புதன், 9 ஜூன், 2010

குணங்குடி ஹனீபா விடுதலைக்குப்பின் பங்குபெற்ற முதல் பொதுக்கூட்டம்.

தமுமுகவின் முன்னாள் தலைவர் குணங்குடி ஹனீபா விடுதலையாகி பேசும் முதல் பொதுக்கூட்டம் வட சென்னை மாவட்டம் தங்கச்சாலையில் நடைபெற்றது.விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்

இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக குணங்குடி ஹனீபா அவர்கள் ஏற்புரையாற்றினர். இந்தப் பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக