ஞாயிறு, 17 நவம்பர், 2013

முத்துப்பேட்டையில் வட மாநிலத்தவறுக்கு உதவிய நல்லுள்ளங்கள்

முத்துப்பேட்டையில் வட மாநிலத்தவறுக்கு உதவிய நல்லுள்ளங்கள்


மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷஹினாகான் என்பவரிடத்தில் முத்துப்பேட்டை என்று கூறி அப்பாஸ் அலி என்பவர் விசா எடுத்துகொடுப்பதாக பணம் பறித்துள்ளார். அவரை நம்பி திருச்சி வருகைதந்த ஷஹினாகான் குடும்பத்தினரோடு பணத்தை பறிகொடுத்துவிட்டு செய்வது அறியாது திணறிய நிலையில் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். ஏமாற்றிய போலி முத்துப்பேட்டை என்று கூறி பொய்யாக முகவரி கொடுத்தருந்ததால் காவலர்களும் முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

முத்துப்பேட்டை வருகை தந்தவுடன்தான் அது போலியான முகவரி என தெரிந்துள்ளது. பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, பசிக்கு உணவு அருந்தகூட பணம் இல்லாத நிலையில் தனது குடும்பத்துடன் தவித்துகொண்டிருந்ததை அறிந்த ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது உடனே தங்களுக்கு அறிந்தவர்களான கவிஞர் பஷீர் அஹமது அவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். அவரும் தேனா சீனா மற்றும் சிலரும் காவல்நிலையம் வந்துள்ளனர் பின்னர் 500, 1000  என அவர்களே போட்டு தெரிந்தவர்களிடமும் பெற்று அவர் மத்திய பிரதேசம் செல்வதற்கான செலவு தொகையையும் மற்றும் இதர செலவுகளுக்கும் என மொத்தம் ரூபாய் 5200 கொடுத்து உதவியுள்ளனர். இதற்கான அனைத்து உதவிகளிலும் தமுமுக நகர செயலாளர் பைசல் அவர்களும் துரிதமாக செயல்பட்டுள்ளார்.


உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் நற் கூலிகளை வழங்குவானாக....

ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது ரூ 1000
ஜாஹிர் – ரூ 1000
தவ்ஹீத் ஜமாத் முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி ரூ 500
தேனா சீனா – ரூ 1000
முஜிபுர் – ரூ 1000
கவிஞர் பஷீர் அஹமது – ரூ 500
மைதீன் மாமா – ரூ 200

என மொத்தம் ரூபாய் 5200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக