வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அஜ்மான் மண்டல முமுக நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அங்கமான அஜ்மானில் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 02-09-2010 வியாழன் அன்று மாலை 5 மணிக்கு சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமீரக துணை தலைவர் சகோ.ஹுசைன் பாஷா அவர்கள் தலைமை வகிக்க ஷார்ஜா மண்டலத்தின் துணை செயலாளர் சகோ.பந்தல் குடி சம்சுதீன் அவர்கள் அண்ணலார் நபிகள் நாயகத்தின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சாரம்சமாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சகோ.எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தாயகத்தில் தமுமுக செய்துவரும் சமுதாய பணிகளையும், தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அரங்கில் ஏற்படுத்திவரும் மாற்றங்களையும், மனிதநேய மக்கள் கட்சி உருவாகிய வரலாற்று நிகழ்வுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான சகோதரர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

இதில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். மக்ரிப் தொழுகைக்கு பின் வருகைதந்த அத்தனை சகோதர்களும் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகபடித்திகொண்டு மமகவின் அரசியல் சம்மந்தமான முடிவுகள் மற்றும் கூட்டணி பற்றிய கருத்துகளை தாங்கி தங்களது கேள்விகளை சகோதரர் அன்சாரி அவர்களிடம் கேட்க மிக தெளிவாகவும், சிந்தனைகளை தூண்டும் விதமாகவும் தமிழக அரசியல் களம் பற்றி சகோதர்களால் கேட்க பற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.
இறுதியாக அஜ்மான் மண்டல தலைவர் சகோதரர்.குடவாசல் செய்யது ஷஹாபுதீன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திதந்த ஏக இறைவனுக்கும் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி கூறினார்.
வந்திருந்த அனைத்து சகோதரர்களும் சமுதாய அரசியல் எழுச்சிக்காக போராடும் மமக அரசியல் அரங்கில் வெற்றிபெற ஏக இறைவனிடம் பிரார்தித்தவர்களாக கலைந்து சென்றனர். எல்லா புகழும் ஏக இறைவனுக்கே!





களத்தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்
புகைப்படங்கள் - ஹுசைன் பாஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக