செவ்வாய், 12 அக்டோபர், 2010

முத்துப்பேட்டை தமுமுக வின் நகர பொதுக்குழு

முத்துப்பேட்டை தமுமுக வின் நகர பொதுக்குழுக் கூட்டம் 09/10/2010
அன்று சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப்பிறகு சரியாக 8 மணிக்கு ஆசாத் நகரில் உள்ள
அல்மஹா பெண்கள் மதரசாவில் தமுமுகவின் மாவட்ட தலைவர் (இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது) சகோதரர் நாச்சிகுளம் M.தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுகவின் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் முத்துப்பேட்டை நகரத்தை சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக நடத்தித்தந்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே!


தமுமுகவில் மூன்றாண்டுக்கு ஒருமுறை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் வைத்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வரிசையில் இந்த பொதுகுழுவில் நகர தமுமுக மற்றும் ம.ம.க பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாய பணிகளை அதிகப்படுத்துவதற்காகவும், இன்னும் துடிப்போடு கழகப்பணியாற்றுவதற்கும் முத்துப்பேட்டை நகர நிர்வாகத்தை இரண்டாக பிரித்து அசாத் நகரில் ஒரு புதிய கிளையை அமைத்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டு அந்த அடிப்படியில் நகர நிர்வாகத்தின் கீழ் அசாத் நகரில் தமுமுக புதிய கிளை உருவாக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கபட்டனர்.



தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:-

தமுமுகவின் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள்

தலைவர் : - சகோதரர் M.நெய்நா முகம்மது (தெற்குத் தெரு)
துணை தலைவர் : - சகோதரர் M.சித்திக் அஹமது (மரைக்காயர் தெரு)
செயலாளர் :- S.முகம்மது தாவுது (ஆஸாத் நகர்)
துணை செயலாளர் : - A. நசீர் அஹமது (மரைக்காயர் தெரு)
பொருளாளர் : - S.ஜெஹபர் சாதிக் (பட்டுக்கோட்டை ரோடு)
ஆகியோரும்
இளைஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸாத் நகர் புதிய நிர்வாகிகள் :-

தலைவர் :- Y.ஷபீர் அஹமது BBA.,
துணை தலைவர் :- சதாம் ஹுசைன் BBA.,
செயலாளர் : - பாருக் BCA.,
துணை செயலாளர் : - பைஷல் அஹமது BBA.,
பொருளாளர் : - தாஜுதீன் BBA.,

ஆகியோரும்
.ம.க வின் முத்துப்பேட்டை நகர நிர்வாகம் :-

நகர செயலாளர் : - சகோதரர் - முகம்மது யாசின்
தொழிற்சங்க செயலாளர் : - சகோதரர் மாணிக்கம்

ஆகியோர்கள் வந்திருந்த அணைவர்களாலும் ஏகமானதாக தேர்ந்தேடுக்கபட்டது.
இதில் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு அவர்களின் பணிகள் தொடர்ந்து நடைபெற ஏக இறைவனிடம் பிரார்தித்தவாறு கலைந்து சென்றனர்.

நாமும் புதிய நிர்வாகிகள் பனி சிறக்க கடல் கடந்து வாழ்த்துகிறோம். அவர்களது பனிசிறக்க பிரார்த்திக்கிறோம்.
-- செய்தி மற்றும் புகைப்படம்
வழக்கறிஞர் தீன் முகம்மது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக