ஞாயிறு, 17 நவம்பர், 2013

முத்துப்பேட்டையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள்


முத்துப்பேட்டையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள்


திருவாரூர் மாவட்ட தலைவர் ஹலிலுர் ரஹ்மான் மற்றும் துணைத் தலைவர் எரவாஞ்சேரி நஜிபுதீன் ஆகியோர் முத்துப்பேட்டைக்கு நேற்று 16-11-2013 மாலை 6.30 மணிக்கு வருகை தந்தனர். நகர நிர்வாகிகள் மற்றும் மாணவரணியினரை சந்தித்த பின் டிசம்பர் 6 குறித்து விளக்கி பேசினார்கள்.

டிசம்பர் 6 அன்று மாலை 4 மணிக்கு திருவாரூரில் நடைபெற இருக்கும் மக்கள் திரள் ஆர்பாட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டும் பணியில் ஈடுபடுவது, ஆட்டோ விளம்பரங்கள் செய்வது, ப்ளக்ஸ் பேணர்கள் வைப்பது, சுவர் விளம்பரங்கள் செய்வது, வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நிதி வசூல் செய்வது, வாகனங்கள் ஏற்பாடு செய்வது போன்றவைகள் குறித்து சொல்லப்பட்டன.


இந்நிகழ்வில் தமுமுக ம.ம.க ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது, தமுமுக நகர செயலாளர் பைசல், ம.ம.க இணை செயலாளர் நபீல், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் முஹம்மது யூசுப் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக