திங்கள், 14 ஜூன், 2010

இராமநாதபுரத்தில் த.மு.மு.க சார்பில் கல்வி உதவி


ராமநாதபுரம்: ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவ மாணவியர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா கல்வி உதவிகளை வழங்கினார்.
ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் செயலாளர் பரக்கத் துல்லா, செயலாளர் அப்துல் ரஹ்மான், உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக