010


கூத்தாநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமுமுக - கைது

கூத்தாநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமுமுக சார்பில் மறியலில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து லட்சுமாங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழத்தின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குதுபுதீன் தலைமை தாங்கினார்.இதில் நகர தலைவர் நெய்னா முகம்மது, செயலாளர் ஜகபர் சாதிக், பொருளாளர் அன்சாரி, மாவட்ட செயர்குழு உறுப்பினர் எம்.எம்.ஜகபர் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ஏற நடராஜன் சப்-இன்ஸ்பெக்ட்டர் ஆனந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தமுமுகவினரை கைது செய்தனர்.

இந்த போராட்டத்தால் திருவாரூர் - மன்னார்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நன்றி - தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக