வெள்ளி, 30 செப்டம்பர், 2011



அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்


ரத்த தானம், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ சேவைகள், கல்வி உதவிகள், வட்டியில்லா கடனுதவிகள் என எங்கேயும் எப்போதும் எல்லா சேவைகளையும் செய்து வரும்


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி க்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வீர்...


ஊழலை எதிர்ப்பதில் உறுதி திறமையான நிர்வாகம் முடிவெடுப்பதில் வேகம் எளிமையான அணுகுமுறை அடிக்கடி மக்கள் சந்திப்பு மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் வாய்ப்பு தாருங்கள்.


பேரூராட்சி தலைவருக்கு - சகோ.எஸ்.முஹம்மது மாலிக்


மூன்றாவது வார்டுக்கு - சகோ.வழக்கறிஞர்.எல். தீன் முஹம்மது


13 மூன்றாவது வார்டுக்கு - சகோ - எம்.நெய்னா முஹம்மது


7 வது வார்டுக்கு - சகோ.எஸ். ஜெஹபர் சாதிக்


16 வது வார்டுக்கு - சகோ. எம். முஹம்மது யூசுப்


வாக்களிப்போம் வெற்றி பெற செய்வோம்... எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே... வெற்றி மமக வேட்பாளர்களுக்கே...


-- முத்துப்பேட்டை முகைதீன்

வியாழன், 29 செப்டம்பர், 2011

அன்புச் சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...



முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சகோதரர்.எஸ்.முஹம்மது மாலிக் {மாஷா மாலிக்} அவர்கள் போட்டியிடுவார்கள்....


3 வது வார்டுக்கு சகோ.வழக்கறிஞர்.எல்.தீன் முஹம்மது அவர்கள் போட்டியிடுவார்கள்.


13 வது வார்டுக்கு சகோ.எம்.நெய்னா முஹம்மது அவர்கள் போட்டியிடுவார்கள்.


7 வது வார்டுக்கு சகோ.எஸ்.ஜெஹபர் சாதிக் அவர்கள் போட்டியிடுவார்கள்.


அன்புச் சகோதரர்களே சமுதாயத்திற்காக அன்றாடம் உழைத்து கொண்டிருக்கும் சமுதாய போராளிகள் களத்தில் இறங்கியுள்ளனர். உங்களுடைய பொன்னான வாக்குகளை மமக வேட்பாளர்களுக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.


-- முத்துப்பேட்டை முகைதீன்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ம.ம.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

வேலூர் மேற்கு
வேலூர் கிழக்கு


விழுப்புரம் தெற்கு



விழுப்புரம் வடக்கு


கடலூர் தெற்கு


கடலூர் வடக்கு


சேலம்


நாகை தெற்கு

நாகை வடக்கு

நாமக்கல் மாவட்டம்

நீலகிரி

முத்துப்பேட்டை பேரூராட்சி

அதிகமான முஸ்லிம்களை உள்ளடக்கிய முத்துப்பேட்டை, பேரூராட்சி என்ற அந்தஸ்த்தோடு இந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கின்றது. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பேரூராட்சி மன்றத் தலைவர்களாய் பவணிவந்தவர்களெல்லாம் ஒரு சிலரை தவிற தன்னை வழர்த்துக்கொண்ட அளவிற்கு முத்துப்பேட்டையின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. ஆகவேதான் நகராட்சி அந்தஸ்து பெரும் தகுதி முத்துப்பேட்டைக்கு இருந்தும் இன்று வரை பேரூராட்சியாகவே இயங்கி வருகின்றது. நகரிலும் சொல்லத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் முத்துப்பேட்டை அடையவில்லை. காரணம் எந்த பேரூராட்சி தலைவரும் ஊரின் நலனை பற்றி சிந்திக்கவில்லை என்பதை மக்களின் கருத்து.

அந்த அடிப்படையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காகவே உழைக்கும் ஆற்றல் உடையவர்களை உங்களுடைய வாக்குகள் மூலம் தேர்ந்தெடுங்கள். முத்துப்பேட்டை முன்னற்றம்கான நாமே அடையாளம் கண்டு நல்லவர்களை தேர்ந்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ். எதிர்வரும் 5 வருடத்தை ஊழல்வாதிகளிடமும், ஊரை அடித்து தன் உழையில் போடு நினைக்கும் வர்கத்திடமும் முத்துப்பேட்டையை ஒப்படைத்துவிட வேண்டாம். மக்களே சிந்திப்பீர்…! செயல்படுவீர்...!! நல்லவர்களை தேர்ந்தெடுப்பீர்......

மனிதநேய மக்கள் கட்சியும் முத்துப்பேட்டையில் தனது வேட்பாளர்களை களம் இறக்குகின்றது. ஆற்றல் மிக்க தொண்டர்களும். தொலைநோக்கு பார்வை கொண்ட நல் சிந்தனையாளர்களும், மனிதநேய பண்பாளர்களும், மக்களுக்காக தினம் தினம் உழைக்கக்கூடியவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் மூலம் களம் இறங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-- முத்துப்பேட்டை முகைதீன்.
ம.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு மற்றும் பரிந்துரை மனுக்கள் செய்திருந்தனர்.

கடந்த வாரம் சென்னை, ஈரோடு, ஓசூர், திருவாரூர், மதுரை, நெல்லை என ஆறு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்ப வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் நடைபெற்றது.


அதன்படி இறுதிகட்ட பரிசீலனை செப்.26 அன்றும், செப்.27 அன்று நடைபெற்று வருகிறது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, எம். தமிமுன் அன்சாரி, ஜே.எஸ். ரிஃபாயி, குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் கொண்ட குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.


தியாகம், நேர்மை, மக்கள் செல்வாக்கு, நிர்வாகத் திறன், ஆரம்பகால சிறை தியாகங்கள் ஆகியவை முன்னனி அளவுகோல்களாக கணக்கில் கொண்டு இப்பட்டியல் தயாராகியுள்ளது.


புதியவர்களாக இருந்தால் வேறு யாரும் போட்டியிடாமல் ஒருமனதாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் மனுக்களும் தகுதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.


காஞ்சி தெற்கு
வட சென்னை



தென் சென்னை காஞ்சி வடக்கு




திருவள்ளூவர் கிழக்கு




திருவள்ளூவர் மேற்கு



செவ்வாய், 13 செப்டம்பர், 2011

அதிரையில் 95வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் 11.09.2011 அன்று மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா நடைபெற்றது. நகர த.மு.மு.க தலைவர் உமர் தம்பி தலைமைஏற்க சகோதரர் யி.கலந்தர் (முன்னாள் மாவட்ட செயலாளர் ம.ம.க) தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவில் த.மு.மு.க பொதுச்செயலாளர் ஷி.ஹைதர் அலி, ம.ம.க துணை பொதுச்செயலாளர் வி.தமிமுன் அன்சாரி, த.மு.மு.க மாநிலச் செயலாளர் பேரா. யி.ஹாஜா கனி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். அத்துடன் அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இறுதியாக, த.மு.மு.க நகர செயலாளர் வி.பி.தையூப் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.




செப்டம்பர்'11 (2011) அதிரையின் நிகழ்வு துளிகள்.


1. காலை 07:00 மணிக்கு ஆரம்பித்த திருமண வைபவங்கள் மாலை 06:00 மணி வரையிலும் நீடித்தது, அதிரையில் நேற்று மட்டும் சுமார் 10 திருமணங்களுக்கு மேலாக நடைப்பெற்றது.



2. பகல் 01:00 மணிக்கு கல்யாண வீடுகளிள் விருந்து உபசரிப்புகள் நடந்தது.



3. காலையில் கடுமையான வெயில் சுட்டெரித்தது, மாலை 05.00 மணியளவில் திடீரென்று அழகான மழைப்பொழிவு இருந்தது. இது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அரை மணி நேரத்திற்கு குறையாமல் பெய்த இந்த திடீர் மழை மேலும் நீடித்து த.மு.மு.க. வின் விழாவிற்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்களிடையே இருந்தது. அல்ஹம்துல்லில்லாஹ், அவ்வாறு இல்லாமல் அல்லாஹ் பாதுக்காத்தான்.



4. அவ்வப்பொழுது த.மு.மு.க. வின் விழாவை பற்றிய அறிவிப்பு வாகனம் ஊரில் உலா வந்த வண்ணம் இருந்தது.



5. மாலை 06:00 மணிக்குள் ஊரின் அனைத்து திருமண வைபவங்களும் முடிந்து, த.மு.மு.க. வின் விழாவிற்காக அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.



6. மாலை 06.29 மஹ்ரிப் தொழுகைக்கான பாங்கோசை ஒலித்தது, அல்-அமீன் பள்ளியில் (பஸ்ஸ்டாண்ட் பள்ளி) மஹ்ரிப் தொழுகையை நிறைவேற்ற பெரும்பாலனோர் திரண்டமையால் பள்ளி நிறைந்து வழிந்தது. இப்பள்ளி தக்க இடத்தில் அமைந்த முக்கியத்துவத்தை பலரும் பெசிக்கொண்டதையும் கேட்க முடிந்தது.



7. த.மு.மு.க வின் விழா அரங்கம் பஸ்-ஸ்டாண்டின் மையப்பகுதியில்(அல் அமீன் பள்ளி அருகே) வட-தெற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டு இருந்தது. கல்வி தந்தை M.K.N காதிர் முகைதீன் அப்பா நினைவரங்கம் என, விழா அரங்கம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.



8. மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு அவசர கால ஊர்தி விழா மேடைக்கு அருகே கொண்டு வரப்பட்டது.



9. விழாவினை நேரலைச்செய்வதற்கான பணிகளில் அதிரை பிபிசி மற்றும் மீடியா மேஜிக் தொழில்நுட்ப நிபுணர்கள் த.மு.மு.க வின் ஒளிப்பதிவாளருடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.



10. மாலை 07:00 மணிமுதல் விழாவிற்காக அழைக்கப்பட்ட கிராம தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மாற்றுமத நண்பர்கள், பிற கட்சிகளின் நிர்வாகிகள், மருத்துவர்கள் அனைவர்களும் விழா மேடைக்கு வந்த வண்ணம் இருந்தார்கள், அவர்களை முறையாக வரவேற்று இருக்கைகளில் அமர்த்தும் பணியில் த.மு.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டனர்.



11. மாலை 07:15 மணிக்கெல்லாம் போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் பொதுமக்களால் நிரப்பப்பட்டு இருந்தன.



12. பாதுகாப்பு பணியை அதிராம்பட்டினம் காவல்துறை சிறப்பாக மேற்கொண்டது.



13. போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் காவல்துறையும் த.மு.மு.க தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டர்ர்கள்.



14. பிரைட் எலக்ட்ரிகல்ஸ் ஜனாப் மீரா முகைதீன் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறை மாதிரி கப்பல் அரங்கின் வலது புறத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தது வருகை தந்த விருந்தினர்கள் அனைவரையும் கவர்ந்தது.



15. சரியாக மாலை 07:22 மணிக்கு மவ்லவி A.H அப்துர் ரசீது ரஹ்மானி அவர்கள் கிராத் ஓத, அதிரை நகர த.மு.மு.க தலைவர் ஜனாப் B. உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் தலைமையில் விழா துவங்கியது.முன்னதாக கிழக்கு கடற்கரைச்சாலை (அண்ணா சிலை அருகே) யில் த.மு.மு.க வின் கொடியை மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.



வரவேற்புரை M.O. செய்யது முகம்மது புஹாரி (நகர பொருளாளர் த.மு.மு.க) நிகழ்த்தினார்கள்.இவ்விழாவில் த.மு.மு.க வின் தலைமை கழக நிர்வாகிகள் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ்(தலைவர் த.மு.மு.க, மற்றும் ம.ம.க), சகோதரர் S.ஹைதர் அலி(மாநில பொதுச்செயலாளர் த.மு.மு.க), சகோதரர் M.தமிமுன் அன்சாரி(மாநில துணை பொதுச்செயலாளர் ம.ம.க), சகோதரர் J.ஹாஜா கனி(மாநில செயலாளர் த.மு.மு.க) ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அவசரகால ஊர்தியை(ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்பணிப்பு செய்தார்கள். இவ்விழாவினை சகோதரர் J.கலந்தர்(முன்னால் மாவட்ட செயலாளர் ம.ம.க)அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இறுதியாக நன்றியுரை M.H. தையூப்(நகர செயலாளர் த.மு.மு.க) அவர்கள் நவிழ விழா இனிதே நிறைவுற்றது,



அல்ஹம்துலில்லாஹ்.இந்நிகழ்சிகள் அனைத்தும் அதிரைபிபிசியிலும்(http://adiraibbc.blogspot.com), த.மு.மு.க வின் அதிகாரப்பூர்வ இணைய தளமான http://tmmk.in லும் http://adiraitmmk.blogspot.com/ நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

உயிர் காக்கும் உன்னத சேவைகள்

அவசர கால மருத்துவ சேவையினை எந்த விதமான மத இன சாதி பாகுபாடின்றி பற்பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் செம்மையாக செய்து வருகின்றன என்பதினை நாம் அறிவோம் அந்த வரிசையில் முத்துப்பேட்டையில், அவசர கால மருத்துவ சேவையினை பல ஆண்டுகளாக செய்து வருகிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.



அவர்களது சார்பில் இயங்கும் அவசர கால ஊர்தியானது (ஆம்புலன்ஸ்) எந்த விதமான பாகுபாடின்றி அனைத்து மக்களுக்காக வேண்டி தன்னார்வ சேவையினை செய்து வருகிறது. ஏழை எளியோர்களுக்கு இலவச சேவையினையும், அதுபோல் சாலை விபத்துகளில் அடிபட்டவர்களை இலவசமாக மருத்துவ மனைக்கு எடுத்து செல்லுவதற்கும் இந்த அவசர கால ஊர்தியானது செயல்படுகிறது.


தற்போது முத்துப்பேட்டையில் உள்ள அவசர கால ஊர்தியின் ஓட்டுனராக ஜனாப். பஷீர் அஹமது (எ) செல்லக்கனி என்பவர் செயல்படுகிறார். ஏதேனும் அவசர நிலை ஏற்படும் போது இவருக்கு உதவியாக இஸ்லாமிய சகோதரர்களும் உறு துணையாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். விபத்துக்கள், இரத்த தான சேவைகள், மருத்துவ சேவைகள், அவசர கால சேவைகள் போன்ற பல சேவைகளையும் இவர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். இவர்களின் சேவைகள் சிலவற்றை உங்களின் பார்வைக்கு.. கடந்த இரண்டு மாதங்களாக முத்துப்பேட்டையில் நடந்தவைகள்: பாமணி ஆற்று பாலத்தில் நடத்த விபத்து ஒன்றில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் மரணித்தார்கள், மற்றொரு சம்பவம் ஆலங்காட்டில், வீட்டில் நான்கு நாட்களாக இறந்து கிடந்த சடலத்தினையும் நமது சகோதரர்களின் உதவியால் சடலங்களை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றார்கள்.


அவசர கால ஊர்தியின் 24 மணி நேர மனித நேய மிக்க தன்னார்வ சேவையானது மேன்மேலும் வளர வேண்டி நம்முடைய இணையத்தளம் அவர்களை பாராட்டுகிறதுமுத்துப்பேட்டையில் இவர்கள் செய்து வரும் சேவையானது வெளி உலகிற்கு தெரிவதில்லை என்பது மிகவும் வருத்தக்குரியது தான்உங்களின் அவசர தேவைக்கு அணுகவும் : 9942716666 (செல்லக்கனி)


செய்தி : அபு ஆஃப்ரின்


வியாழன், 8 செப்டம்பர், 2011

டெல்லி குன்ன்டு வெடிப்பு :- உண்மை குற்றவாளிகளை கைது செய். நாட்டு மக்கள் முன் தூக்கிலிடு.