செவ்வாய், 4 அக்டோபர், 2011



துபாய் அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் பேரூராட்சி தேர்தலில் ம.ம.க வுக்கு ஆதரவு


ஒப்பற்ற இறைவனின் திருப்பெயரால்...


ஷார்ஜா மு.மு.க மர்கஸில் முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற தலைப்பில் முத்தப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மேலே உள்ள தலைப்பின் கீழ் அணைத்து சகோதரர்களிடமும் கருத்துக்கேட்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. இதில் சமீபகாலமாக அரசியலில் எழுச்சிபெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய பணிகளையும், கடந்த கால சமூக பணி மற்றும் சமுதாய சேவைகளையும் கருத்தில் கொண்டதோடும், அதன் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் சகோ.முஹம்மது மாலிக் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் தன்னலமற்ற சமுதாய சேவைகளை பற்றியும் அலசி ஆராய்ந்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது முத்துப்பேட்டை சகோதரர்கள் ம.ம.க வேட்பாளர் சகோ.முஹம்மது மாலிக் அவர்களை ஆதரிப்பது என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை சகோதரர்கள் அணைவரும் நமது வேட்பாளர் சகோ.மாலிக் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறவைப்போம்.


- இவண். அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள்.


குறிப்பு – அமீரகத்தில் வாழும் நமது ஊர் சகோதரர்களை தொடர்புகொண்டும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் சகோ.மாலிக் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பது என்று ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


சகோதரர் மாலிக் அவர்கள் இறைவனின் மாபெரும் உதவியால் வெற்றி பெற எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்திப்போம்.


-- அமீரகத்திலிருந்து முத்துப்பேட்டை முகைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக