செவ்வாய், 27 ஜூலை, 2010

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்.

இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்குஇடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும்.ஆனால், கற்ப்பிணிகளின்வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் தங்களது இருப்பைவெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.கடந்த ஜுலை 24 அன்றுதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதேகோரிக்கைக்காக மாநில தலைவர்பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின்ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்துஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்என்றும், வேகமாக வருமாறுஅதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்தாஜுதீன் வேகமாக ஹனீபாமருத்துவமனையை நோக்கி திருப்பினார்.
வரும் வழியில், பாஜகவினர்ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியைமெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.அப்போது காவல்துறையும் கூட்டத்தைவிலக்கி, ஆம்புலன்ஸ்செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜகதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனதுª த £ண்ட ர் களிட ம்ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும்யாருக்கும் இடையூறுஇல்லாமலும் ஹனீபாமருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார்.
அதற்குள் சுமார் 30 பேர் கொண்டபாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால்உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர்.டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியைதுவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்களின்அயோக்கியத்தனத்தை மறைக்க,ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளைபரப்பினர்.ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்முகாமிட்டு இருந்ததால், அவர்தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளைபோட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.
தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன்,ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்சாலை மறியலில் தமுமுகவினர்இறங்க, பிறகு வழக்கு தொடுத்துவிட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது.செய் தியறிந்து திருவாரூர்மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.
திருத்துறைப் பூண்டி நகரெங்கும்பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.இதே, ஆம்புலன்ஸை பலமுறைபாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டிமக்களுக்கு நன்கு தெரியும்.அப்போது கூட ஒரு இந்து சமுதாயகுடும்பத்துக்குத்தான் உதவ அந்தஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்குமூலை பேசப்பட்டது.காவல்துறை பாஜகவினரைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தைகண்டித்து, தமுமுகவினருக்குஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
அடுத்த நாள் மமக துணைப்பொதுச் செயலாளர் எம். தமிமுன்அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்குவந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர்அலுவலகம் நோக்கி கருப்புக்கொடிஊர்வலம் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்செயலாளர் ஹைதர் அலியிடமும்,மற்ற அதிகாரிகள் மமக துணைப்பொதுச்செயலாளர் எம். தமிமுன்அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்குவரும் தினத்தில் கருப்புக் கொடிஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,ஜுலை 30க்குள் குற்றவாளிகளைபிடிக்கிறோம் என்று கூறியதால்,ஜுலை 31 அன்று கருப்புக் கொடிஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈவு, இரக்கமற்ற பாஜகவன்முறை கும்பலின் செயல்பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரைதமிழகமெங்கும் கொந்தளிக்கவைத்துள்ளது.தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறைதனது கடமையை வாக்களித்தப்படிசெய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்பொறுப்பேற்க வேண்டும்.
காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்த வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீதுவிழுந்த தாக்குதல், எங்களின் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக