ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஏக இறைவனை போற்றி புகழ்ந்தவனாக...!

துபாயில் பல்வேறு கிளைகள் மற்றும் மாவட்ட தமுமுகவின் நோன்பு திறக்கும் நிகழ்சிகளின் தொகுப்பு

துபாயில் தஞ்சை மாவட்ட தமுமுக சகோதரர்களின் இப்தார் நிகழ்...

இறைவனின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமைத் தாங்கினர்.

சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இறுதியில் கழக அடலேறுகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

துபாய் வாழ் லால்பேட்டை தமுமுக சகோதர்களின் இப்தார் விருந்து...

இறைவனின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வாழும் லால்பேட்டை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. அப்துல் காதர் மற்றும் துனைத் தலைவர் சகோ. மொய்தின் அவர்கள் தலைமைத் தாங்கினர்.

சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்

இறுதியில் கழக அடலேறுகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் துபை வாழ் லால்பேட்டை சகோதர்களால் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக