புதன், 22 செப்டம்பர், 2010

கூத்தாநல்லூர் முளிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவாக்களின் போராட்ட அழைப்பு !

கடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பகுதிக்குள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் முதல் முறையாக அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி கலவரபீதியை ஏற்படுத்தினர். கூத்தாநல்லூரில் முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் தொப்புள்குடி உறவாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வரும் தருணத்தில் இந்த ஹிந்துத்துவாக்களின் முஸ்லிம் விரோத கோஷங்களினால் கொதித்தெழுந்த முஸ்லிம்கள் (அனைத்து இயக்கங்கள் உள்பட)
அமைதியான முறையில் ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்டு எந்த தவறான கோசங்களையும் எழுப்பாமல் லட்ச்சுமாங்குடி முக்கத்தில் சாலைமறியல் செய்து கலவர நோக்கத்தோடும் தவறான கோசங்கள் எழுப்பியதை கண்டித்தும் அதற்கு அனுமதி வழங்கி துணைபோன கூத்தாநல்லூர் சரக காவல்துறையையும் கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதில் ஏதோ ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் களத்தில் இறங்கிவிட்டனர் அந்த சாலை மறியலின் போது ஹிந்துக்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதாகவும் அதை தமுமுகவினரும், தவ்ஹீத் ஜமாத்தினரும் அரங்கேற்றியதாகவும் பொய் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி ஹிந்துக்களை ஒன்று திரட்டுகின்றனர். இந்த தருணத்தில் கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் அமைதிகாத்து அந்த பிரச்சனைகளை சட்டரீதியில் கொண்டு செல்வது இன்றைய தலையாய கடமையாக இருகின்றது

முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவாக்களின் பிரச்சார நோட்டீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக