வியாழன், 2 ஆகஸ்ட், 2012

திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம்





திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம் 31-07-2012 அன்று பொதக்குடியில் தமுமுக ம.ம.க மாவட்ட தலைவர் அண்ணன்.கே.ஹெச். நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராய் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம்.எம்.தாஜூதீன் அவர்கள் கலந்துகொண்டார்கள். இந் நிர்வாககுழு கூட்டத்தில் தமுமுக வின் மாவட்ட செயலாளர் பொதக்குடி குத்புதின், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் மன்னை அஹமது, ம.ம.க மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை மாலிக், ம.ம.க மாவட்ட துணைசெயலாளர் திருவாரூர் பஜ்லுல் ஹக் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக