திங்கள், 25 நவம்பர், 2013

முத்துப்பேட்டையில் கூடிய நகர நிர்வாகக் குழு

முத்துப்பேட்டையில் கூடிய நகர நிர்வாகக் குழு


டிசம்பர் 6 மாவட்ட தலைநகரான திருவாரூரில் நடைபெற இருக்கும் மக்கள் திரள் ஆர்பாட்டம் குறித்து பணிகளை முடுக்கிவிடுவதற்காக முத்துப்பேட்டை நகர நிர்வாகக் குழு இன்று இஷா தொழுகைக்குப்பிறகு ம.ம.க நகர ஆசாத்நகர் அலுவலகத்தில் கூட்டப்பட்டது. நகர தலைவர் நெய்னா முஹம்மது அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது மாலிக், ம.ம.க நகர செயலாளர் வழகறிஞர் தீன் முஹம்மது, ஒன்றிய செயலாளர் ஜெஹபர் சாதிக், தமுமுக நகர செயலாளர் பைசல், தமுமுக ம.ம.க நகர பொருளாளர் தாவூது ஷா, ம.ம.க நகர துணைச்செயலாளர் நபில் அஹமது, மாணவர் இந்தியா செயலாளர் பவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்குகொண்டனர். 


விளம்பரங்கள் செய்வது, ஆட்டோ விளம்பரம் மூலம் தெருக்களில் பிரச்சாரங்களை செய்வது, டிஜிட்டல் போர்டுகள் வைப்பது, மக்களிடம் பணிகளுக்கான பொருளதார உதவிகள் கோருவது என டிசம்பர் 6 க்கான பணிகளை அதிவேகமாக முடுக்கிவிடுவதாக தீர்மாணிக்கப்பட்டது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக