ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கோட்டக்குப்பத்தில் தீயினால் பாதிக்கப் பட்டோருக்கு உதவி


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் ஐயனார்கோயில்மேட்டில் கடந்த 4.10.2009 அன்று நடந்த தீ விபத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி 16.10.2009 அன்று தமுமுக மற்றும் ம.ம.க.வின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஜே. சம்சுதீன் தலைமை தாங்கினார். மமக நகர செயலாளர் ஏ. தாஜுதீன் முன்னிலை வகித்தார். அமீர் அம்ஜா ராபீயாபீ, ஜெய்னுல் ஆபிதீன் சௌதாகனி மற்றும் மஸ்ஜிதே முத்தகீன் பள்ளி முத்தவல்லி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 40,000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. தமுமுக மற்றும் ம.ம.க. மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக