செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பில் ரமலான் சிறப்பு மாநாடு

முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பில் ரமலான் சிறப்பு மாநாடு ஷார்ஜா (- 13-08-2010 - ) பிலிப்பெய்னி ஸ்கூல் ஆடிடோரியத்தில் முமுக வின் அமீரக துணை பொது செயலாளர் சகோதரர். ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் ஷார்ஜா மண்டல செயலாளர் சகோ.தோப்புத்துறை இப்ராஹீம் அவர்கள் கிராத் ஓதி துவங்கிவைக்க அதனை தொடர்ந்து மக்கள் தொடர்பாளர் சகோ.திருப்பூண்டி ஒ.எஸ்.இப்ராஹீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மண்டல தலைவர் சகோ.நெல்லிக்குப்பம் இக்பால் அவர்களும், மண்டல பொருளாளர் சகோ.தோப்புத்துறை அபுல்ஹசன் அவர்களும் மண்டல துணை தலைவர் சகோ.பூலாங்கால் சிராஜ் அவர்களும் முன்னிலை வகிக்க முமுக ஆலோசனை குழு உறுப்பினர் சகோ.நாசர் அலிகான் அவர்கள் சிறிது நேரம் உரைநிகழ்த்தினார். அதனை தொடர்ந்து முமுக அமீரக தலைவர் சகோ.அதிரை அப்துல் ஹாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் தலைமை கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தபா அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பில் அருமையான ஓர் உரையை நிகழ்த்த அதன் தொடர்ச்சியாக தமுமுக வின் மாநில செயற்குழு உறுப்பினரும்,மக்கள் உரிமை ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான அண்ணன் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தாயகமும் மமக சந்தித்துவரும் சவால்களும் என்ற தலைப்பில் எழுச்சியுரை நிகழ்த்தி அதனை தொடர்ந்து பாரவையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தனக்கே உரியபாணியில் அருமையாக பதில் அளித்தார்கள்.

இறுதியாக மண்டல துணை செயலாளர் சகோ.பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த துவாவுடன் இனிதே நிறைவுற்றது. இந்த ரமலான் சிறப்பு மாநாட்டில் ஏராளமான சகோதர்கள் கலந்துகொண்டு இந்த புனித ரமலான் மாதத்தில் தங்களது நேரங்களை சரியான பாதையை நோக்கி செலவலித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

வருகைதந்த அத்துணை சகோதரர்களுக்கும் நோன்பு திறக்கும் நிகழ்சி ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

--- முத்துப்பேட்டை முகைதீன் ---





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக