செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நாளில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துக...! தமிழக அரசுக்கு தமுமுக கடிதம்



பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி), சென்னை மாநகர காவல் ஆணையாளர் (போலீஸ் கமிஷனர்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில், ‘‘தீர்ப்பு வெளியாகும் நாளிலோ அதை ஒட்டியோ மதவெறியர்களும், சமூக விரோதிகளும், பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட முஸ்லிம் நிறுவனங்களையும், முஸ்லிம்களையும் தாக்கலாம் என அஞ்சுகிறோம். எனவே காவல்துறை, அனைத்து வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தமுமுக பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக